search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஊழியர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களின் பணப்பலன்களை அரசு உடனே வழங்க வேண்டும்.
    • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பண பலன்களை வழங்க வேண்டும் என்பதால் அரசு ரூ. 2 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசு ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார்கள்.

    அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களின் பணப்பலன்களை அரசு உடனே வழங்க வேண்டும். அந்த வகையில் ஓய்வு பெறும் சுமார் 10ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ரூ.1500 கோடி அளவுக்கு பணம் வழங்க வேண்டும். இதுபோல இந்த ஆண்டில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

    ஏற்கனவே அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பண பலன்களை வழங்க வேண்டும் என்பதால் அரசு ரூ. 2 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.
    • பல்லடம்,உடுமலை,தாராபுரம்,மடத்துக்குளம்,அவிநாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முதலாம் மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்பு குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் தமிழ்செல்வி, திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பல்லடம்,உடுமலை,தாராபுரம்,மடத்துக்குளம்,அவிநாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்துகிறதோ, அப்போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ச்சியாக கடந்த நான்கு தவணைகளாக அகவிலைப்படி காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அரசு ஊழியர்களின் ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன் என்பது வழங்கப்படாமல் உள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாமல் மௌனம் சாதித்து வருகிறது. முன்பு நிதி அமைச்சராக இருந்த பி .டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என அறிவித்தார். தற்போது புதிதாக பதவியேற்றுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது குறித்து தற்போது அறிவிப்பு வெளியிட முடியாது என தெரிவித்து வருகிறார்.

    அதே போல தொகுப்பூதி யத்தில் பணியாற்றி வரும் வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள் ஆகியோரை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போது அவர்களை பகுதி நேர ஊழியர்கள் என அரசு தெரிவித்து வந்தது. இதற்கிடையேஅரசு புதிதாக காலை உணவு திட்டம் என அறிவித்துவிட்டு அதை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றாமல் தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிடுகிறது. சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வழங்கப்பட்டு வரும் தொகையை விட அதிகமாக காலை உணவு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தொடர்ச்சியான எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண தொடர் போராட்டமே தீர்வு தரும் என நாங்கள் நம்புகிறோம். ஏற்கனவே 2 தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளோம். வரும் ஆகஸ்ட் 12,13-ந் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து மாநில பேரவை கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து விவாதித்து அறிவிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வை ஆறு மாதம் காலந்தாழ்த்தி வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

    இந்தச் சூழ்நிலையில், 1.1.2023 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் வழங்க வேண்டும்.

    ஆனால், இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு 1.4.2023 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மூன்று அகவிலைப்படி உயர்வுகளை ஆறு மாதத்திற்கு தள்ளிப்போட்ட தி.மு.க. அரசு, நான்காவது அகவிலைப்படி உயர்வை மூன்று மாதத்திற்கு தள்ளிப்போட்டு இருக்கிறது. அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசிக்கு ஏற்ப வழங்கப்படும் உயர்வு ஆகும். இதனைக் காலந்தாழ்த்தி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி விட்டு, 'நிதிப் பற்றாக்குறை' குறைக்கப்பட்டுவிட்டது, 'வருவாய்ப் பற்றாக்குறை' குறைந்து விட்டது என்று கூறுவது நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு. இது கடும் கண்டனத்திற்குரியது.

    அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே நிலவுகிறது.

    இதனை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

    அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மத்திய அரசு வழங்கியது போல நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி, திருமங்கலம் தாசில்தார் அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவ லக வாயிலில் கோடை காலத்தை முன்னிட்டு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க.அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், பெண் போலீசார் என அரசு ஊழி யர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் ஏற்கவில்லை. தொண்ட ர்களும் ஏற்க வில்லை என்பது அவர் நடத்திய மாநாட்டில் தெளி வாக தெரிந்தது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிக ளிலும் அ.தி.மு.க. தலைமை யிலான கூட்டணியே வெற்றி பெறும். கூட்டணி குறித்து தலைமைக் கழகம் அறிவிக்கும். மதுரையில் நடைபெற உள்ள மாநாடு இதுவரை தமிழகத்தில் நடந்தி ராத திருப்புமுனை மாநாடாக அமையவுள்ளது. 50 லட்சம் பேர் அங்கு திரண்டு புதியதொரு சகாப்தத்தை உருவாக்க உள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி துணைச்செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
    • தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.



    வேலை நிறுத்தம் காரணமாக கலெக்டர் அலுவலக வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. 

     மதுரை

    தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடந்தது.

    இதன் காரணமாக மதுரை கலெக்டர் அலுவலகம், திருப்பரங்குன்றம், மேலூர், உசிலம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பட்டா மாறுதல், சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் மூர்த்தி பேசுகை யில், மதுரை மாவட்டத்தில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

    அரசு எங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிடில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


    • பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    மதுரை

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியு றுத்தி வந்தனர். இது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர் பாக எந்த அறி விப்பும் வெளியாகவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகம், சுகாதார போக்குவரத்து பணிமனை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன், கல்யாண சுந்தரம், மணிகண்டன், பரஞ்சோதி, ராமசந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தேர்தல் வாக்கு றுதியின்படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட கிளை தலைவர் குப்புசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ரதி, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் முருகேசன், கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரியும், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் , பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு என எவ்வித அறிவிப்பும் இல்லாததை கண்டித்தும் அதை நிறை வேற்ற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • அரசு ஊழியர்கள்-ஓய்வூதியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்.
    • ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து போராடினர். போராட்ட களத்திற்கு வந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்-அரசு ஊழிய ர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று கூறினார். அவர் உறுதியளித்தபடி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.

    முதல்-அமைச்சர் பிறந்தநாளில் நாங்கள் கேட்காத கோரிக்கைகளான அனைத்து ஆசிரியர்க ளுக்கும் கையடக்க கணினி வழங்கப்படும் என்றும், அனைத்து ஆசிரியர்க ளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது.
    • கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் இந்த மனுவை விசாரித்தது.

    அப்போது நீதிபதிகள், கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அரசு ஊழியர்கள் அவர்களின் நடத்தை விதிகள், அரசாங்க சுற்றிக்கைகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலை நிறுத்தம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை.

    இதனை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது. கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது. இது அவர்களை ஊக்குவிப்பது போல அமையும். எனவே இனி இதுபோன்ற விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    • அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.
    • பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாகவும், பணி நேரம் முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு சென்று விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தது.

    இதையடுத்து கேரள அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த கேரள தலைமை செயலாளர் ஜாய் ஏற்பாடு செய்தார். இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு, முதல் வேலை நாளில் கேரளாவின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என கடந்த வாரமே தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன் படி இன்று முதல் கேரளா அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டது.

    இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.

    மேலும் பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு நாளும் இதனை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் இந்த வருகை பதிவு முறை நிதித்துறையின் சம்பள பதிவேடுகளிலும் பதிவாகும் முறையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதுபோல அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரவும், வெளியேறவும் அவர்களின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தால் மட்டுமே முடியும். இதனால் இனி அலுவலகங்களுக்கு தாமதமாக வந்தாலோ, அல்லது அலுவலகத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறவோ வாய்ப்பு இல்லை.

    அவ்வாறு வெளியேறினால் அந்த ஊழியரின் விபரங்கள் அவர்களின் சம்பள பட்டியலில் பதிவாகும். இதன்மூலம் ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிலை உருவாகும்.

    தற்போது கேரள அரசின் தலைமை செயலகத்தில் செயல்பட்டு வந்த இந்த முறை இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம் குறைவான ஊழியர்களை கொண்டு இயங்கும் அலுவலகங்களில் இந்த முறை அமலுக்கு வரவில்லை.

    மேலும் போலீஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தவில்லை. விரைவில் அங்கும் இம்முறையை கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • அரசு துறைகளில் ஒப்பந்தம் தினக்கூலி அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து, உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
    • சத்துணவு ஊழியர் சங்க முருகேசன், மற்றும் பாக்கியம், விஜயகுமார், நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தவேண்டும் அகவிலைப்படி உடனே வழங்கப்பட வேண்டும், நகராட்சி நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ திரும்ப பெற வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு முழுமையாக அமல்படுத்திட வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்தம் தினக்கூலி அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து, உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊர் புற நூலகர்கள், உள்ளிட்ட தொகுப்பூதியம் ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும். கருவூலம் உள்ளிட்ட அரசுத்துறை மென்பொருள் திட்டங்களை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் வட்டார கிளை தலைவர் பாண்டியம்மாள் செயலாளர், ஆறுச்சாமி, மற்றும் சத்துணவு ஊழியர் சங்க முருகேசன், மற்றும் பாக்கியம், விஜயகுமார், நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×