search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teen commits suicide"

    • இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி கணக்கரசம்பாளை யத்தை சேர்ந்தவர் சீனி வாசன் (35). விவசாயி. இவருக்கும் கர்நாடகா மாநிலம் சம்ராஜ் நகர் கான கஹள்ளி பகுதியை சேர்ந்த மாதவ நாய்க்கர் மகள் பிரியா (30) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது.

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சீனி வாசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த பிரியா கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த கலைக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரியாவை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரியா இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசில் பிரியாவின் தாய் ரத்னாம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    • இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது மனைவி மேனகா (வயது 22). இவர் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மேனகா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் பின்னர் திரும்பி வருவதுமாக இருந்தார்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மேனகா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு ெதாங்கினார்.

    மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த விமல்ராஜ் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.அங்கு மேனகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்து கொண்ட சில ஆண்டுகளிலேயே மேனகா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. 

    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபிநயாவுக்கு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

    கோவை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கருதம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. பெயிண்டர். இவரது மகள் அபிநயா (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவர் பீளமேடு அருகே உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயாவுக்கு அவரது ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபிநயாவுக்கு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதனையடுத்து அவர் கோவைக்கு வந்தார்.

    இதன்காரணமாக காதலர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. மேலும் அடிக்கடி 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர் அபிநயாவுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அபிநயா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று விடுதியில் உள்ள அறையில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அபிநயாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அபிநயா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள பாலாஜி லே-அவுட்டை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சுரேந்திரன் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடனடியாக சுரேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய தனது மனைவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரெஜிதா(28). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மனவேதனை அடைந்த ரெஜிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டி பூம்புகார் நகரை சேர்ந்தவர் சரவணகுமார்(24). தொழிலாளி. இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×