search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் மறியல்"

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகேந்திரனை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரன் உறவினர்கள் திண்டிவனம் -திருவண்ணா மலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் 35, இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இவர் பட்டணத்தில் இருந்து வெண்மணி ஆத்தூ ரில் உள்ள அவரது உறவி னர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாக னத்தில் மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சென்னையில் இருந்து செஞ்சி வந்த மினி லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய மினி வேனை அடித்து நொறுக்கினர்.அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகேந்திரனை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மகேந்திரன் உறவினர்கள் திண்டிவனம் -திருவண்ணா மலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வெகு நேரம் ஆகியும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வராததால் மகேந்திரன் உடலை ரோட்டில் ஓரமாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் திருவண்ணாமலை -திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்த வந்த ரோசனை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மகேந்திரன் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்சில் அனுப்பி வைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.மறியல் காரணமாக சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேலாக வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றது . இதுகுறித்து யோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மினி வேனின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக் குள்ளானது ெதரிய வந்தது.

    • தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரும் தீபன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    தீபனின் பெற்றோர் ராஜேஸ்வரிடம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு ராஜேஸ்வரி ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.

    இந்த நிலையில் தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    பின்னர் தீபனுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது டைரியில் கணவர் தீபன் 2-வது திருமணம் செய்து கொண்டத்தால் மன உளைச்சலில் உள்ளேன் என்று எழுதி வைத்துவிட்டு வீட்டின் அறையில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் இன்று அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் அருகே திரண்டனர்.

    அரக்கோணம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ராஜேஸ்வரி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
    • வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). தம்பதியருக்கு பாண்டியன் (25), அசோக்குமார் (23) என்ற 2 மகன்களும், அபிநயா (19) என்ற மகளும்  உள்ளனர்.

    வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். நேற்று மதியம் 12 மணியளவில் ஆடுகளை அருகில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.

    ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீட்டிற்கு தேவையான விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வளர்மதி காதில் அணிந்திருந்த 1/2 பவுன் நகைக்காக அவரது காதை கத்தியால் அறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி அங்கிருந்து தப்பி ஓடினார்.

    வளர்மதியை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அவரை மடக்கி கழுத்து அறுத்து கொலை செய்தனர்.

    ரத்த வெள்ளத்தில் வளர்மதி பிணமாக கிடந்தார். மாலை 4 மணிக்கு அந்த வழியாக சென்ற மலர் என்ற பெண் வளர்மதியின் பிணத்தைப் பார்த்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக இதுகுறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த குடியாத்தம் டிஎஸ்பி பொறுப்பு இருதயராஜ் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவ இடத்திற்கு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சாரா சம்பவ இடத்திலிருந்து சாத்கர் கிராமம் கீழ் ரோடு வழியாக கானாற்றில் உள்ள கிணறு வரை 2 கிலோமீட்டர் தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கைரேகை நிபுணர் தமிழ்மணி, தடவியல் நிபுணர் சேதுராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வளர்மதியின் பிணைத்த மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை வளர்மதியின் கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி வளர்மதியின் உறவினர்கள் மற்றும் சாத்கர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாவில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு
    • கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு

    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் மேக்களூர் டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.

    பைக்ககள் மோதி விபத்து

    நேற்று மாலை திருவண்ணாமலைக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். சோமாசிபாடி அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது இவரது பைக் மோதியது. இதில் ராஜேந்திரனுக் எதிரே வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

    அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ராஜேந்திரனை அந்த வழி யாக காரில் வந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையில் காரில் வந்த வர்களுக்கும், ராஜேந்திரனுக் கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    காரை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனையின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜேந்தி ரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

    அப்போது பிரேத பரிசோதனை அறை அருகில் காரில் ராஜேந்திரன் உடல் இருந்ததை கண்ட அவர்கள் காரில் வந்தவர்களிடம் முன்விரோ தம் காரணமாக வேண்டும் என்றே கால தாமதமாக கொண்டுவந்து கொன்றுவிட் டதாக கூறி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.

    போலீசார் சம்பவ இடத் திற்கு வருவதற்குள் காரில் வந்தவர்களை அவர்கள் தாக் கியதால் பரபரப்பு ஏற்பட் டது. அப்போது வந்த போலீ சார் அவர்களை மீட்டு சிகிச் சைக்காசுமருத்து வமனையில் சேர்த்தனர். இதனிடையே ராஜேந்திரனின் உடலுடன் காரை மருதுவமனைக்கு முன்பு எடுத்து வந்து புறவழிச்சாலையில் நடு வில் நிறுத்தினர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையி லான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது ராஜேந்திரனில் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறினர். எழுத்து பூர்வ மாக புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்த னர்.

    போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங் கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் மூர்த்தி (வயது 47). இவர் கடந்த 20-ந் தேதி இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது பெட்ரோல் வாசனை அடித்தது. வெளியில் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் பெட்ரோல் திருடிக் ெகாண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் ஒருவனை பிடித்தபோது அதே ஊரைச் சேர்ந்த மரியநாதன் என்பவர் மகன் ராஜா என்பது தெரிந்தது.

    இது குறித்து கெடார் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த மரியநாதன், தனது மகன் ராஜாவை மூர்த்தி தாக்கிவிட்டு ஜாதியை சொல்லி திட்டியதாகவும் புகார் அளித்தார். புகாரினை பெற்ற போலீசார் மூர்த்தி மற்றும் ராஜா மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து கடும் மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா என்பவர் நேற்று இரவு அவரது ஓட்டு வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கெடார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க சூரப்பட்டு கிராமத்திற்கு வந்தனர். 

    அப்போது ராஜாவின் உறவினர்கள் ராஜா தற்கொலை செய்துகொள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் வெங்கடேசன், மூர்த்தி ஆகியோர் தான் காரணம். எனவே, அவர்களை கைது செய்ய வேண்டுமென விழுப்புரம்-திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் வந்து புகார் மனு கொடுக்க அறிவுறு த்தினார். இதையடுத்து சாலை மறியலை ராஜாவின் உறவினர்கள் கைவிட்டனர். ராஜாவின் உடலை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அக்கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள் தவறான சிகிச்சை தான் வளர்மதியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.
    • அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வட்டாட்சியர் ராஜராஜன், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி அருகேயுள்ள பெரியாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வளர்மதி. இவருக்கு கருப்பையில் ஏற்பட்ட நோய்க்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

    இதையடுத்து தருமபுரி-சேலம் நேதாஜி பைபாஸ் சாலையில் மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வளர்மதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

    கடந்த 22-ந்தேதியன்று வளர்மதிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு வளர்மதியின் மூளை செயல் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார்.

    வளர்மதியை மீட்பதற்கு பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு முயற்சித்துள்ளனர்.

    பல லட்ச ரூபாய் செலவழித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வளர்மதியை கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி வளர்மதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதியின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு தருமபுரி வந்தனர்.

    பின்னர் மத்திய கூட்டுறவு வங்கி அருகேயுள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு திரண்ட அவர்கள் தவறான சிகிச்சை தான் வளர்மதியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வட்டாட்சியர் ராஜராஜன், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • சாம்ராஜை தாக்கிய மாணவியின் தந்தையை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் களம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆரணி திருவண்ணாமலை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவருடைய 2-வது மகன் சாம்ராஜ் (வயது 21) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் அதே பகுதியில் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

    இதற்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாணவி சாம்ராஜூடன் பேசுவதை நிறுத்தினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாம்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷ், சந்தோஷ் ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவியின் தந்தை சாம்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சாம்ராஜ் அவரது உறவினர் ஒருவரிடம் செல்போனில் விவரங்களை தெரிவித்துள்ளார்.

    பின்னர் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட சாம்ராஜின் தாய் செல்வராணி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். தூக்கில் தொங்கிய சாம்ராஜை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சாம்ராஜை தாக்கிய மாணவியின் தந்தையை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் களம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆரணி திருவண்ணாமலை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். களம்பூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வாலிபரை தாக்கியதாக கூறப்படும் மாணவியின் தந்தை தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • விபத்தை ஏற்படுத்தி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    வடவள்ளி,

    கோவை பூலுவப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்தவர் விதர்சன் (வயது 18).

    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜீவரத்தினம் (39) என்பவரும் நேற்று வேலைக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    சிறுவாணி மெயின் ரோடு அப்புச்சிமார் கோவில் மண்டபம் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விதர்சனும், ஜீவரத்தினமும் தூக்கி வீசப்பட்டனர்.

    விதர்சன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ஜீவரத்தினத்தை அந்த பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    விதர்சன் மரணம் அடைந்தது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் ஏராளமானோர் சிறுவாணி மெயின் ரோட்டில் திரண்டனர். அவர்கள் விதர்சன் மரணத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக எந்தவொரு வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

    அந்த பகுதி முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த பேரூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவி டாமல் இன்ஸ்பெக்டரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை ஆகியோரும் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்தை ஏற்படுத்தி டிரைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் கைவிடப்பட்ட பிறகே போக்குவரத்து சீரானது. 

    இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்தில் உள்ள உறவினர் சச்சிதானந்தத்தின் மகள் வைஷ்ணவியை (24) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    தினேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தினேசுக்கும், வைஷ்ணவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் வைஷ்ணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறினர். மேலும் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வைஷ்ணவியை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக உடையார்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷ்ணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஆர்.டி.ஓ. பரிமளம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது."

    வானூர் அருகே டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தொள்ளமூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பி.இ. முடித்த இவர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.தற்போது விடுமுறைக்காக ராஜ்குமார் ஊருக்கு வந்திருந்தார். அங்கிருந்து மோட்டார் ைசக்கிளில் இன்று காலை புதுவை மாநிலம் புதுக்குப்பம் நோக்கிசென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜ்குமார் சம்பவ இடத்தில் இறந்தார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல்அறிந்த வானூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.இன்று நடந்த அரசுநிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு கலெக்டர் ேமாகன் சென்றார். அப்போது மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

    • தருமபுரி அருகே சாலைமறியல் நடந்தது.
    • அரசு மருத்துவமனையை கண்டித்து நடத்தினர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சித்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது60). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு சித்திரப்பட்டி பஸ் நிறுத்ததிலிருந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாலக்கோட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கோவிந்தசாமி மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த நிலையில் அவரது உடலை நாளை காலை பிரேத பரிசோதனை செய்து தருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் நேற்று நண்பகல் வரை பிரேத பரிசோதனை செய்யவில்லை, மருத்துவ உதவியாளர் வரவில்லை, ஒரே ஒருவர் தான் உள்ளார். அவர் வந்தால் தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும். மருத்துவமனையில் போதிய ஆட்கள் இல்லை என தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கோவிந்த சாமியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு உள்ள பைபாஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் பேசி கூட்டத்தை கலைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வானூர் அருகே இன்று விபத்து வேன் கவிழ்ந்து 17 பெண் தொழிலாளர்கள் படுகாயம் நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த சாலை புதுவைக்கு வரக்கூடிய முக்கிய பகுதியாகும். வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோபுட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிஸ்கெட் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் வானூர், தைலாபுரம், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக கம்பெனி வேன்கள் ஆட்களை ஏற்றி, இறக்கிவிட்டு சென்றுவருகிறது. அதன்படி இன்று காலை தைலாபுரத்தில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று ஆரோபுட் நோக்கி வந்தது. இந்த வேனில் 18 பெண் தொழிலாளர்கள் இருந்தனர். வேனை டிரைவர் ராஜா ஓட்டினார்.  இந்த வேன் காட்ராம்பாக்கம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக நின்ற வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த சாலை புதுவைக்கு வரக்கூடிய முக்கிய பகுதியாகும். வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 17 பேர் படுகாயத்துடன் அலறி துடித்தனர்.

    அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். தகவல் அறிந்த வானூர் மற்றும் ஆரோவில் போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்த 17 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் விபத்தில் படுகாயம் அடைந்த பெண்களின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் அங்கு விரைந்தனர். மறியல் செய்தவர்களு டன், இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    ×