search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கொடிவேரி அணைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து இருந்தனர்.
    • விற்பணை செய்யப்படும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகள வில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சனிக்கிழ மை மற்றும் ஞாயிற்றுக்கி ழமை என தொடர் விடுமுறை நாட்கள் வந்த தால் கொடிவேரி தடுப்ப ணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    கொடிவேரி அணைக்கு நேற்று சனிக்கிழமை என்ப தால் ஆயிர க்கணக்கான பொதுமக்கள் வந்து இருந்தனர்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தி னருடன் வந்தி ருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் இன்று கொடிவேரி எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது. குடும்ப த்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளி பகுதியில் அமர்ந்து சாப்பிட்ட னர்.

    மேலும் அங்கு விற்பணை செய்யப்ப டும் மீன்களையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    Next Story
    ×