search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இளம்பெண்ணை கடத்தி ஆட்டோவில் வைத்து கூட்டு பலாத்காரம்- போலீசார் வந்ததால் கும்பல் தப்பி ஓட்டம்
    X

    இளம்பெண்ணை கடத்தி ஆட்டோவில் வைத்து கூட்டு பலாத்காரம்- போலீசார் வந்ததால் கும்பல் தப்பி ஓட்டம்

    • இளம்பெண் முக்கோட்டி கோவில் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்தார்.
    • காவலாளி உடனடியாக 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி தொண்டவாடா வனப்பகுதிக்கு நேற்று இரவு ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி வந்து ஆட்டோவில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டார். இருப்பினும் அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

    அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த இளம்பெண் முக்கோட்டி கோவில் அருகே பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்தார். காவலாளி உடனடியாக 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    போலீசாரை கண்டதும் 4 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று இரவு முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து இளம்பெண் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணை கடத்திச்சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×