search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    கோப்புப்படம்.

    கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஈரோடு:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் புனித வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தெடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் குளித்து குதூகளித்து செல்கிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்த காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கத்தில் இருந்த மக்கள் கொட்டும் தண்ணீரை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞ ர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதனால் இன்று கொடிவேரி எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்ப ட்டது.

    குடும்பத்துடன் கொடி வேரி வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செயய்ப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    Next Story
    ×