search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குட்டையில் குளித்து மகிழ்ந்த ஒற்றை யானை- உடல் முழுவதும் சேற்றையும் பூசி கொண்டது
    X

    குட்டையில் குளித்து மகிழ்ந்த ஒற்றை யானை- உடல் முழுவதும் சேற்றையும் பூசி கொண்டது

    • தொடர்ந்து குட்டையில் இறங்கிய காட்டு யானை தண்ணீரில் குளித்து மகிழ்ந்தது.
    • இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் செல்போனில் இந்த காட்சிகளை வீடியோ எடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கேரள எல்லைக்கு அருகில் உள்ள கெத்தை, பரளிக்காடு பகுதியில் தமிழக அரசின் மின்சார வாரிய குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை வந்தது. அந்த யானை அங்குமிங்குமாக சுற்றி திரிந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சிறிய குட்டையில் தண்ணீர் இருப்பதை பார்த்ததும் யானை அதனை நோக்கி ஓடி சென்றது.

    தொடர்ந்து குட்டையில் இறங்கிய காட்டு யானை தண்ணீரில் குளித்து மகிழ்ந்தது. மேலும் அங்கிருந்த சேற்றை எடுத்து தனது உடல் முழுவதும் பூசி கொண்டது.

    அதன்பிறகு வனப்பகுதிக்குள் யானை சென்றுவிட்டது. வனப்பகுதியில் கொசுக்கள் மற்றும் விஷப் பூச்சிகள் அதிகம் உண்டு. அவற்றின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டி காட்டு யானை சேற்றுக்குளியலில் ஈடுபட்டதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் செல்போனில் இந்த காட்சிகளை வீடியோ எடுத்தனர். பின்னர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    Next Story
    ×