search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்டத்தில்"

    • ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலை மழை பரவலாக பெய்ய தொடங்கியது.

    மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைய தொடங்கியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக காலை 8 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.

    இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழை காரணமாக முக்கிய சாலை கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் கொடுமுடி, மொடக்குறிச்சி, ஈரோடு, பெருந்துறை, நம்பியூர், கவுந்தப்பாடி, கொடிவேரி, பவானி, சத்தியமங்கலம், பவானிசாகர், அம்மா பேட்டை, வரட்டுபள்ளம், குண்டேரி பள்ளம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது.

    கனமழை காரணமாக இரவு நேரத்தில் கடும் குளிர் காற்று வீசியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஈரோடு மாநகர் பகுதி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி கோபி. பெருந்துறை. அந்தியூர் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் இன்று காலையும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வெளியே எங்கும் செல்லா மல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. தாளவாடிய மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகள் தோன்றியுள்ளன. வனப்பகுதியில் சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :

    சென்னிமலை-93, கொடுமுடி-67, மொடக் குறிச்சி-63, ஈரோடு-56, பெருந்துறை-54, எலந்த குட்டைமேடு-52.60, நம்பியூர்-52, கவுந்தப்பாடி-49.20, கொடிவேரி-45, பவானி-44.4, அம்மாபேட்டை-39.40, சத்தியமங்கலம்-37, பவானிசாகர்-34.80, கோபி-32, வரட்டு பள்ளம்-31.60, குண்டேரி பள்ளம்-28.60. மாவட்டம் முழுவதும் 815.60 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    • ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் புதிதாக 13,508 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் 55,172 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷனி சந்திரா பெற்றுக்கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 5.1.22 படி மொத்தம் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள் இருந்தனர்.

    இதில் புதிதாக 13,508 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் 55,172 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரத்து 580 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளிலும் சேர்த்து 2,222 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு கிழக்கில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 491 வாக்காளர்களும், ஈரோடு மேற்கில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 026 வாக்காளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 942,

    பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 28,032 பவானி தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 339, அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 15,222 கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 100 பவானிசாகர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 428 பேர் உள்ளனர். என மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரத்து 580 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 46 ஆயிரத்து 572, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 98 ஆயிரத்து 869 பேர் உள்ளனர். மற்றவர்கள் 139 பேர் உள்ளனர்.

    வழக்கம்போல் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஈரோடு மேற்கு தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.

    • மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள், மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரதான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இந்நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் மாலை முதல் இரவு வரை பலத்த முதல் மிதமான மழை வரை பெய்துள்ளது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக இந்த பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இங்கு 31.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் பவானிசாகர், பெருந்துறை, குண்டேரிபள்ளம், அம்மா பேட்டை, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, கொடுமுடி, நம்பியூர், பவானி, கோபி, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    மொடக்குறிச்சி-31.40, பவானிசாகர்-30.2, பெருந்துறை-21, குண்டேரிபள்ளம்-21, அம்மாபேட்டை-15.60, ஈரோடு-12, சத்திய மங்கலம்-12, கவுந்தப்பாடி-6.20, கொடுமுடி-6, நம்பியூர்-5, கோபி-3.20, பவானி-3, வரட்டுபள்ளம்-1.40.

    • ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.
    • மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையின் நேற்று காலை வழக்கம் போல் ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.

    பின்னர் மாலை திடீரென வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இரவிலும் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், வரட்டுப்பள்ளம், குண்டேரிபள்ளம், கொடிவேரி, கொடுமுடி, நம்பியூர், கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி, தாளவாடி, பவானி போன்ற பகுதி களிலும் பரவலாக மழை பெய்தது.

    இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானிசாகர்-17.40, எலந்த குட்டைமேடு-16.80, சத்தியமங்கலம்-15, கோபி-14.20, குண்டேரி பள்ளம்-8.20, வரட்டுபள்ளம்-8, கொடிவேரி-7, கொடு முடி-6.20, நம்பியூர்-6, கவுந்தபாடி-5.20, மொடக்குறிச்சி-3.40, தளவாடி-1.50, பவானி-1.20.

    • வரட்டு பல மனையும் தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் உள்ளது.
    • இதே–போல் பல்வேறு இடங்களில் ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் வெளி–யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

    41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 41.75 அடியாக உள்ளது.

    இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 30.84 அடியாக உள்ளது. வரட்டு பல மனையும் தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் உள்ளது.

    இதேபோல் பல்வேறு இடங்களில் ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
    • சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

    இதேபோல் குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதேப்போல் கவுந்தப்பாடி, கொடிவேரி, குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், மொடக்குறிச்சி, சென்னிமலை, நம்பியூர், பவானி, பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    சத்தியமங்கலம்-56, கவுந்தப்பாடி-40, அம்மா பேட்டை-40, கொடிவேரி-37, குண்டேரிபள்ளம்-29, நம்பியூர்-25, வரட்டுபள்ளம்-16, தாளவாடி-14, பவானி-12.80, மொடக்குறிச்சி-12.40, பவானிசாகர்-12, சென்னிமலை-2.

    • ஈரோடு மாவட்டத்தில் 57 இடங்களில் மருத்துவ முகாம் வருகின்ற 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை , ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் வருகின்ற 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் வருகின்ற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பவானி தாலுகாவில் உள்ள குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , பெருந்துறை தாலுகாவில் உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் 19-ந் தேதி (புதன்கிழமை) பெருந்துறை தாலுகாவில் உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

    20-ந் தேதி (வியாழக்கிழமை) சத்தியமங்கலம் தாலுகாவில் உள்ள மில்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள எழுமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த வாரம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    அகில இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கானதனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கட்டாயம் என்பதினால் அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்துதுறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (நீலநிறம்), ஆதார் அட்டை, புகைப்படம் -2 ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவில் தற்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
    • இதுவரை மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் அணைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 10 தாலுகாவில் தற்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    இதில் மலைப்பகுதியில் மட்டும் 9 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆம்பு லன்ஸ் தேவை தொடர்பாக அழைப்பு பெறப்பட்டதில் இருந்து 8 முதல் 14 நிமிடங்களில் நகர்புறம் மற்றும் கிராமபுற ங்ககளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இந்த நேரத்தை மேலும் குறைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறியதாவது:

    108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதிலும் குறிப்பாக 84 ஆயிரத்து 105 கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 1 லட்சத்து 992 பேர் சாலை விபத்திற்காக உபயோகித்துள்ளனர்.

    இதில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பினி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு 709 குழந்தைகள் ஆம்புலன்சில் பிறந்துள்ளன.

    இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்ப தற்காக வெண்டிலேட்டர் ஈ.சி.ஜி மானிட்டர் போன்ற அதிநவீன கருவிகள் ஈரோடு மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லுரி ஆம்புல ன்ஸ்களில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    பிறந்த 28 நாட்களுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தை கள் ஆம்புலன்ஸ் ஈரோடு மற்றும் கோபிசெட்டி பாளையம் மருத்துவ மனையில் இன்குபேட்டர் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 40-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழ ந்தைகள் காப்பாற்றபட்டு வருகின்றனர்.

    108 சேவையை இன்னும் செம்மைபடுத்த வேண்டும் என்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. கர்ப்பிணி பெண்கள் இலவசமாக இச் சேவையை 24 மணி நேரமமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஹாட்ஸ்பாட் எனும் அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து வாகன விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும். நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது.
    • பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும்.

    நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது. பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் வரை 47,148 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 41,676 ெஹக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு ள்ளன.

    நடப்பாண்டு தேவைக்காக வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினி யோகம் செய்வதற்காக நெல் விதை 175 டன், சிறு தானியங்கள் 44 டன், பயறு வகை விதைகள் 18 டன், எண்ணெய் வித்துக்கள் 56 டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    ரசாயன உரங்களான யூரியா 2,996 டன், டி.ஏ.பி. –2,667 டன், பொட்டாஷ் 2,319 டன், காம்ப்ளக்ஸ்  10,196 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்து க்கு தேவையான இடு பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்ப ட்டுள்ளது.

    தடப்பள்ளி, அரக்கன் கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை நடந்து வருகிறது. அங்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    நடப்பாண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 44 பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு சாகுபடி மேற்கொ ள்ளப்பட்டு உணவு தானிய உற்பத்தி அதிகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 565 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வில்லை.
    • ஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 724 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதன்படி 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு 6 மாத காலத்திற்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகம் முழு வதும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் மொத்தம் மக்கள் தொகை 23,77,315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.

    இதில் முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16 லட்சத்து 52 ஆயிரத்து 535 பேர் போட்டு உள்ளனர். இது 95 சதவீதம் ஆகும். இதே போல் 15 லட்சத்து 14 ஆயிரத்து 560 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.

    இது 87 சதவீதம் ஆகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 565 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வில்லை.

    இதேப்போல் மாவட்ட த்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 89 ஆயிரத்து 352 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இது 87 சதவீதமாகும்.

    இதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசியை 82, 140 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 79 சதவீதம் ஆகும்.

    இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் மொத்தம் 66 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதில் இதுவரை 56 ஆயிரத்து 589 பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 86 சதவீதமாகும்.

    இதைப்போல் 49 ஆயிரத்து 64 பேர் இரண்டாம் தவணை தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு உள்ளனர். இது 73 சதவீதம் ஆகும்.

    பூஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 724 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.
    • இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, சத்தி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர் உள்ளிட்ட தாலுகா பகுதியில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதி ஷ்டை செய்யப்பட்டன.

    இதில் இந்து அமைப்புகள் சார்பில் 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளன. இது தவிர பொதுமக்கள் சார்பில் தனியாக 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க போலீ சார் அனுமதி அளித்து ள்ளனர்.

    விநாயகர் சிலைகள் கரைக்கும் போது, அசம்பா விதங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சப்-டிவிசன்களிலும் போலீசார் கடந்த ஒருவாரகாலமாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாது காப்பு பணியில் 1500 போலீ சார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.

    இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் அந்தந்த நீர் நிலை களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாட்களில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது. இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசுகளைவெடிக்க க்கூடாது. கோஷங்களை எழுப்ப கூடாது. பூஜைக்காக பொது இடங்களில் வைக்க ப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அனுமதி க்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

    பிற மதத்தினர் ஆலயங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது போலீசாரின் வழிகாட்டு தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோ போன்றவற்றில் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மினி லாரி, டிராக்டர் ஆகியவ ற்றிலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்து கரைத்து விட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது.
    • இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. அனல் காற்று அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. இதைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 20 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    இதேபோல் கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவானது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி -24, ஈரோடு -19, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -10.20, பெருந்துறை -8, குண்டேரிபள்ளம் -6, பவானிசாகர் -2.

    ×