என் மலர்
நீங்கள் தேடியது "relatives strike"
- சாவில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு
- கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை:
கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் மேக்களூர் டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.
பைக்ககள் மோதி விபத்து
நேற்று மாலை திருவண்ணாமலைக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். சோமாசிபாடி அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது இவரது பைக் மோதியது. இதில் ராஜேந்திரனுக் எதிரே வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ராஜேந்திரனை அந்த வழி யாக காரில் வந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில் காரில் வந்த வர்களுக்கும், ராஜேந்திரனுக் கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காரை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனையின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜேந்தி ரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
அப்போது பிரேத பரிசோதனை அறை அருகில் காரில் ராஜேந்திரன் உடல் இருந்ததை கண்ட அவர்கள் காரில் வந்தவர்களிடம் முன்விரோ தம் காரணமாக வேண்டும் என்றே கால தாமதமாக கொண்டுவந்து கொன்றுவிட் டதாக கூறி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
போலீசார் சம்பவ இடத் திற்கு வருவதற்குள் காரில் வந்தவர்களை அவர்கள் தாக் கியதால் பரபரப்பு ஏற்பட் டது. அப்போது வந்த போலீ சார் அவர்களை மீட்டு சிகிச் சைக்காசுமருத்து வமனையில் சேர்த்தனர். இதனிடையே ராஜேந்திரனின் உடலுடன் காரை மருதுவமனைக்கு முன்பு எடுத்து வந்து புறவழிச்சாலையில் நடு வில் நிறுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையி லான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ராஜேந்திரனில் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறினர். எழுத்து பூர்வ மாக புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்த னர்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங் கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது 12 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நேற்று சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தார். அவரது தாய் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.
அப்போது சிறுமி வாயில் மின் வயரை கடித்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கீறல்களும், ரத்த காயமும் இருந்தது.
இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டுக்கு அருகே உள்ள 3 சிறுவர்களே இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் அங்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு சிறுமி கொலை செய்யப்பட்டாரா? என்றும் அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மறியல் முடிவுக்கு வந்தது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் திடீர் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் அவரது மகள் மஞ்சுளாதேவி (வயது 18). இவர் திண்டுக்கல் அம்பாதுறையில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று மதுரைக்கு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்ததில் அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகன் ஜெயபாண்டியனுடன் மஞ்சுளா தேவி மாயமாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து மஞ்சுளாதேவியின் தாயார் கோமதி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.