search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விமான நிலைய பணிப்பெண் பலாத்காரம்- உடன் வேலை செய்யும் வாலிபர் அத்துமீறல்
    X

    விமான நிலைய பணிப்பெண் பலாத்காரம்- உடன் வேலை செய்யும் வாலிபர் அத்துமீறல்

    • மதுபோதையில் இளம்பெண் வீட்டிற்கு வந்த ஷர்மாலால் வீட்டு கதவை தட்டினார்.
    • தூக்க கலக்கத்தில் இருந்த இளம்பெண் எழுந்து வந்து கதவை திறந்த போது ஷர்மாலால் திடீரென மயக்க ஸ்பிரேவை எடுத்து இளம்பெண் முகத்தில் அடித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், ஷம்ஷாபாத்தில் ராஜீவ் காந்தி விமான நிலையம் உள்ளது. ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் இறந்து விட்டார். இளம் பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவர் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் அதே விமான நிலையத்தில் ஷர்மா லால் (35) என்பவர் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் இளம்பெண் வீட்டிற்கு வந்த ஷர்மாலால் வீட்டு கதவை தட்டினார். தூக்க கலக்கத்தில் இருந்த இளம்பெண் எழுந்து வந்து கதவை திறந்த போது ஷர்மாலால் திடீரென மயக்க ஸ்பிரேவை எடுத்து இளம்பெண் முகத்தில் அடித்தார்.

    இதனை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண் கத்தி கூச்சலிட முயற்சித்தார். அப்போது ஷர்மாலால் தனது கைக்குட்டையால் இளம்பெண்ணின் வாயை பொத்தி வீட்டிற்குள் தூக்கிச் சென்றார். அதற்குள் இளம்பெண் மயக்கம் அடைந்ததால் அவரை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் தனக்கு நடந்த கொடுமையை நினைத்து கதறி அழுதார். இதுகுறித்து ஷம்ஷாபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மா லாலை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×