என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு நாள் விழா-ஊட்டியில் மாணவ-மாணவிகள் நாளை பேரணி
- தமிழ்நாட்டுக்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று ஜூலை 18ந்தேதி பெயர் சூட்டினார்.
- பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியி ட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டுக்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று ஜூலை 18ந்தேதி பெயர் சூட்டினார். அன்றுமுதல் தமிழ்நாடு நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பேரணி நாளை நடக்க உள்ளது.
ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் பேரணி, கமர்ஷியல் சாலை வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முடிகிறது.
இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.
இதனை தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்து றை சார்பில் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட உள்ளது.
இது நாளை முதல் வருகிற 23ந்தேதிவரை 5 நாட்கள் நடக்கும். இதனை பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்