search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தற்கொலை"

    • குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.
    • இளம்பெண் தற்கொலை குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமத்திற்கு உட்பட்ட கோமுககவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கவுரி (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    கவுரிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையிலும் அதே போல் தனது மனைவியை சத்தம் போட்டு விட்டு சிவக்குமார் வெளியே சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த கவுரி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.

    அப்போது அவர் கிணற்றில் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கவுரியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்த உள்ளார். தாய் இறந்த நிலையில் இரட்டைக்குழந்தைகள் பாலுக்காக தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    • குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் சுப்பிரமணியர் கோவில் தெரு தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது அத்தை மகளான சிவக்கனி (23) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுைடந்த சிவக்கனி தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரும் தீபன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    தீபனின் பெற்றோர் ராஜேஸ்வரிடம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு ராஜேஸ்வரி ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.

    இந்த நிலையில் தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    பின்னர் தீபனுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது டைரியில் கணவர் தீபன் 2-வது திருமணம் செய்து கொண்டத்தால் மன உளைச்சலில் உள்ளேன் என்று எழுதி வைத்துவிட்டு வீட்டின் அறையில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் இன்று அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் அருகே திரண்டனர்.

    அரக்கோணம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ராஜேஸ்வரி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • குடும்ப பிரச்சினையில் இளம்பெண் விஷம் குடித்து மயங்கினார்.
    • சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி கார்த்திகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து கார்த்திகா தனது பெற்றோரிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் மனோஜ்குமார் கார்த்திகாவின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கார்த்திகா விஷம்குடித்து மயங்கியதாகவும், அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார்.

    இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.
    • தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் விஜி (வயது 20). இவர் தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் திருப்பூர்-மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்துள்ளார்.

    இவர் கடந்த ஒரு ஆண்டாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய காதல் விவகாரம் விஜியின் தாயாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த விஜி கடந்த 7-ந்தேதி பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது தாயார் திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் பாராபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விஜி பிணமாக கிடந்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன உளைச்சலுக்கு ஆளான காவ்யா வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • திருமணமாகி 7 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்:

    பென்னாகரம் போடூர் காலனி பகுதியைச் சேர்ந்த காவ்யா (வயது 19). இவருக்கும் பாலக்கோடு அருகே எலுமிச்சனஅள்ளி பகுதியைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் விமல்குமார், மாமியார் பட்டு, கணவரின் அக்கா மஞ்சு ஆகியோர்கள் காவ்யாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது.

    இதனால் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு காவ்யா தனது தாயார் வீட்டிற்கு வந்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று விமல்குமார் காவ்யாவிடம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் காவ்யாவை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 7 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது.
    • பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆண்டாத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் சக்தி குமார்-அய்யம்மாள் தம்பதியினர். சக்திகுமாருக்கு முதல் திருமணமாகி விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக அய்யம்மாளை பெரியோர்கள் சம்மதத்துடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த நிலையில் அதற்கு சான்றாக கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தம்பதிக்கு சிவமணி என்ற ஆண் குழந்தை பிறந்தது. கொத்தனாராக வேலை பார்த்து வரும் சக்திகுமாருக்கு சில மாதங்களாக சரிவர வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்துள்ளது.

    இதன் காரணமாக குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. குழந்தையை வளர்க்கவும், குடும்பம் நடத்தவும் தம்பதியினர் தவித்து வந்தனர். இதனை சரிசெய்யும் நோக்கத்தில் அய்யம்மாள் தனியார் நிதி நிறுவன மகளிர் குழுவில் ரூ.50,000 கடன் பெற்று மாதந்தோறும் ரூ.2,300 தவணைத்தொகையாக செலுத்தி வந்தார்.

    கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது. பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர். மேலும் கால அவகாசம் கேட்ட அய்யமாளிடம் கடுமையான வார்த்தைகளினாலும் திட்டி தீர்த்துள்ளனர்.

    11 மாத கைக்குழந்தையுடன் அய்யம்மாள் கண்ணீர் வடித்து நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது குழு தொகையை கட்டியுள்ளனர். பலரது முன்னிலையில் அவமானமாக எண்ணிய அய்யம்மாள் கணவரிடமும், நெருங்கிய உறவினர்களிடமும் கூறி அழுதுள்ளார். கணவரும் அவரை தேற்றினார்.

    இந்த நிலையில் அண்டை வீட்டாருடன் பேசிக்கொண்டிருந்த அய்யம்மாள் இரவு வீட்டிற்குள் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதற்கிடையே வீட்டிற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் மட்டும் நீண்டநேரமாக கேட்டுக்கொண்டே இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அய்யம்மாள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதுபற்றி உடனடியாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் விரைந்து வந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி தலைமையிலான போலீசார் அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனியார் நிதி நிறுவன குழு பிரச்சனையால் அய்யம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாயை இழந்தது கூட தெரியாமல் தவித்து வந்த 11 மாத கைக்குழந்தையை உறவினர்கள் கையில் வைத்து கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி
    • கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளை யத்தை சேர்ந்தவர் பிரதீப். இவரது ரம்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற பிரதீப் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு சென்றார்.

    கணவர் குடித்து விட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த ரம்யா அவரை கண்டித்தார். அப்போது கணவர்-மனை விக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவே தனை அடைந்த ரம்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொ லைக்கு முயன்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதீப் தனது மனைவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு ரம்யாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விஷம் குடித்து மயங்கி கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்,

    காட்பாடி அடுத்த கன்னிகாபுரம் விநாயகர் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 17).

    இந்த நிலையில் ராஜேஸ்வரி அடிக்கடி செல்போன் பார்த்து வந்தார்.

    இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ராஜேஸ்வரி மன உளைச்சலில் காணப்பட்டார்.

    கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து ராஜேஸ்வரி மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட பெற்றோர் மயங்கி கிடந்த மகளை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேல்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேஸ்வரி கடந்த ஒரு மாதமாக வளசரவாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
    • இருவருக்கும் திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 25). இவர் கடந்த ஒரு மாதமாக வளசரவாக்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இதை கணவர் அருண்குமார் கண்டித்தார். இந்த நிலையில் நேற்று காலை அருண்குமார்-ராஜேஸ்வரி இடையே மீண்டும் செல்போனில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரி- அருண்குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். மேலும் இருவருக்கும் திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • காதலனுடன் சென்ற பவித்ரா தைலாவரத்தில் தங்கி குடும்பம் நடத்தி உள்ளார்.

    வண்டலூர்:

    வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் புருஷோத்தன். இவரது மனைவி பவித்ரா (வயது 25).இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 4 மாதத்துக்கு முன்பு பவித்ரா தனது மகளுடன் திடீரென மாயமானார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பவித்ரா ஏற்கனவே கல்லூரியில் படித்தபோது உடன் படித்த வாலிபருடன் நெருங்கி பழகி வந்ததும் அவருடன் ஓட்டம் பிடித்து இருந்ததும் தெரிந்தது.

    கூடுவாஞ்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பவித்ரா தங்கி இருந்தார். இதற்கிடையே பவித்ரா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது 6 வயது பெண் குழந்தை தவிப்பில் உள்ளது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காதலனுடன் சென்ற பவித்ரா தைலாவரத்தில் தங்கி குடும்பம் நடத்தி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் காதலன் பிரிந்து சென்று விட்டார். பின்னர் பவித்ரா பெற்றோரை சந்தித்து பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த பவித்ரா தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    • கடந்த 3 மாதமாக கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நஞ்சை கொளாநல்லி, சத்திரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கும் பவானி அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்த கோகிலா (30) என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14-ந் தேதி சத்திரம்பட்டிக்கு வந்த கோகிலாவின் தந்தை தனது மகள், மருமகன் மற்றும் பேரனை அழைத்து கொண்டு ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் 16-ந் தேதி மீண்டும் கோகிலா தனது கணவர், மகனுடன் சத்திரப்பட்டிக்கு சென்றார்.

    இந்நிலையில் கடந்த 17-ந் தேதி கோகிலா அவரது வீட்டின் அருகே தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து பெரியசாமி அவரது உறவினர்கள் சேர்ந்து கோகிலாவை மீட்டு கணபதிபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து கோகிலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது கோகிலா மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோகிலா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலா பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் கோகிலாவின் தந்தை சுப்பிரமணி மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சென்று தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×