search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிரம்பின"

    • வரட்டு பல மனையும் தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் உள்ளது.
    • இதே–போல் பல்வேறு இடங்களில் ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் வெளி–யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

    41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 41.75 அடியாக உள்ளது.

    இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 30.84 அடியாக உள்ளது. வரட்டு பல மனையும் தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் உள்ளது.

    இதேபோல் பல்வேறு இடங்களில் ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகனநிறுத்தும் இடங்கள் நிரம்பி வழிந்தன.
    • மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது

    திருப்பூர் :

    வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்ற பெருமை திருப்பூருக்கு உண்டு. இங்கு வருகிறவர்களுக்கு உடனுக்குடன் பின்னலாடை நிறுவனங்களில் வேலையும் கிடைத்து விடும். இதனால் திருப்பூருக்கு தினமும் வேலை தேடி பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் எல்லாம் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். மற்ற நாட்களில் திருப்பூரில் தங்கியிருப்பார்கள்.

    இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் பலரும் தங்களத சொந்த ஊர்களுக்கு சென்றனர். 5 நாட்கள் வரை தொடர் விடுமுறை என்பதால், தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதுபோல் வெளியூர்களுக்கு சென்ற பலரும் தங்களது வாகனங்களை பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி சென்றதால், வாகன நிறுத்தும் இடங்களும் நிரம்பி வழிந்தன. இதுபோல் வாகன நிறுத்தும் இடங்களில தரை தளம் சரியாக இல்லாமல் மண் தளமாக இருப்பதால், மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தரைதளங்களை சீரமைத்து சரியான முறையில் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×