search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைக் கூட்டம்"

    • செம்பட்டியில் ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.

    செம்பட்டி:

    செம்பட்டியில் ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசிய தாவது:-

    மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிரு க்கிறது. தி.மு.க. தொண்டன், மிசா பொடா சட்டத்தைப் பார்த்து அஞ்சியது கிடை யாது. வரும் பாராளுமன்றத் தேர்தலை துணிவோடு எதிர் நின்று சந்திக்க வேண்டும். நான் தொண்ட னுக்காக வாழ்கிறேன். எனக்கு உறவினர்கள், எல்லாம் இந்த இயக்கமும் தொண்டனும்தான். நான், இந்த இயக்கத்தின் தொண்டனை பற்றி சிந்திக்காத நாள் கிடையாது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தொண்டர்கள், இளைஞர்கள் துடிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும். தி.மு.க. கோட்டையாக திண்டுக்கல் திகழ வேண்டும் என பேசினார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.
    • ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பாலக்கோடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.

    இதில் செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார். ஆலோசனை கூட்டத்தில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து பாலக்கோடு ஸ்தூபிமைதானம் முதல் கல்கூடஅள்ளி வரை கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பாலக்கோடு பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமத்து பணிகளை சீரமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,
    • காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மாவ ட்ட பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்ஜி வரவேற்றார். வட்ட பொருளாளர் முத்துசாமி நிதிநிலை அறிக்கை வாசி த்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் மகாலி ங்கம், மாவட்டத் துணைத் தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பணிகளை தோற்றுவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், தமிழக அரசு துறையில் பணிபுரியும் வெளி ஒப்பந்ததாரர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் சமூக நல துறையின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், மத்திய அரசால் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்ட துணை த்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்ட இணை செயலாளர் மஞ்சுளா, மாவட்டத் துணைத் தலைவர்கள் வீரபுத்திரன், செந்தில்முருகன், மாவட்ட இணை செயலாளர்கள் சாமிதுரை, விஜயராணி, சாலை பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • ரெட்டியூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக குடிநீர் பைப் லைன் அமைக்க வேண்டும்.
    • அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள நீர் வழிக்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகளை அதி காரிகள் எடுத்துரைத்தனர்.

    இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை சார்பில் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் நோய் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    தருமபுரி முதல் ஓசூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பாலக்கோடு நகர்பகுதியை ஒட்டி உள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஏதுவாக இருக்க பி.கொல்லஅள்ளி முதல் எர்ரனஅள்ளி சாலை வரை இருபுறங்களிலும் இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.

    ரெட்டியூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக குடிநீர் பைப் லைன் அமைக்க வேண்டும். அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள நீர் வழிக்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்.

    பி.செட்டி அள்ளி ஊராட்சி மாரிக்கான் கொட்டாயில் பழுதாகி உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள தெருவிளக்கு மின் கம்பங்களை உடனே மாற்ற வேண்டும்.

    கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட சமுதாய திருமண மண்டபங்களுக்கு, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மண்டபங்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே இதற்கான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும்.

    பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உடையும் தருவாயில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகளை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசிங்கம், முத்துசாமி, முத்தப்பன், நஞ்சுண்டன், ஜோதி, சரண்யா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    • கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கே.எம்.பட்டி தமிழ்செல்வன் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கைகள் நலச்சங்கம், தேனி வைகை ஜவான் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கே.எம்.பட்டி தமிழ்செல்வன் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது.

    முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதற்கு கலெக்டர் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நல அலுவலக துணை இயக்குனருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சங்க தலைவர் பவுன், செயலாளர் சிவபாண்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் புதியதாக கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
    • வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். தருமபுரி மாவட்டத்தில் புதியதாக கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நீலாபுரம் செல்வம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், நகர நிர்வாகிகள் அம்மாவடிவேல், சுரேஷ் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

    • ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
    • மாணவ-மாணவியர்களின் சேர்க்கை குறித்து தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு விடுதிகளில் 2023- 24 ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து தேர்வு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலர் ராஜசேகரன் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், பேரூராட்சி தலைவர் முரளி, மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் செயல்பட்டு வரும் 12 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி விடுதிகளில் 6 முதல் 12- ம் வகுப்பு வரை காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வு குழு மூலம் மாணவ-மாணவியர்களின் சேர்க்கை குறித்து தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதி காப்பாளர்கள் , தேர்வு குழு உறுப்பிணர்கள் மோகன், பெரியசாமி, பட்டு அஜிசுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
    • தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    ஜூன் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ந்தேதி வெள்ளிக் கிழமை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரி யபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • ஆயத்த கூட்டம் மாதம்பாளையம் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பேசினார்.

    புளியம்பட்டி,

    புஞ்சைபுளியம்பட்டி நகர அ.தி.மு.க. சார்பில் வார்டு எண் 12, 13 காந்தி நகர் பகுதி மற்றும் மார்க்கெட் பகுதியில் அ.தி.மு.க. கொடியேற்றும் விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் 17 பூத்கள் அமைக்கப்பட்டு அதன் பொறுப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் மாதம்பாளையம் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பேசினார். பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ. முன்னிலையில் நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி மற்றும் அவைத் தலைவர் மயில்சாமி வரவேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி. காளியப்பன் மற்றும் நகர, கழக பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பவானிசாகர் பேரூர் செயலாளர் துரைசாமி, துரைசாமி, எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மகளிர் அணியைச் சார்ந்த தமிழ்ச்செல்வி வசந்தாமணி, ஆனந்த பிரபா, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், வெற்றிவேல், வேலுச்சாமி, கே.ஜி.சதீஷ், புரட்சி நாகராஜ், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் பாபு பொன்னுச்சாமி பாலன் இளைஞர் அணி சக்தி சண்முகம். கண்ணன், ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சக்திவேல், மட்டன் குணசேகரன் கேபிள் சிவா வினோபாஜி, ராமசாமி, வசந்தா, மாணிக்கம், மார்க்கெட் கார்த்தி பழனிச்சாமி, சிவகுரு, சுப்பிரமணியன், சாமிநாதன், குமார், ஸ்ரீ பாலாஜி, மளிகை மூர்த்தி, ஜோதி மணியன், கிட்டுசாமி, செல்லதுரை, சுரேஷ், கண்ணன், பாபு மற்றும் பூத்கமிட்டி தலைவர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் மற்றும் பூத் கமிட்டி படிவங்களை வழங்கினர். இதில் மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் அரங்கில் அ.தி.மு.க சார்பில் கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞர்கள் இளம்பெண் பாசறை மகளிர் குழு அமைப்பது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். இதில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்சுணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கம்பட்டி குமார், தப்பகம்பை கிருஷ்ணன், ஸ்டீபன் என்ற வேலு, பேரூராட்சி செயலாளர் நஞ்சு என்ற சுப்பிரமணி ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

    உடன் கலைபிரிவு மாவட்ட செயலாளர் உயிலட்டி கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் ஒன்றிய, பேரூராட்ச்சி நிர்வாகிகள் மகளிரணி, சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, கிளைக்கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    19 பேர் கொண்ட பூத் கமிட்டியில் கட்சி சார்பில் 7 பேர், மகளிர் குழு 5 பேர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை 5 பேர், தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 2 பேரை உறுப்பினர்களாக சேர்க்கஅறிவுறுத்தப்பட்டது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகி ராஜன் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஜக்கையன் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பேசினார்.

    19 பேர் கொண்ட பூத் கமிட்டியில் கட்சி சார்பில் 7 பேர், மகளிர் குழு சார்பில் 5 பேர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் 5 பேர், தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 2 பேரை உறுப்பினர்களாக சேர்க்கஅறிவுறுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், ஒன்றிய அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி கவிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின் அமைப்பாளர்கள் சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் மின்சார அலுவலகம் முன்பு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க அலங்காநல்லூர் கிளை சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி கொடியேற்று விழா நடந்தது.

    தலைவர் ரவி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் அலிமுதின், சுப்பாரயலு, செயலாளர் வெள்ளைகங்கை, பொருளாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். கவுரவ ஆலோசகர் விநாயக ராஜா வரவேற்றார்.

    அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், சத்தியசீலன் ஆகியோர் நன்றி கூறினர்.

    ×