search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடும் குளிரிலும் உற்சாகம் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    மோயர் பாயிண்ட் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

    கடும் குளிரிலும் உற்சாகம் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
    • மழை ஓய்ந்த நிலையில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட வரும் இளம்ஜோடிகள் வருகை அதிகமாக உள்ளது. மோயர் சதுக்கம், பைன்மரக்காடு, குணா குகை, பசுமைப்பள்ளத்தாக்கு, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு குழாம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் குவிந்தனர். ஒரு சில வாரங்களுக்கு பின் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் சிறுகுறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அடுத்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×