என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடலூரில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்14 Sep 2023 7:25 AM GMT
- குடும்ப பிரச்சினையில் இளம்பெண் விஷம் குடித்து மயங்கினார்.
- சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி கார்த்திகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து கார்த்திகா தனது பெற்றோரிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் மனோஜ்குமார் கார்த்திகாவின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கார்த்திகா விஷம்குடித்து மயங்கியதாகவும், அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார்.
இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X