search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crime prevention awareness"

    • அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த போலீசார் வேண்டுகோள்
    • பழுதாகி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 21-வது வார்டில் போலீசார் சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் மற்றும் சாகுல் மொய்தீன் ஆகியோர் கூட்டத்தில் பேசும்போது, அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் பாதுகாவலுக்கு கூர்க்காக்களை நிய மிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    பின்னர் பொதுமக்கள் பேசும்போது எங்கள் பகுதியில் இரவு-பகல் நேரங்களில் மப்டி யில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், சாலையோரங்களில் பழுதாகி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை சரிசெய்ய வேண்டும், ஒரு வழிச்சாலையாக உள்ள மெயின் பஜாரை வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. மேலும் அங்கு இரு சக்கர வாகனங்கள் அதி கவேகத்தில் இயக்குகின்றனர்.

    அதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    ×