search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "with thunder"

    • கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றவர்கள் மழையில் நனைந்த படி சென்றனர்.
    • வெயிலின் காரணமாக அவசர அவசரமாக ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் மார்ச் மாத இறுதியிலேயே வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது. மேலும் கொரோனா தாக்கமும் லேசாக அதிகரித்ததால் மார்ச் மாதம் 11 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வெயிலின் காரணமாக அவசர அவசரமாக ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிகளில் தொடங்கியது.மேலும் 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் வெயில் தாக்கத்தால் நோய்வாய் பட்டவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் வெளியே வர வேண்டாம் என உத்தரவு அறிவித்தது. வெயில் தாக்கத்தால் புதுவை நகர பகுதியில் பகல் நேரத்தில் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் புதுவையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.காலை 7 மணிக்கு இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மழையின் வேகம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து லேசான சாரல் மழை பெய்து வருகிறது.வெயில் தாக்கம் மறைந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. புதுவை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை கடற்கரை சாலையில் நடை பயிற்சிக்கு வந்தவர்கள் மழையில் நனைந்த படி கோடை மழையை ரசித்தனர்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது.
    • இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. அனல் காற்று அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. இதைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 20 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    இதேபோல் கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவானது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி -24, ஈரோடு -19, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -10.20, பெருந்துறை -8, குண்டேரிபள்ளம் -6, பவானிசாகர் -2.

    ×