search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
    X

    விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

    • இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி கணக்கரசம்பாளை யத்தை சேர்ந்தவர் சீனி வாசன் (35). விவசாயி. இவருக்கும் கர்நாடகா மாநிலம் சம்ராஜ் நகர் கான கஹள்ளி பகுதியை சேர்ந்த மாதவ நாய்க்கர் மகள் பிரியா (30) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது.

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சீனி வாசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த பிரியா கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த கலைக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரியாவை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரியா இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசில் பிரியாவின் தாய் ரத்னாம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Next Story
    ×