search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரம்"

    • விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
    • நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் உழவுப்பணியை துவக்கியுள்ளனர்.பயிர் சாகுபடிக்கு தேவையான, விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மற்றும்விதை கிராமத்திட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருட்களான, விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில், மக்காச்சோளம் கோ.எச்.எம்.,8, சோளம், கோ-32, கம்பு, கோ-10, உளுந்து, வம்பன் 8,9, பாசிபயறு, கோ-8, கொண்டைக்கடலை என்.பி.ஜி., -119, 47, நிலக்கடலை - தரணி ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    மேலும் நுண்ணுயிர் உரங்களான, அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம், திட வடிவத்திலும், திரவ நிலையிலும் இருப்புள்ளது.நுண்Èட்ட உரங்களான தானிய வகை, பயறு வகை,பருத்தி வகைநுண்ணுாட்டங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது.தேவைப்படும் விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை நகலுடன் வந்து, மானிய விலையில், விதை,உரங்களை பெற்றுபயனடையலாம்.

    மேலும் தென்னை மரத்திற்குநுண்Èட்டச்சத்து பற்றாக்குறையால் குரும்பை உதிர்வதை தடுக்க நுண்Èட்ட உரம் இடுவதற்கு சரியான தருணமாகும்.ஒரு தென்னை மரத்திற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை அரைக்கிலோ இட வேண்டும். குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான தென்னை நுண்ணுாட்ட உரமும், போதிய அளவு இருப்பு உள்ளது. இதனையும்,தென்னை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 டன் கிரிப்கோ யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு வந்தது.
    • 4,374 டன் உரம் இருப்பு உள்ளது. என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்.

    சேலம்:

    சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 டன் கிரிப்கோ யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு வந்தது. இந்த உர மூட்டைகள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    அதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 600 டன் உரமும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 300 டன் உரமும் அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 1,464 டன் யூரியா, டி.ஏ.பி. 916 டன் டி.ஏ.பி., பொட்டாஸ் 364 டன், காம்ளக்ஸ் 1,630 டன் என மொத்தம் 4,374 டன் உரம் இருப்பு உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் உரத்தை பெற்று பயன் அடைய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். 

    • ஆண்டுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாசியம் உரம் கிடைக்கும்.
    • உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விலையை பராமரிக்கவும் இது உதவும்.

    நாடு முழுவதும் உணவு பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இதற்காக வெளிநாட்டு உர நிறுவனங்களுடன் இந்திய உர நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் ராஷ்டிரிய ரசாயன உர நிறுவனமும், ஜெர்மனியின் கே.பிளஸ்.எஸ்.நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.  இந்த புரிந்துணரவு ஒப்பந்தத்திற்கு ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி பகவந்த் குபா அப்போது உடனிருந்தார்.

    இந்த ஒப்பந்தம், கலப்பு உரங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு எம்.ஓ.பி. உரம் கிடைப்பதை மேம்படுத்தவும் வகை செய்கிறது. உர உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளுடன் நீண்டகால நட்புறவுக்கும் வழிவகை செய்கிறது.

    மேலும் உரம் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நம்பியிருக்கும் இந்தியா, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், நிலையான விலையை பராமரிக்கவும் இது உதவும்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கே.பிளஸ்.எஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாசியம் உரங்களை 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை சப்ளை செய்யும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • விதை நெல், உரம், பூச்சிக்கொள்ளி மருந்து போன்றவை தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும்.
    • வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆக்குதல்.

    கும்பகோணம்:

    பாட்டாளி மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கும்பகோணத்தி–ல்நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்த. கண்ணன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ஜோதிராஜ்,மாநில செயற்குழு போதை கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் கிளைகள் தோறும் கொடியேற்றுதல், பொறுப்பாளர்கள் செயல்பாடுகள் மற்றும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில்அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆக்குதல் போன்ற கட்சி வளர்ச்சி குறித்து மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

    கூட்டத்தில் கும்பகோணம் மாநகருக்கு வருகை தந்து பொதுக்கூ–ட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அன்புமணிராமதாஸ் வரவேற்று,சிறப்பாக பொதுக்குழு கூட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாமக , வன்னியர் சங்க, உழவர் பேரியக்க மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர் கிளை ,அணி பொறுப்பா–ளர்களுக்கு நன்றி தெரித்துகொள்கிறது.

    தஞ்சை வடக்கு மாவட்ட பாமகவிற்கு மாநில, மாவட்ட பொறுப்புகள் வழங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு நன்றி தெரிவிப்பது ர்டு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றுவது.

    தஞ்சை டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம், பூச்சிக்கொள்ளிகள் , மருந்து போன்றவை தட்டுபாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்திற்கு வக்கீல் ராஜசேகர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் சுந்தரம்,பாலகுரு, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 363.41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
    • நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் வரை சராசரியாக 229.90மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 363.41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அமராவதி அணையில் இருந்து நீர்வரத்து தொடங்கியதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி உள்ளனர். கீழ்பவானி பாசன பகுதிகளான காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்பட்டுள்ளது. யூரியா, பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1,896 டன்னும், டி.ஏ.பி. 839 டன்னும், காம்ப்ளக்ஸ் 4,491 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 629 டன்னும் இருப்பில் உள்ளது என்றார். மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டன.

    கூட்டத்தில் இணை இயக்குனர் (வேளாண்மை) சின்னசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மாவட்ட வருவாய் அதிகாரி பால்பிரின்ஸி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், துணை இயக்குனர் (வேளாண்மை) சுருளியப்பன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    • இயற்கையான உரங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியும் எடுத்து கூறினார்.
    • பொது இ-சேவை மையத்திற்கு ஆதார் எண்ணுடன் நேரடியாக சென்று புதுபித்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே, ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு அங்கக சான்று குறித்த ஒரு நாள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது கூறுகையில் இப்பயிற்சி பயன் படுத்தி அங்கக சான்று பற்றியும் விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது, இயற்க்கையான உரங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியும் எடுத்து கூறினார்.

    மேலும் இப்பகுதியிலுள்ள பிரதம மந்திரியின் கௌரவ நிதி ஆண்டுக்கு ரூ.6000 பெறும் விவசாயிகள் தங்களுடைய பதிவை அருகிலுள்ள பொது இ-சேவை மையத்திற்கு ஆதார் எண்ணுடன் நேரடியாக சென்று புதுபித்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

    துணை வேளாண்மை அலுவலர் பிரபாகரன், அனைவரையும் வரவேற்றார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி த.அருணஜெடேசன் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை எவ்வாறு சாகுபடி செய்யலாம் என்பது பற்றியும் அதன் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

    இப்பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் அட்மா திட்டங்கள் பற்றியும், உழவன் செயலி பற்றியும் இப்பயிற்சியில் விளக்கி கூறினார்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் மற்றும் மதுமினா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    நிகழ்ச்சி முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுபாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • அரிசி, தயிர் உள்ளிட்ட அன்றாட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கைவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    குறுவை பயிர் சாகுபடிக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுபாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் சிறு குறு தொழில் பாதிக்கின்ற மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். அரிசி, தயிர் உள்ளிட்ட அன்றாட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் தலைமை தாங்கினார். பார்க்கவ குல சங்கம் மாவட்ட தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிறு குறு விவசாயிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, குறுவை சாகுபடி விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • உரம் தெளிப்பதற்கு விவசாயிகள் நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, அணுகி விவசாயிகள் கேட்கும் பொழுது, உரம் வரவில்லை என்ற தகவலை தெரிவிக்கின்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், சிறு குறு விவசாயிகளுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ், இலவச உரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட நிலையிலும், தற்போதைய இயற்கை சூழல், மேலடுக்கு சுழற்சியில் மாற்றம், காரணமாக மழை பொழிந்து வருகிறது. இதனை சிறு குறு விவசாயிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, குறுவை சாகுபடி விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தங்களது நிலத்தை நீர்பாய்ச்சி, உழுது, நிலத்தைப் பண்படுத்தி, நாற்றங்கால் அமைத்து, நாற்று நடும் தருவாயில், அடி உரம், மற்றும் மேலுரம், நாற்றங்கால் சிறப்பாக அமைய உரம் தெளிப்பதற்கு விவசாயிகள் நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, அணுகி விவசாயிகள் கேட்கும் பொழுது, உரம் வரவில்லை என்ற தகவலை தெரிவிக்கின்றனர்.

    அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில், மெத்தனம் காட்டுவதாக, விவசாயிகள் தங்களுடைய கவலைகளையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    எனவே நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு வழங்க கூடிய உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முத்துப்பேட்டை வட்டாரத்தில் 2315 ஏக்கர் பரப்பிற்கு விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் முழு மானியத்தில் உரம் பெற்று பயன்பெறலாம்.
    • ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி.ஏ.பி. 25 கிலோ பொட்டாஷ் உரம் வழங்கப்படுகிறது.

    திருத்துறைபூண்டி:

    திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறி ப்பில் கூறியிருப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில்கடந்த ஆண்டை விட இவ்வருடம் கூடுதல் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு ள்ளது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்பு திட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 3955 ஏக்கர் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 2315 ஏக்கர் பரப்பிற்கு விவசாயிகள் குறுவை தொகுப்புதிட்டத்தில் முழு மானியத்தில் உரம் பெற்று பயன்பெறலாம்.

    ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி 25 கிலோ பொட்டாஷ் உரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தேவை யான உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறுவை தொகுப்பு திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுவதால் விவசாயிகள் உடனடியாக தங்களுக்கு வந்த ஓடிபி நம்பரை தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கிகளில் தெரிவித்து உரத்தினை எடுத்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலதாமதம் இன்றி உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருந்து உரத்தினை எடுத்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பசுமைப் புரட்சிக்கு பின் செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்தது.
    • செயற்கை உரங்களை இவ்வளவு செலவு செய்து நிலத்துக்கு இட்டாலும் மண் வளம் பாதித்து மண் மலடாகிறது.

    திருப்பூர் :

    பசுமை புரட்சிக்கு முன் பலரும் இயற்கை உரத்தையே பயன்படுத்தி வந்தனர். பசுமைப் புரட்சிக்கு பின் செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்தது. துவக்கத்தில் விலை குறைவாக கிடைத்தது.தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதற்கு பெருமளவு அரசு மானியம் கொடுத்து உர விலையை குறைத்து வினியோகிக்கிறது. அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் உர மானியத்திற்கு செலவாகிறது.செயற்கை உரங்களை இவ்வளவு செலவு செய்து நிலத்துக்கு இட்டாலும் மண் வளம் பாதித்து மண் மலடாகிறது.

    மனிதர்கள், விலங்குகள், பறவைகளுக்கு நோய்கள் பெருகி வருகின்றன. இதனால் மருத்துவச் செலவு சாமானிய மக்கள் சமாளிக்க முடியாத அளவு உயர்ந்து விட்டது.

    இது குறித்து பொங்கலூர் வட்டார விவசாயிகள் கூறியதாவது:-

    செயற்கை உரத்துக்கு மானியம் தரும் அரசு இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் மண்வளம் காப்பதோடு மக்கள் நலனும் காக்கப்படும். மருத்துவ செலவு குறையும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியம் வழங்கப்படுகிறது.இது போல செயற்கை உரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் ஒழித்து விட்டு, விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மானியம் வழங்கினால் இயற்கை உரம் தயாரிப்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரங்களை எம்.எல்.ஏ, வழங்கினார்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள மாரநேரி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் தலைமையில் நடைபெற்றது. பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வரவேற்றார்

    நிகழ்ச்சியில் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ, குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பூதலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், வேளாண்மை துணை இயக்குனர் ஈஸ்வர், மாரநேரி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் உரக்கடைகளில் தரக்கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போது கூடுதலாக மற்ற பொருட்களை விற்பணை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் நிரந்திரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்ட த்தில் குறுவை சாகுபடித ற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால்உரக்கடை களில்திடீர் ஆய்வுகளை வேளாண்மை அதிகாரிகள் நடத்தினர்.

    வேளாண்மைஇணை இயக்குநர்அ றிவுரைக ளின்படி தஞ்சாவூர் மாவட்டம் முழு வதும் மொத்த விற்பணையா ளர்கள்

    சில்லரை கடைகளில்திடீர் ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் உரக்கடைகளில்தரக்கட்டு ப்பாடுகளைஆய்வு செய்த னர்.

    ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போது கூடுதலாக மற்ற பொருட்களை விற்பணை செய்வது கண்டறியப்பட்டாலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது

    உர உரிமம் நிரந்திரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் தேவிகலாவதி, வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் இருந்தனர்.

    ×