search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
    X

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

    • கூடலூா் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளனா்.

    ஊட்டி,

    கூடலூா் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. சட்டப்பேரவை கொறடா வும், முன்னாள் அமைச்ச ருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளனா். எனவே வருகிற பாராளுமன்ற தோ்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். அதைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தோ்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் தி.மு.க. அரசு மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களையும் தரவில்லை. ஆனால் 2 ஆண்டு சாதனைகள் என்ற பெயரில் தற்போது பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு செயல்படாத நிலையில் உள்ளது. இதை பொதுமக்கள் நன்கு உணா்ந்து உள்ளனா்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத், கூடலூா் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன், மாநில வா்த்தக அணித் தலைவா் சஜீவன், முன்னாள் குன்னூா் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, முன்னாள் மாவட்டச் செயலாளா் அா்ச்சுனன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×