என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கூடலூரில் இளம்பெண் தற்கொலை
- குடும்ப பிரச்சினையில் இளம்பெண் விஷம் குடித்து மயங்கினார்.
- சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி கார்த்திகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து கார்த்திகா தனது பெற்றோரிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் மனோஜ்குமார் கார்த்திகாவின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கார்த்திகா விஷம்குடித்து மயங்கியதாகவும், அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார்.
இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






