மாயமான செல்போனை மீட்ட போலீசார்

கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.
மாயமான செல்போனை மீட்ட போலீசார்
Published on

அரவேணு,

கோத்தகிரி தெங்கரை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்.

இவர் சம்பவத்தன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்சில் கோத்தகிரிக்கு வந்தார்.

அப்போது அவரின் செல்போன் மாயமானது.

இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் டிராக்கர் டிவைஸ் நவீன கருவி உதவியுடன் கண்காணித்தனர்.

இதில் அந்த செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.

போலீசார் உடனடியாக அங்கு சென்று பாஸ்கரின் செல்போனை மீடடு ஒப்படைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com