என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஈரோடு அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
- கடந்த 3 மாதமாக கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நஞ்சை கொளாநல்லி, சத்திரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கும் பவானி அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்த கோகிலா (30) என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 மாதமாக கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14-ந் தேதி சத்திரம்பட்டிக்கு வந்த கோகிலாவின் தந்தை தனது மகள், மருமகன் மற்றும் பேரனை அழைத்து கொண்டு ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் 16-ந் தேதி மீண்டும் கோகிலா தனது கணவர், மகனுடன் சத்திரப்பட்டிக்கு சென்றார்.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி கோகிலா அவரது வீட்டின் அருகே தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து பெரியசாமி அவரது உறவினர்கள் சேர்ந்து கோகிலாவை மீட்டு கணபதிபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து கோகிலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது கோகிலா மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோகிலா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலா பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் கோகிலாவின் தந்தை சுப்பிரமணி மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சென்று தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்