search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் இங்கிலாந்து தொடர்"

    • பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அணியை கட்டமைக்க சிறுது காலம் தேவை.
    • கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை.

    கராச்சி:

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறும் போது பாபர் அசாம் கேப்டனாக பெரிய பூஜ்ஜியம் என்றும், முக்கியமாக அவருக்கு டெஸ்ட் அணியை வழிநடத்தும் திறன் இல்லை என்றும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், கேப்டன் பதவியால் எனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அழுத்தமான நேரங்களில் பேட்டிங் செய்வதை நான் அணுபவித்து விளையாடுவேன். கேப்டன் பொறுப்பு என்பது ஒரு மரியாதை. நான் எப்பொழுதும் எனது நாட்டுக்காக எனது சிறந்த செயல்பாட்டை அளிக்க நினைக்கிறேன்.

    என்னைப்பொறுத்தவரை முதலில் பாகிஸ்தான் தான், அதன் பின்னர் தான் மற்றவை. தோல்வி அடைந்தால் எனது அணி வீரர்களை நான் காப்பேன், நான் தோல்வி அடைந்ததற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன். எனது அணியினருக்கு முன் நான் இருப்பேன்.

    டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கும் நான் பொறுப்பேற்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அணியை கட்டமைக்க சிறுது காலம் தேவை. டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள இளைஞர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். நாங்கள் இப்போது ஒரு டெஸ்ட் அணியை உருவாக்கும் கட்டத்தில் இருக்கிறோம். இது தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆறு அறிமுக வீரர்களுக்குக் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 3-வது டெஸ்ட் போட்டியையும் வென்றது இங்கிலாந்து.

    கராச்சி:

    பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 81.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். இதில் ஷாபிக் 26 ரன்னிலும், ஷான் மசூத் 24 ரன்னிலும், அடுத்து வந்த அசார் அலி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

    இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பாபர் ஆசமும், ஷாகிலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 54 ரன்னிலும், ஷாகில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ரிஸ்வான் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 28.1 ஓவரில் 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    முன்னதாக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை, கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன

    கராச்சி:

    பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 81.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். இதில் ஷாபிக் 26 ரன்னிலும், ஷான் மசூத் 24 ரன்னிலும், அடுத்து வந்த அசார் அலி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பாபர் ஆசமும், ஷாகிலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 54 ரன்னிலும், ஷாகில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ரிஸ்வான் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை. இந்த இலக்கை இங்கிலாந்து எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றும்.

    • பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 354 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    கராச்சி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 79 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 78 ரன்னில் அவுட்டானார். அகா சல்மான் 56 ரன்னில் வெளியேறினார்.

    இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன் எடுத்தது.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஹாரி புரூக்கின் பொறுப்பான சதத்தால்354 ரன்களில் ஆல் அவுட்டானது. புரூக் 11 ரன்னிலும், பென் போக்ஸ் 64 ரன்னிலும், ஒல்லி போப் 51 ரன்னிலும் அவுட்டாகினர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது, நவ்மான் அலி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    • முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • முதல் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் எடுத்துள்ளது.

    கராச்சி:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்டில் 74 ரன் வித்தியாசத்திலும், முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 26 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 79 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். அகா சல்மான் அரை சதமடித்து 56 ரன்னில் வெளியேறினார். அசார் அலி 45 ரன்னிலும், ஷான் மசூத் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

    அடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன் எடுத்துள்ளது.

    • டி 20-யில் பாபர்- ரிஸ்வான் ஜோடி அபாரமாக விளையாடு வருகிறது
    • இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் பெரிதாக ஜொலிக்கவில்லை

    பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது, ராவல்பிண்டி, முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

    பாதுகாப்பு காரணமாக சுமார் 15 ஆண்டுகள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த இங்கிலாந்து, தற்போது சுற்றுப் பயணம் செய்து தொடரையும் வென்றுள்ளது. பாகிஸ்தான் தோல்வியை அந்நாட்டு ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

    பாகிஸ்தான் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காததுதான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விட்டால், பாகிஸ்தான் அதன்பின் குறைந்த ஸ்கோரில் சுருண்டு விடுகிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அது டி20யாக இருந்தாலும் சரி, டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி.

    முல்தான் டெஸ்ட் நேற்றோடு முடிவடைந்தது. தோல்விக்குப் பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ஒரு பத்திரிகையாளர் ''இந்த கேள்வி ரசிகர்கள் சார்பில் கேட்கப்படுகிறது. பாபர் அசாம், ரிஸ்வான் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அணியின் ஸ்கோர் உங்கள் இருவரையும் சார்ந்து இருப்பதுதான் அதற்கு காரணம்'' எனக் கேள்வியை எழுப்பினார்.

    கேள்வியை பத்திரிகையாளர் முடிப்பதற்குள், பாபர் ஆசம் கோபம் அடைந்து ''ஆகவே, நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?. நாங்கள் டெஸ்ட்களில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா?'' என ஆவேசம் அடைந்தார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத பத்திரிகையாளர் ''இல்லை. இந்த விசயத்தில் உங்களுடைய எண்ணம் என்ன? என்பதை தான் கேட்டேன். உங்கள் வீரர்கள் டி20-யில் விளையாட வேண்டுமா?'' என்றார்.

    இதுதொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பாபர் அசாம் ''நான் இதுபோன்று எதையும் நினைக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.

    • சகீல் அவுட்டானவுடன் அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர்.
    • அம்பயரின் இந்த மோசமான முடிவால் ரசிகர்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.

    முல்தான்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் 3-வது நடுவர் கொடுத்த ஒரு தவறான தீர்ப்பால், ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவுமே தலைகீழாக மாறியது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற சூழலில், 2வது போட்டியில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது போட்டியிலும் போராடி தோல்வியை தழுவியுள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என தோற்றுள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 275 ரன்களை அடித்தது. இதனால் 355 என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 328 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

    இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. 2வது இன்னிங்ஸின் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாவுத் சகீல் சிறப்பாக ஆடி வந்தார். அவர் 213 பந்துகளில் 94 ரன்களை அடித்திருந்த போது துரதிஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தார். மார்க் வுட் வீசிய ஷார்ட் பந்தை புல் ஷாட் அடிக்க முயன்று தவறியதால் கீப்பரிடம் கேட்ச்சானது. ஆனால் அது கேட்ச் தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

    விக்கெட் கீப்பர் ஒல்லி போப் தரைக்கு மிகவும் அருகில் இருப்பது போன்று அந்த கேட்ச்-ஐ பிடித்தார். இதனால் 3-வது நடுவருக்கு பரிந்துரைத்த 2 கள நடுவர்கள், சாஃப்ட் சிக்னலாக அவுட் என முடிவு தெரிவித்தனர். விக்கெட்டை ஆராய்ந்து பார்த்த 3-வது நடுவர், தரையில் பட்டது போல தான் உள்ளது. ஆனால் எந்தவித நிரூபனமும் ஆகாததால், கள நடுவர்களின் முடிவுக்கே செல்வதாக கூறி அவுட் கொடுத்தார்.

    இந்த ஒரு முடிவால் பாகிஸ்தானுக்கு பெரும் அடி விழுந்தது. சகீல் அவுட்டானவுடன் அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர். செட்டில் பேட்ஸ்மேன் என யாருமே இல்லாததால் 328 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. அம்பயரின் இந்த மோசமான முடிவால் ரசிகர்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.

    சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து, 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து இங்கிலாந்து அணியிடமும் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • 2-வது இன்னிங்சில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்தது.

    முல்தான்:

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 281 ரன்களும், பாகிஸ்தான் 202 ரன்களும் எடுத்தன. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் (74 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (16 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 64.5 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தனது 2-வது சதத்தை எட்டிய ஹாரி புரூக் 108 ரன்களில் (149 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். பென் ஸ்டோக்ஸ் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த அணி கடைசி 19 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    பாகிஸ்தான் தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்படத்தக்கது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு 355 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது.

    இதற்கு முன்பு ஒரே ஒரு முறை 350-க்கு மேலாக இலக்கை விரட்டிப்பிடித்து இருக்கும் பாகிஸ்தான் அணி, மிகுந்த நம்பிக்கையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த முகமது ரிஸ்வானும், அப்துல்லா ஷபிக்கும் முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் (15.5 ஓவர்) திரட்டி ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர்.

    ரிஸ்வான் 30 ரன்களிலும், அப்துல்லா ஷபிக் 45 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் பாபர் அசாம் (1 ரன்) ஆலி ராபின்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 83 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தானை சாத் ஷகீலும், இமாம் உல்-ஹக்கும் கைகோர்த்து சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் இமாம் உல்-ஹக் 60 ரன்களில் (104 பந்து, 7 பவுண்டரி) அவுட் ஆனாஅர். நேற்றைய முடிவில் பாகிஸ்தான் 64 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்துள்ளது. சாத் ஷகீல் 54 ரன்களுடனும், பஹீம் அஷ்ரப் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

    இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன், மார்க்வுட், ஜாக் லீச் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 157 ரன்கள் தேவைப்படும் நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது. சிறிது நேரம் தாக்கு பிடித்த பாகிஸ்தான் அணி உணவு இடைவேலைக்கு அப்புறம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. 2-வது இன்னிங்சில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி 17-ந் தேதி தொடங்குகிறது.

    • இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை இழந்தது.
    • 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

    முல்தான்:

    பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 79 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது.

    இதையடுத்து நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது அந்த அணி 275 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை இழந்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 108 ரன்கள் குவித்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஜாவித் மகமூத் 3 விக்கெட்களை சாய்த்தார்.

    இதையடுத்து 355 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் அப்துல்லா சபிக் 45 ரன்னும், ரிஸ்வான் 30 ரன்னும் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். பாபர் ஆசம் 1 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.இமாம் உல் ஹக் 60 ரன்கள் குவித்தார். சவுத் ஷகில் 54 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.

    பாகிஸ்தான் அணி 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் இன்னும் 6 விக்கெட்கள் உள்ளன. இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், இங்கிலாந்து பந்து வீச்சை சமாளித்து பாகிஸ்தான் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புடன் அந்நாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 62.5 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    முல்தான்:

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பென் டக்கெட் 63 ரன்னும், ஒல்லி போப் 60 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார். ஜாஹித் மக்முது 3 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் ஆசம் 75 ரன்னும், ஷாகில் 63 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 79 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஹாரி புரூக் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி இதுவரை 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இங்கிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. டி20 தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் ஜோடி களமிறங்கியது.

    சாக் கிராலி 19 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து ஓலி போப் - பென் டக்கெட் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். 49 பந்தில் 63 ரன்கள் எடுத்து பென் டக்கெட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூட் 8 ரன்னிலும் பிரோக் 9 ரன்னிலும் வெளியேறினர். அப்ரார் அகமது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    • பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • தேநீர் இடைவேளைக்கு பிறகு 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 657 ரன்கள் குவித்தது. இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 579 ரன்கள் குவித்தது.

    இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, பாகிஸ்தான் அணிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான், ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 268 ரன்களில் சுருண்டது. சவுத் ஷகில் (74), இமாம் உல் ஹக் (48), முகமது ரிஸ்வான் (46), அசார் அலி (40) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் இலக்கை எட்ட முடியவில்லை. குறிப்பாக தேநீர் இடைவேளைக்கு பிறகு 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 4 விக்கெட் எடுத்தனர்.

    இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 9ம் தேதி தொடங்குகிறது.

    ×