search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சாதனை"

    • உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. பள்ளி மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
    • இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 190 பள்ளி மாணவ- மாணவிகள் இதில் கலந்துகொண்டு தேவர் சிலை, ராஜீவ்காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சென்று அழகப்பா கல்வி குழும மைதானத்தில் சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சோழன் உலக சாதனை புத்தக தலைவர் சண்முகநாதன் வழஙகிய சாதனை பட்டயத்தை அழகப்பா கல்வி குழும மேலாளர் காசி விசுவநாதன் மாணவர்களுக்கு வழங்கினார். சிலம்பாட்டக்குழு தலைவர் முனியாண்டி நன்றி கூறினார்.

    • 15,019 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டது.
    • பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    அரூர்,

    பள்ளிக்கல்வித்துறை சார்பாக தருமபுரி மாவட்ட அளவில் தேசிய பசுமைப்படை சார்பாக அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 15,019 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் அரசு பள்ளிகளில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து உலக சாதனை செய்தனர். யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இந்த தேசிய பசுமை படை சாதனை பதிவு செய்யப்பட்டது.

    இந்த உலக சாதனையை பாராட்டி ஒருங்கிணைப்பா ளர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. உலக சான்றிதழ் சாதனை சான்றிதழ் பெற்ற அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பழனி துரையை மாவட்ட முதன்மை கல்வி அலுவல,ர் மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர். ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர்.

    இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் கடைசி செசனில் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார். போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.

    இதற்கு முன்பு 1910ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 494 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    • உலகளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இது முதல் முறை.
    • இத்தொடரில் தொடர்ந்து 5 சதமடித்து தமிழக கிரிக்கெட் அணி வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

    பெங்களூரு:

    38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன்மூலம் தமிழக அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர். தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்தன.

    ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

    உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும்.

    இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.
    • உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான நிலைய ஆணையத்துடன், மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள் இந்தியா, மயிலாப்பூர் லேடீஸ் சர்க்கிள் ஆகிய பெண்கள் தன்னார்வ அமைப்பு இணைந்து விழிப்புணர்வு வார விழாவை நடத்தி வருகிறது. இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.

    அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் 3,500 பைகளில் அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கெட் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த பைகள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டன.

    இதில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், ஆற்காடு நவாப் முகமது ஆசிப் அலி, மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர். 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உணவு பொருட்கள் அடங்கிய இந்த பைகளை, சென்னை முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பெண்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகாசன பயிற்சி பெற்று வருகிறார்.
    • மாணவனின் சாதனை மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த புண்ணியக்கோடி - கிரிஜா தம்பதியர் மகன் டி.பி.ஷர்வின்குமார் (வயது 11). கும்மிடிப்பூண்டி, ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகாசன பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்நிலையில் சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு கையை தரையில் வைத்து, ஒரு நிமிடத்தில், 78 முறை, தலையால் தரையை தொட்டு, தண்டால் எடுத்து, உலக சாதனை படைத்துள்ளார் ஷர்வின்குமார்.

    இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. சாதனை படைத்த ஷர்வின்குமார், அவருக்கு யோகா பயிற்சி அளித்த சந்தியா ஆகியோருக்கு பாராட்டு குவிகிறது.

    • வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார்.
    • 2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்த சாதனை முயற்சி.

    தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்த சாதனையை அடைய ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.

    ஆனால் அவர் ரூயிபோஸ் வகை தேநீரில் அசல், வெண்ணிலா மற்றும் ஸ்டாபெரி என மூன்று வகைகளில் 249 கப் தேநீர் தயாரித்துள்ளார்.

    தென்னாப்பரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தாவரமான அஸ்பலதஸ் லீனரிஸ் என்கிறத புதர் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீரை ரூயிபோஸ் என்று அழைக்கப்படுகிறது.

    சாதனை முயற்சியின்போது வாலன்டின் தெளிவான மனதை கொண்டு, விறுவிறுப்பாக ஒவ்வொரு டீ கோப்பையிலும் 4 தேநீர் பைகளை போட்டார். சரியான ரூயிபோஸ் தேநீராகத் தகுதிபெற ஒவ்வொரு தேநீர் பையும் குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு நன்கு ஊற வேண்டும். முதல் மூன்று தேநீர் கோப்பைகளில் தேநீர் பைகளை நிறப்பிய பிறகு, அடுத்த கோப்பையை நிறப்பினார்.

    இப்படி வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார். இதில் ஒரு கப் மட்டும் அளவில் பூர்த்தியாகாததால் நீக்கப்பட்டது.

    சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு தேநீரை அருந்தினர்.

    2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்தவும், வுப்பர்தல் சமூகத்தின் மீள்தன்மையைக் கொண்டாடும் விதமாகவும் இங்கார் வாலன்டின் உலக சாதனையில் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், இந்த சாதனையின் மூலம், தங்களின் வுப்பர்தல் சமூகம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

    • பல்வேறு உருவங்கள் மற்றும் எழுத்துக்களை செதுக்கி கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார் அரவிந்தன்
    • சாக்பீசில் ‘அ’ என்ற எழுத்துக்களை வெட்டியெடுத்து அவற்றை வைத்து திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அரவிந்தன் என்ற பட்டதாரி வாலிபர், கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரத்தைச் சேர்ந்த அரவிந்தன், சிறுவயது முதலே ஓவியம் வரைவதிலும் சிற்பங்கள் செதுக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். 4000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ள இவர், சோப்பு, பென்சில் முனை, சாக்பீஸ் போன்றவற்றில் கார்விங் முறையில் பல்வேறு உருவங்கள் மற்றும் எழுத்துக்களை செதுக்கி தொடர்ந்து தனது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.


    இந்த சாதனைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 1330 குறட்பாக்களையும் பென்சில் முனையில் செதுக்கி சாதனை படைத்துள்ளார். இந்த எழுத்துக்களை வெறும் கண்ணால் பார்க்க இயலாது, லென்ஸ் மூலமாகவே பார்க்க முடியும்.

    இதேபோல் சாக்பீசில் 'அ' என்ற எழுத்துக்களை 1330 எண்ணிக்கையில் மிகவும் நுணுக்கமாக வெட்டியெடுத்து அவற்றை வைத்து திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி உள்ளார். இதற்காக நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் செலவிட்டு, 7 நாளில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.


    அவரது சாதனையை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களை நிற்க வைத்து திருவள்ளுவர் உருவத்தை வரைந்துள்ளார்.

    தனது கலைப் பயணம் பற்றி பேசிய அரவிந்தன், தொடர்ந்து முயற்சி செய்து கின்னஸ் சாதனை படைப்பதே தனது லட்சியம் என்கிறார்.

    • உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.
    • தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுப்ரமணிய பிரசாத் துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஒலினா. இவர்களது மகன் லெயான்ஷ் பிராசாத்(வயது5). தற்பொழுது துபாயில் யூ.கே.ஜி. பயின்று வருகிறார். இவர் தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் உலக சாதனையாளர் புத்தகம் மற்றும் கலாம் சாதனையாளர் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.

    இதற்கான விருதுகளை இரணியல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியனிடமிருந்தும் தனித்துவம் வாய்ந்த சாதனையாளர் விருதினை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜூலியட்டிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.

    இவர் மேலும் பல உலக சாதனைகள் புரிந்து பல புத்தகங்களில் இடம் பெற முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். இவரது தந்தை ஏற்கனவே தனது இரு கைகளையும் எதிரெதிர் திசையில் ஒருநிமிடத்தில் அதிக அளவில் சுற்றி உலக சாதனை புரிந்து உலக சாதனையாளர் புத்தகம், ஆசிய சாதனையாளர் புத்தகம், இந்திய சாதனையாளர் புத்தகம் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்களுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    ஜெய்ப்பூர் :

    நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இந்த ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஒரு கோடி மாணவர்கள் நேற்று ஒன்று கூடி தேசபக்தி பாடல்களை பாடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று ஒரு கோடி மாணவர்கள் 25 நிமிட நேரம் வந்தே மாதரம், சரே ஜஹான் சே ஆச்சா, தேசிய கீதம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களைப் பாடினார்கள்.

    இது உலக சாதனையாக நேற்று பதிவாகி உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய மாணவர்களுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், "லண்டனில் உள்ள புகழ்பெற்ற நிறுவனமான 'வேர்ல்ட் புக் ஆப் ரெகார்ட்ஸ்', ஒரு கோடி மாணவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு, மாநில அரசிடம் சான்றிதழை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறும்போது, "புதிய தலைமுறையினர் சகோதரத்துவம், தியாகம் ஆகிய விழுமியங்களைப் புகுத்த வேண்டும், அதுவே நாட்டின் எதிர்காலம் ஆகும்" என தெரிவித்தார்.

    • சுமார் 800 கிலோ எடையுள்ள நீளமான சாண்ட்விச்சை உருவாக்க, பல்வேறு சமையல்காரர்கள் பணியாற்றினர்.
    • சாண்ட்விச்சை 2 நிமிடங்கள் 9 வினாடிகளில் அடுக்கி, நேரத்திலும் சாதனை படைத்துள்ளனர் சமையல் கலைஞர்கள்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவில் உலகின் மிக நீளமான சாண்ட்விச் தயாரிக்கப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. வெனுஸ்டியானோ கரான்சா நகரில் 17வது ஆண்டு டோர்டா கண்காட்சியின்போது டோர்டா சாண்ட்விச் என்ற உணவு வகை, 242.7 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த சாண்ட்விச்சை 2 நிமிடங்கள் 9 வினாடிகளில் அடுக்கி, நேரத்திலும் சாதனை படைத்துள்ளனர் சமையல் கலைஞர்கள். சுமார் 800 கிலோ எடையுள்ள இந்த நீளமான சாண்ட்விச்சை உருவாக்க, பல்வேறு சமையல்காரர்கள் இணைந்து பணியாற்றினர்.

    இந்த கண்காட்சியானது, டோர்டா சமையல் கலைஞர்கள் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான நியாயமான வாய்ப்பை வழங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரோசா வென்ச்சுரா போன்ற சமையல்காரர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தங்களின் கடல் உணவு டோர்டா உணவகத்தை மூட வேண்டியிருந்தது. இந்த கண்காட்சி அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என கூறுகின்றனர்.

    • காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக 44 மணி நேரம் நடந்த சதுரங்க போட்டி நடந்தது.
    • இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக தொடர்ந்து 44 மணி நேரம் சதுரங்கப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    தமிழக அரசின் சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது. சதுரங்கப் போட்டிகளுக்கு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஆர்வம், விருப்பம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    காரைக்குடியில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியில் மாவட்ட சதுரங்கக்கழகம், பள்ளி நிர்வாகம் மற்றும் பிரெய்ன் பாக்ஸ் ஆகியவை இணைந்து கடந்த 22-ந் தேதி மாலை 6.45 மணி முதல் நேற்று (24-ந் தேதி) மாலை 2.45 மணி வரை 44 மணி நேரம் இடைவெளி இல்லாமல் சதுரங்கப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் 50 இருக்கைகள் அமைத்து 1 சுற்றிற்கு 100 சதுரங்கப் போட்டி வீரர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 1,437 வீரர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வயது குறியீடு அளவு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறந்த நிலை போட்டியாக அறிவிக்கப்பட்டதால், சதுரங்கப்போட்டி வீரர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்றனர்.

    இந்த சதுரங்கப்போட்டி சோழன் உலகச்சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்ப ட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சோழன் நிறுவனர் நிமலன் நீலமேகம், ஒருங்கிணைப்பாளர்கள் சேது முத்துக்குமரன், மகேஷ்மணிமாறன், செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி தாளாளர்கள் செல்லப்பன், சத்யன், வட்டாட்சியர் மாணிக்கவாசகம், சிவகங்கை மாவட்ட சதுரங்கக்கழக செயலாளர் கண்ணன், தலைவர் கருப்பையா, பொருளாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×