search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தற்கொலை"

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சவுமியா சுந்தரி (வயது 27). எம்.எஸ்.சி பட்டதாரி.

    சவுமியா சுந்தரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுமியா சுந்தரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் கோமதி ரேகா மட்டும் தனியாக இருந்தார்.
    • கோமதி ரேகா கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதித்து இருந்ததாக தெரிகிறது.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு, ராஜா தோட்டம், முதலாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (42). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி ரேகா (வயது 39). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை சந்தோஷ் குமார், திண்டிவனத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குழந்தைகள் மற்றும் தாயுடன் சென்றார். வீட்டில் கோமதி ரேகா மட்டும் தனியாக இருந்தார்.

    இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கோமதி ரேகா திடீரென தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே இன்று காலை சிகிச்சை பலனின்றி கோமதி ரேகா பரிதாபமாக இறந்தார். கோமதி ரேகா கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதித்து இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேசன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மில்லில் வேலை செய்து வந்தார்.
    • இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அழகு சமுத்திர பட்டியை சேர்ந்தவர் மணிவேல். மில் தொழிலாளி. இவரது மனைவி சர்மிளா (35). இவரும் மில்லில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சர்மிளாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்த சுவேதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை சம்பவம் தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர், சிவசக்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மோகன். சென்னை மாநகராட்சி மண்டலம் 6-ல் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுவேதா (வயது 21). நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த சுவேதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • தற்கொலை சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சரிதா(வயது35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வேதனை அடைந்த சரிதா கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஜேந்திரன் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • லாவண்யா தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தொட்டம் பாளையத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி லாவண்யா (25). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கஜேந்திரன் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். லாவண்யா தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு லாவண்யா தனது அறையில் இருந்ததாகவும், அறையில் திடீரென குழந்தையின் சத்தம் அதிகமாக இருந்ததால் லாவண்யாவின் மாமனார் மற்றும் மாமியார் கதவை தட்டி பார்க்கும் பொழுது திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்க்கும் பொழுது லாவண்யா அறையில் சீலிங் பேனில் சேலையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    லாவண்யாவை இறக்கி பார்க்கும் பொழுது மூச்சு இல்லாததால் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே லாவண்யா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லாவண்யாவின் ஒரு வயது பெண் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை எனவும், தன்னுடைய குழந்தை குண்டாக இல்லை எனவும் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    • கடந்த 3 மாதங்களாக சதீஷ்குமாருடன் ஐஸ்வர்யா ஒரே வீட்டில் தங்கி இருந்தார்.
    • ஐஸ்வர்யாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் சதீஷ் குமார். தனியார் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி, 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் திருச்சியை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது22) என்பவரும் காதலித்து வந்தனர்.

    அவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மேலும் அவர்களது திருமணத்தை விரைவில் நடத்தவும் முடிவு செய்து இருந்தனர்.

    இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக சதீஷ்குமாருடன் ஐஸ்வர்யா ஒரே வீட்டில் தங்கி இருந்தார். நேற்று இரவு வெளியில் சென்று இருந்த சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு ஐஸ்வர்யா பேசியபோது திடீரென இணைப்பை துண்டித்து விட்டார். அப்போது அவர் மன உளைச்சலில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தேகமடைந்த சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் தனது தங்கையிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். சதீஷ்குமாரின் தங்கை வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்றனர்.

    அங்கு ஐஸ்வர்யா புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஐஸ்வர்யாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக சதீஷ்குமாரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாம்குமார், இவரது மனைவி சோனியா (வயது 23) இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

    சோனியாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சோனியா வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    இதை கண்ட அவருடைய கணவர் சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சோனியா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வடிவேலுவை தாக்கியதாக ராஜேஸ்வரியின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    ஆர்.கே.நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் வடிவேல். இவரும் திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஸ்வரியும் (வயது19) கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இது தொடர்பாக அவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே வடிவேலுவை தாக்கியதாக ராஜேஸ்வரியின் சகோதரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.
    • மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருேக உள்ள காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி (32), இவருக்கும் தருமபுரியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 11 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். இருவரும் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் 9 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்-மனைவி பிரிந்தனர்.

    2-வது திருமணம்

    சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். தமிழழகனும் மனைவியை பிரிந்து வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது ஜெயலெட்சுமிக்கும், தமிழழ கனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேலம் அம்மாப்பேட்டை பூவாத்தாள் தெருவில் மகள்களுடன் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த தமிழழகன், ஜெயலெட்சுமியுடன் தகரா றில் ஈடுபட்டார். அப்போது மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயலெட்சுமி குக்கர் மூடியால் தமிழழகனை தாக்கினார். இதையடுத்து ஜெயலெட்சுமியை தமிழழகனும் தாக்கினார்.

    தற்கொலை

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலெட்சுமி சமையல் அறையில் ஏற்கனவே உடைத்து தயாராக வைத்திருந்த பீ ர் பாட்டிலை எடுத்து நான் இருந்தால் தான் பிரச்சினை, நான் செத்து விடுகிறேன் என்ற கூறிய படி கழுத்தில் பீர் பாட்டிலால் தனக்கு தானே குத்தி கொண்டார்.

    இதனை பார்த்த தமிழழகனும், அவரது 2 மகள்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பின்னர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் சிறிது நேரத்தில் துடி துடித்து சம்பவ இடத்திேலயே இறந்து விட்டார்.

    தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழழகன் மற்றும் 2 மகள்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது-

    தமிழழகன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து ஜெயலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஜெயலெட்சுமியின் மூத்த மகள் மதிப்பெண் குறைந்தது குறித்து தமிழழகன் நேற்று கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழழகனும், ஜெயலெட்மியும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் உடைந்த ஜெயலெட்சுமி பீர் பாட்டிலை எடுத்து தனக்கு தானே கழுத்தில் குத்தி தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ேபாலீசார் தமிழழகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா பள்ளி அளவில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஆவார்.
    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் ஸ்வேதா (வயது 21).

    இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை கடந்த ஆண்டு முடித்தார். இதன் பின்னர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைக்காக நேர்முக தேர்வு வரை சென்றும் எதிலும் வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்வேதா அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு சென்றார். இதிலும் அவர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் வீடு திரும்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்வேதா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து பெற்றோர் அறைக்கு வந்து பார்த்த போது மகள் ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் நடத்திய சோதனையின் போது ஸ்வேதா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. அம்மாவை நன்றாக பார்த்து கொள்ளவும். தங்கையை நன்றாக பார்த்து கொள்ளவும். அம்மாவை வேலைக்கு அனுப்ப வேண்டாம். பூனையை பத்திரமாக பார்த்து கொள்ளவும் என்று எழுதி உள்ளார்.

    தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா பள்ளி அளவில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஆவார்.

    கல்லூரி படிப்பு முடித்து அவருக்கு வேலை கிடைக்காத நிலையில் அவரது தங்கை நல்ல நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டிற்கு மூத்தவளாக இருந்தும் வேலை கிடைக்காததால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற மன வேதனையில் அவர் தற்கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    • கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள கோவுகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கவுரி(22) என்பவருக்கும் சிவக்குமார்(25) என்பவருக்கும் கடந்த 9.9.2021-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்குபிறகு உடனடியாக குழந்தை வேண்டாம் என குழந்தை பிறப்பை தள்ளிபோட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கவுரியின் தாய் நாகலட்சுமி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் சிவக்குமாரின் கள்ளக்காதலால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. வளைகாப்பு சமயத்தில் இந்த பிரச்சனை நீடிக்கவே கவுரி சத்தம் போட்டுள்ளார்.

    அதற்கு சிவக்குமார் அவ்வாறுதான் இருப்பேன். உனக்கு இஷ்டம் இருந்தால் என்னுடன் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் செத்துபோ என கூறியுள்ளார். குழந்தை பிறந்த பிறகு மனைவிக்கு தெரியாமல் தனது வீட்டிற்கு குழந்தையை தூக்கி வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    கவுரியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் துன்புறுத்தி பேசியதால் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததும் உறுதியானது. இதனால் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    ×