search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 92 சதவீத மழை பொழிவு
    X

    ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 92 சதவீத மழை பொழிவு

    • ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும். நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது.
    • பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும்.

    நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது. பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் வரை 47,148 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 41,676 ெஹக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு ள்ளன.

    நடப்பாண்டு தேவைக்காக வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினி யோகம் செய்வதற்காக நெல் விதை 175 டன், சிறு தானியங்கள் 44 டன், பயறு வகை விதைகள் 18 டன், எண்ணெய் வித்துக்கள் 56 டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    ரசாயன உரங்களான யூரியா 2,996 டன், டி.ஏ.பி. –2,667 டன், பொட்டாஷ் 2,319 டன், காம்ப்ளக்ஸ் 10,196 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்து க்கு தேவையான இடு பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்ப ட்டுள்ளது.

    தடப்பள்ளி, அரக்கன் கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை நடந்து வருகிறது. அங்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    நடப்பாண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 44 பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு சாகுபடி மேற்கொ ள்ளப்பட்டு உணவு தானிய உற்பத்தி அதிகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×