search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை
    X

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை

    • தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவ லக வாயிலில் கோடை காலத்தை முன்னிட்டு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க. இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க.அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், பெண் போலீசார் என அரசு ஊழி யர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் ஏற்கவில்லை. தொண்ட ர்களும் ஏற்க வில்லை என்பது அவர் நடத்திய மாநாட்டில் தெளி வாக தெரிந்தது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிக ளிலும் அ.தி.மு.க. தலைமை யிலான கூட்டணியே வெற்றி பெறும். கூட்டணி குறித்து தலைமைக் கழகம் அறிவிக்கும். மதுரையில் நடைபெற உள்ள மாநாடு இதுவரை தமிழகத்தில் நடந்தி ராத திருப்புமுனை மாநாடாக அமையவுள்ளது. 50 லட்சம் பேர் அங்கு திரண்டு புதியதொரு சகாப்தத்தை உருவாக்க உள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி துணைச்செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×