search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கற்பழிப்பு"

    • கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சுருளியில் கோடிலிங்கம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
    • அதன்பிறகு முத்துலட்சுமியுடன் பாண்டியன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் முத்துலட்சுமி(22). நர்சிங் படித்து முடித்துள்ள இவர் கம்பத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார். இவரும் போடி அருகில் உள்ள வாழையாத்துப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பாண்டியன்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சுருளியில் கோடிலிங்கம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு முத்துலட்சுமியுடன் பாண்டியன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் 5 மாத கர்ப்பிணியானார். இதனால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்துச்செல்லுமாறு கூறினார்.

    ஆனால் பாண்டியன் திருமணத்திற்கு மறுத்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும் பாண்டியனை மறந்துவிடும்படியும், கருவை கலைத்துவிடும்படியும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.

    அவரது தந்தை ஈஸ்வரன், தாய் ஈஸ்வரி, சித்தி வசந்தி, பெரியம்மா செல்வி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார்.
    • 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் விஜயவாடா பெங்கி சர்க்கிளில் உள்ள ஷாப்பிங் மாலில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வேலை செய்து வருகிறார். பணிக்கு சென்று வரும்போது இளம்பெண்ணுக்கும் வாலிபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் நைசாக பேசிய வாலிபர் அவரை கானூர் சனத் நகரில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குச் சென்றதும் இளம்பெண்ணும் வாலிபரும் சேர்ந்து மது அருந்தினர்.

    இதையடுத்து வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார். 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து இளம்பெண்ணை அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

    இதனால் இளம்பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இளம்பெண்ணை தூக்கி வந்து அங்குள்ள சாலையோரம் வீசிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரம் இளம்பெண் படுத்து கிடப்பதை கண்டு பெனுமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு மலிகா கார்க் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார்.
    • குற்றவாளிகள் 2 பேரும் ஆலூர் சாலையில் உள்ள இறால் பண்ணையில் வேலை செய்து வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஓங்கோல் மாவட்டம் ஆலுரு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். திருமணமான இவர் ஓங்கோல் நகரில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் வியாபாரம் முடித்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் தங்களது பைக்கில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வந்தனர்.

    ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் சாலை வெறிச்சோடிய இடத்தில் இளம்பெண் பைக்கை மடக்கி நிறுத்தினர்.

    பின்னர் இளம்பெண்ணை அங்குள்ள பண்ணைக்கு தூக்கிச் சென்றனர்.

    அங்கு வைத்து இருவரும் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் வாலிபர்கள் தப்பி சென்று விட்டனர். அங்கிருந்து வீட்டிற்கு வந்த இளம்பெண் இதுகுறித்து தனது தாயிடம் கூறினார்.

    அவர் ஓங்கோல் தாலுகா போலீசில் புகார் செய்தார். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். போலீஸ் சூப்பிரண்டு மலிகா கார்க் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார். குற்றவாளிகள் 2 பேரும் ஆலூர் சாலையில் உள்ள இறால் பண்ணையில் வேலை செய்து வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அங்கு வேலை செய்யும் வாலிபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேலத்தில் டைரக்டர் ஒருவர் சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை சீரழித்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    • அச்சம்பவம் அடங்குவதற்குள் கோவையிலும் அதேபோன்றதொரு சம்பவம் நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.

    கோவை:

    திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் இன்று காலை கோவையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார்.

    நான் எனது 17 வயதில் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பேஸ்புக்கில் புதிய சினிமா படத்துக்கு கதாநாயகி தேர்வு நடப்பதாக கூறி அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு அந்த அறிவிப்பு வெளியிட்டவரை தொடர்பு கொண்டேன்.

    அதற்கு அந்த நபர் பொள்ளாச்சிக்கு வருமாறும், அங்கு தான் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும் தெரிவித்தார். அதனை நம்பி நான் பொள்ளாச்சியில் அவர் சொன்ன இடத்துக்கு சென்றேன். அங்கு கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இருந்தார். அவருடன் மேலும் சிலர் இருந்தனர். சிறிது நேரம் சினிமா தொடர்பாக அவர்கள் என்னிடம் பேசினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

    நானும் அந்த வாலிபரும் மட்டும் தனியாக அங்கு இருந்தோம். அப்போது எனக்கு அந்த வாலிபர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். நான் குளிர்பானம் குடித்ததும் மயங்கி விட்டேன். அதனை பயன்படுத்திக் கொண்ட வாலிபர் என்னை கற்பழித்தார். மறுநாள் காலை நான் விழித்தெழுந்து பார்த்தபோது நான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்தேன்.

    இதனால் அந்த வாலிபரை நான் கண்டித்தேன், கண்ணீர் சிந்தித்தேன். உடனே அந்த வாலிபர் நான் தான் இந்த படத்துக்கு தயாரிப்பாளர். உன்னை கதாநாயகி ஆக்குவதோடு மட்டுமல்லாமல் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தை கூறினார். அதனையும் நான் உண்மை என நம்பினேன். பின்னர் அடிக்கடி சினிமா டிஸ்கஷன் என்று என்னை பொள்ளாச்சிக்கு அழைத்தார். அப்படி பொள்ளாச்சிக்கு வரும்போது என்னை பலமுறை அவர் கற்பழித்தார்.

    இதனால் என்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பிடிவாதம் பிடித்தேன். அப்போது கொரோனா நேரமாக இருந்ததால் ஆன்லைன் மூலம் பதிவு செய்து என்னை அவர் திருமணம் செய்தார். நாங்கள் கோவையில் வீடு எடுத்து தங்கியிருந்தோம்.

    அப்போது தான் எனக்கு அந்த வாலிபர் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் வந்தது. அதுபற்றி அவரிடம் கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. என்னை ஊரறிய திருமணம் செய்து கொள் என்று சொன்னபோது என்னை விட்டு விட்டு அவர் தலைமறைவானார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அதனை ஒரு பெண் எடுத்து பேசினார். எனது கணவரிடம் உனக்கு என்னடி பேச்சு என கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன்மூலம் என்னை ஏமாற்றிய வாலிபர் மேலும் பல பெண்களை ஏமாற்றிய விவரம் உறுதியானது.

    எனவே என்னை ஏமாற்றிய கரூர் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியிருந்தார்.

    அந்த பெண்ணுடன் கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த 31 வயது பெண்ணும் வந்திருந்தார். அவரும் கரூர் வாலிபரால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். அவரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மற்றொரு மனு கொடுத்தார்.

    அதில் நான் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். அப்போது எனது திருமணத்துக்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தேன். அதனை பார்த்து கரூர் வாலிபர் என்னை தொடர்பு கொண்டார். மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றுவதாக ஏமாற்றி 2020-ம் ஆண்டு என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். 42 பவுன் நகை மற்றும் பணம் வரதட்சணை கொடுத்து எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

    வேடப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது மத்திய அரசு வேலை போய் விட்டதாகவும், தற்போது கடனை அடைக்க பணம் வேண்டும் என்றும் கேட்டார். ஒரு நாள் தூக்கில் தொங்குவது போல் நடித்தார். உடனே நாங்கள் சமாதானப்படுத்தி ரூ.15 லட்சம் பணம் புரட்டிக் கொடுத்தோம்.

    அதன்பிறகு வங்கி பணிக்கு செல்வதாக கூறி எனது நகைகளை வாங்கி விற்றார். இதுபற்றி கேட்டபோது என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். மேலும் நாங்கள் 2 பேரும் தனிமையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்டர்நெட்டில் பரப்பி விடுவதாக கூறி மிரட்டினார். இந்த விவகாரம் போலீஸ்நிலையம் வரை சென்றது. அதன்பிறகு என்னை விட்டுச் சென்றவர் திரும்பி வரவே இல்லை.

    இந்தநிலையில் என்னை போல் 10-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றிய விவரம் எனக்கு தெரிந்தது. திருவாரூர் கல்லூரி மாணவி ஒருவரும் அவரால் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். 2 பேரும் இன்று புகார் செய்வதற்காக வந்தோம்.

    எங்களை போன்ற பெண்களை ஏமாற்றி நகை பறிக்கும் அந்த வாலிபர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

    சேலத்தில் டைரக்டர் ஒருவர் சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை சீரழித்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் அடங்குவதற்குள் கோவையிலும் அதேபோன்றதொரு சம்பவம் நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.

    • தமிழக பெண், கடந்த மாதம் 23-ந்தேதி தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலம் கண்ணூர் சென்றார்.
    • கண்ணூரில் தங்கியிருந்த தமிழக பெண், கண்ணூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் மலர்.

    மலரின் உறவினர்கள் தமிழகத்தில் வசித்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலரை தொடர்பு கொண்டு தனக்கு கேரளாவில் ஏதாவது ஒரு வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

    அதற்கு ஒப்புக்கொண்ட மலர், அந்த பெண்ணை கேரளா வருமாறு அழைத்தார். கேரளா வந்தால் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பிய தமிழக பெண், கடந்த மாதம் 23-ந்தேதி தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலம் கண்ணூர் சென்றார்.

    கண்ணூரில் தங்கியிருந்த தமிழக பெண், கண்ணூர் போலீசில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த தன்னிடம், மலர் வீடு மாறி செல்வதாக கூறினார்.

    அதனை நம்பி நானும் அவருடன் சென்றேன். அங்கு சென்றதும் எனக்கு குளிர்பானம் கொடுத்தனர். அதில் மயக்க மருந்து கலந்துள்ளனர். அதனை குடித்ததும் நான் மயங்கி விட்டேன்.

    அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் என்னை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். கண்விழித்து பார்த்த பின்னர் தான் இந்த விவகாரம் எனக்கு தெரியவந்தது. இதில் என்னை அந்த வீட்டிற்கு அழைத்து சென்ற மலருக்கும் தொடர்பு உள்ளது. எனவே போலீசார் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.

    கண்ணூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தமிழக பெண் புகாரில் குறிப்பிட்டிருந்த மலரையும் பிடித்து விசாரித்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் ஒரு வாலிபர் உள்பட 3 பேரை கண்ணூர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண் தினசரி டீ கடைக்கு சென்றுவிட்டு இரவில் வாடகை கார் மூலம் வீடு திரும்புவது வழக்கம்.
    • கார் டிரைவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    போரூர்:

    மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே காரில் சென்ற இளம்பெண்ணை 6 பேர் கும்பல் கடத்தி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் அணிந்து இருந்த 8 பவுன் நகையும் கொள்ளை போனது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன் தாங்கலை சேர்ந்த சூர்யா, கருப்பையா, தினேஷ், சுரேஷ், சந்தோஷ், ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    விசாரணையில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் கார் டிரைவருடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை நோட்டமிட்டு 6 வாலிபர்களும் அவரை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்து இருப்பது தற்போது தெரியவந்து உள்ளது.

    பாதிக்கப்பட்ட இளம்பெண் கணவருடன் மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். அவர்கள் போரூர் சுங்கச்சாவடி அருகே டீ கடை நடத்தி வருகின்றனர். இளம்பெண் தினசரி டீ கடைக்கு சென்றுவிட்டு இரவில் வாடகை கார் மூலம் வீடு திரும்புவது வழக்கம். அப்போது கார் டிரைவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இரவு 11மணி அளவில் அந்த பெண் வழக்கம் போல் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கொளுந்துவாஞ்சேரி பகுதியில் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவருடன் தனிமையில் நெருக்கமாக இருந்து உள்ளார்.

    இதை கண்ட அங்கு வந்த வாலிபர் ஒருவர் "நீங்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்" என்று கேட்டு உள்ளார். அப்போது "நானும் இந்த ஏரியா தான் கிளம்பி போ" என்று இளம்பெண் கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரத்தில் இளம்பெண் திடீரென அந்த வாலிபரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் உடனடியாக தனது நண்பர்கள் 5 பேரை போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்து உள்ளார். அவர்கள் கார் டிரைவரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டிவிட்டு பின்னர் கத்தி முனையில் இளம்பெண்ணை மிரட்டி காரில் ஏற்றி கடத்தி சென்று உள்ளனர்.

    பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்து அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளையும் பறித்து தப்பி சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையிலான தனிப்படை போலீசார் சூர்யா உள்ளிட்ட 6பேர் கும்பலை கைது செய்து உள்ளனர்.

    அவர்கள் மீது கற்பழிப்பு, கூட்டுக் கொள்ளை, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுபோதையில் இளம்பெண் வீட்டிற்கு வந்த ஷர்மாலால் வீட்டு கதவை தட்டினார்.
    • தூக்க கலக்கத்தில் இருந்த இளம்பெண் எழுந்து வந்து கதவை திறந்த போது ஷர்மாலால் திடீரென மயக்க ஸ்பிரேவை எடுத்து இளம்பெண் முகத்தில் அடித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், ஷம்ஷாபாத்தில் ராஜீவ் காந்தி விமான நிலையம் உள்ளது. ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் இறந்து விட்டார். இளம் பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவர் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் அதே விமான நிலையத்தில் ஷர்மா லால் (35) என்பவர் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் இளம்பெண் வீட்டிற்கு வந்த ஷர்மாலால் வீட்டு கதவை தட்டினார். தூக்க கலக்கத்தில் இருந்த இளம்பெண் எழுந்து வந்து கதவை திறந்த போது ஷர்மாலால் திடீரென மயக்க ஸ்பிரேவை எடுத்து இளம்பெண் முகத்தில் அடித்தார்.

    இதனை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண் கத்தி கூச்சலிட முயற்சித்தார். அப்போது ஷர்மாலால் தனது கைக்குட்டையால் இளம்பெண்ணின் வாயை பொத்தி வீட்டிற்குள் தூக்கிச் சென்றார். அதற்குள் இளம்பெண் மயக்கம் அடைந்ததால் அவரை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் தனக்கு நடந்த கொடுமையை நினைத்து கதறி அழுதார். இதுகுறித்து ஷம்ஷாபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மா லாலை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.
    • பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.

    பண்ருட்டி:

    கடலூர் பண்ருட்டி பலாப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார்.

    அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இளங்கோவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இளங்கோவன் அதற்கு மறுத்துவிட்டார்.

    எனவே இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து வாலிபர் இளங்கோவனை கைது செய்தனர்.

    • இளம்பெண் முக்கோட்டி கோவில் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்தார்.
    • காவலாளி உடனடியாக 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி தொண்டவாடா வனப்பகுதிக்கு நேற்று இரவு ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி வந்து ஆட்டோவில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டார். இருப்பினும் அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

    அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த இளம்பெண் முக்கோட்டி கோவில் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்தார். காவலாளி உடனடியாக 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    போலீசாரை கண்டதும் 4 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று இரவு முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து இளம்பெண் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணை கடத்திச்சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் ஆகாமல் 3 குழந்தைகளுக்கு தாயானார்
    • டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் நடவடிக்கை

    கோவை :

    கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் ரங்கா நகரில் உள்ள பழைய கட்டிடத்தில் 50 வயது தந்தையுடன் 27 வயது மதிக்க தக்க இளம்பெண் வசித்து வந்தார்.

    அவருக்கு திருமணமா கவில்லை. இவருக்கு 2018-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும், 2020-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. 2 குழந்தைகளையும் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் அவரது தந்தை ஒப்படைத்தார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைகளுக்கு தந்தை யார்? என்று தெரிய வில்லை.

    இது குறித்து சமூக நலத்துறை அலுவலர் தங்கமணி பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பேரூர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு தலைமையிலான போலீசார் இளம்பெண் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் இளம்பெண்ணிடம் கர்ப்பத்துக்கு யார்? காரணம் என விசாரித்தனர். ஆனால் அதற்கு இளம்பெண் யார் என்று தெரியாது என கூறிவிட்டார்.

    இதனையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள் இளம்பெண்ணின் தந்தை தான் அவரது கர்ப்பத்துக்கு காரணம் என கூறினர். அவரது நடவடிக்கைகள் சரியில்லை எனவும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். நான் பெண்ணின் தந்தை இப்படி எல்லாம் செய்வேனா என கூறி மறுத்து விட்டார். விசாரணை முடிந்ததும் போலீசார் இளம்பெண் மற்றும் அவரது தந்தை ஆகியோரை பதுவம்பள்ளில் உள்ள காப்பத்தில் சேர்த்தனர்.

    மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்காக பேரூர் போலீசார் இளம்பெண், அவரது தந்தை மற்றும் குழந்தைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். மேலும் இளம்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி யாரா வது வந்து சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • இளம்பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியை வாலிபர் ஒருவர் செல்போனில் லைவ் ஆக காட்டிய அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
    • காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

    போபால்:

    குவாலியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கும் 20 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

    இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். மேலும் மாலை நேரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். காதலன் மீது இருந்த நம்பிக்கையில் அவள் தன்னையே அவனிடம் ஒப்படைத்தாள். இது தான் அவளுக்கு வினையாக முடிந்தது. ஒருநாள் அந்த வாலிபர் காதலியை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றான். அவனுடன் நண்பன் ஒருவனும் சென்றான்.

    நண்பனுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு காதலன் வற்புறுத்தினான். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தாள். இதனால் 2 பேரும் சேர்ந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உனது தந்தையையும், சகோதரரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் மனசுக்குள்ளேயே வைத்து இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 2 பேரும் கடந்த ஒரு ஆண்டாக அவளை பாலியல் சித்ரவதை செய்து வந்தனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்தனர்.

    அதில் ஒருவன் அந்த பெண்ணை காதலன் கற்பழிப்பதை தனது நண்பர்களுக்கு செல்போனில் 'லைவ்' ஆக காட்டினான். இதனை அவர்கள் பார்த்து ரசித்து வந்தனர்.

    அதை அறிந்த அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி தங்களது ஆசைக்கு இணங்க வைத்தனர். இதனால் பயந்து போய் அவள் பெற்றோருக்கு கூட இதை சொல்லாமல் மறைத்து விட்டாள். இந்தநிலையில் அவளுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

    மாப்பிள்னை பார்த்து நிச்சயமும் செய்தனர். இந்த சூழ்நிலையில் இதை அறிந்த காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

    அதன் பிறகுதான் இளம்பெண்ணின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தது. இதுதொடர்பாக அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணம் அருகே குளிர் பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த பட்டுப்புடவை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பட்டுப்புடவை விற்பனை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    திருபுவனம் காத்தாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பா (வயது 43). பட்டுப்புடவை வியாபாரி.

    இவர் தொழில் விசயமாக அடிக்கடி அந்த பெண் வேலை பார்க்கும் கடைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் சின்னப்பாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் தந்தை மஞ்சள் காமாலை நோயால் இறந்து விட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டிற்கும் சென்று சின்னப்பா குடும்ப நண்பர் போல் பழகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சின்னப்பாவின் மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சாப்பிட வரும்படி அந்த பெண்ணை சின்னப்பா அழைத்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த அந்த பெண்ணுக்கு சின்னப்பா, குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார்.

    அதனை குடித்த சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கி விட்டார். மயங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணை சின்னப்பா கற்பழித்துள்ளார். உடல் நிலை மோசமாக திரும்பிய அந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். இதனையடுத்து திருவிடைமருதூர் போலீசார், புகாரை கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான சின்னப்பாவிற்கு மனைவியும், 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×