search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இளம்பெண் தற்கொலை
    X

    கோவையில் இளம்பெண் தற்கொலை

    • தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள பாலாஜி லே-அவுட்டை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சுரேந்திரன் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடனடியாக சுரேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய தனது மனைவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×