search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசைவம்"

    • உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த உணவு.
    • இந்த ரெசிபியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    முட்டை வெள்ளை கரு - 4

    வெங்காயம் - 1

    பூண்டு - 3 பற்கள்

    ப.மிளகாய் - 1

    பச்சை குடைமிளகாய் - பாதி

    சிவப்பு குடைமிளகாய் - பாதி

    காளான் - 7

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி, வெங்காயத்தாள் - சிறிதளவு

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காளான், குடை மிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும்.

    * முட்டை வெள்ளை கருவில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும் .

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * பின்பு நறுக்கிய காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    * அடுத்து அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து அடித்த வைத்துள்ள முட்டையை ஊற்றி கடாயை மூடவும்.

    * பிறகு வேகவைத்த காய்கறிகளை முட்டையின் மீது பரப்பிவிட்டு பின்பு கடாயை மூடி வேகவிடவும்.

    * இப்போது முட்டை வெள்ளை கரு வெஜிடபிள் ஆம்லெட் தயார்!

    * உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் இதில் சேர்த்து செய்யலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்

    பிரெட் - 1 துண்டு

    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

    வால்நட் - 1/2 கப்

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    இட்டாலியன் சீசனிங் - 1 1/2 தேக்கரண்டி

    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு

    சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

    சோளமாவு - 1/4 கப்

    மைதா - 1/4 கப்

    தண்ணீர்

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை:

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * பிரெட்டை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

    * மிக்ஸியில் நறுக்கிய பிரெட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    * ஒரு கிண்ணத்தில் மைதா, சோளமாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * ஊற வைத்த சிக்கனை மாவில் தோய்த்து பிறகு வால்நட் பிரெட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.

    * கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான சிக்கன் டென்டெர்ஸ் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முட்டையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • தோசை, சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வேகவைத்த முட்டை - 3

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * அடுத்து இதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து தக்காளி சேர்த்து, பாதி வதங்கியதும், இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு, கரம் மசாலா தூள் போட்டு கிளறவும்.

    * அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில், 10 நிமிடம் கொதிக்கவிடவும்/

    * 10 நிமிடம் கழித்து, இதில் வேகவைத்த முட்டையை துருவி சேர்க்கவும்.

    * நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, குறைந்த தீயில் 3 நிமிடம் வேகவிடவும்.

    * இப்போது சுவையான முட்டை கீமா தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சப்பாத்தி, நாண், தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 4

    வெங்காயம் - 1 பெரியது

    தக்காளி - 2 சிறியது

    இஞ்சி பூண்டு விழுது இடித்தது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

    தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 3 1/2 தேக்கரண்டி

    கடுகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி - 1 கைப்பிடி

    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கினால் போதும்.

    அடுத்து அதில் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், 3 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை வெந்து உதிரியாக வரும் போது அரை தேக்கரண்டி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான முட்டை மிளகு பொடிமாஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.
    • உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது.

    லிப்ஸ்டிக், நகப்பாலீஷ், முகத்திற்குப் பூசப்படும் அழகு சாதன பொருட்கள், மருந்துகள், மாத்திரைகள், டானிக்குகள், மேல் பூச்சு மருந்துகள்... இப்படி அனைத்தையும், அனைத்திலும் சிவப்பு நிறத்தை பார்க்கும் நாம், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளவதில்லை.

    மேற்கூறிய அனைத்துப் பொருட்களிலும் சிவப்பு நிறத்திற்காகக் கலக்கப்படும் நிறமி ஒரு வகையான பூச்சிகளிலிருந்து எடுக்கப்படுகிறது.

    கோச்சினீல் பக் என்னும் ஒரு வகையான ஒட்டுண்ணி பூச்சியில்தான் இந்த சிவப்பு நிறமி இருக்கிறது. காக்ட்ஸ் வகை (கள்ளி) செடிகளில் வெள்ளை நிற கூட்டுடன் வாழும் இப்பூச்சிகளை கசக்கினால், கைகளில் சிவப்பு நிறம் கிடைக்கும். உலர வைத்த இப்பூச்சிகளை அலுமினியம் அல்லது கால்சியம் உப்புடன் சேர்த்துப் பின் பக்குவப்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு நிற மைக்கு "கார்மைன்" அல்லது "காக்கினியல் மை" என்று பெயர் வைத்துள்ளார்கள்.

    துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.

    உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருட்களானாலும் அதனுடைய மேல் அட்டையில் (லேபிள்) E 120, Natural Red 4, Carmine, Cochineal, Carminic acid என்று ஏதாவது ஒன்றை கண்டிப்பாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    ஒருவேளை இந்த சிவப்பு நிறமே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருந்தால் E 124 என்று குறிப்பிடவேண்டும்.


    உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் இந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது. ஆனால், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே ஜெல்லி மிட்டாய்கள், கேண்டீஸ், சாக்லேட், போன்றவை அதிக அளவில் சிவப்பு நிறத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.

    பதப்படுத்தப்பட்ட மாமிசம், குளிர்பானங்கள், பழ ரசங்கள், ஆற்றல் தரும் பானங்கள், உணவுப் பொடிகள், இனிப்பு தயிர், பால் பொருட்கள், ஐஸ்கிரீம், சூயிங்கம், சாக்லேட், கற்கண்டு வகை இனிப்புகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட பழங்கள், உலர் சூப் பொடி, கெச்சப், மதுபானங்கள்...... என்று இவை அனைத்திலும் இந்த நிறம் இருக்கும்.

    ஒருவேளை.... அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கும்போது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அது இந்த பூச்சியினாலேயே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    -வண்டார் குழலி

    • இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மட்டன் எலும்புடன் - அரை கிலோ

    மட்டன் கொழுப்பு - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 4

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - 2 கொத்து

    மசாலா அரைக்க :

    மரசெக்கு கடலை எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

    சின்ன வெங்காயம் - 8

    பூண்டு பற்கள் - 8

    சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    * மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    * தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும்.

    * ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.

    * பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    * ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    * பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    * கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    * இப்போது சூப்பரான மட்டன் ரசம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை வெஜிடபிள் நூடுல்ஸ் செய்து கொடுங்கள்.
    • முட்டை நூடுல்ஸில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் சமைக்க

    ஹக்கா நூடுல்ஸ் - 300 கிராம்

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    தண்ணீர்

    உப்பு - 1/2 தேக்கரண்டி

    முட்டை நூடுல்ஸ் செய்ய

    வெங்காயம் - 1

    குடைமிளகாய் - 1/2

    நறுக்கிய பூண்டு - 1 மேசைக்கரண்டி

    நறுக்கிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி

    வெங்காயத்தாள்

    கேரட் - 1

    முட்டைகோஸ் - 1 கப்

    வினிகர் - 2 தேக்கரண்டி

    சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி

    சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    முட்டை - 4

    மிளகு - 1 டீஸ்பூன்

    செய்முறை

    * வெங்காயம், வெங்காயத்தாள், குடைமிளகாய், முட்டைகோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் தேவையான அளவு உப்பு, நூடுல்ஸை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு வேகவைக்கவும்.

    * ஐந்து நிமிடத்திற்கு பிறகு நூடுல்ஸை வடிகட்டி, நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க எண்ணெய் ஊற்றி பரப்பி விடவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்

    * வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் , பாதி வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * காய்கறிகளை நன்கு வதக்கிய பின்பு இதன் நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி காய்கறிகளுடன் கலக்கவும்.

    * முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்ததும் இந்த கலவையில் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்.

    * கடைசியாக மீதி உள்ள வெங்காயத்தாளை நூடுல்ஸ் மேல் தூவி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான முட்டை வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகள் வேக வைத்த முட்டையை சாப்பி மாட்டார்கள்.
    • முட்டையை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3

    வெங்காயம் - 1

    பூண்டு - 5 பல்

    காய்ந்த சிவப்பு மிளகாய் - 10

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு கரைத்த தண்ணீர்- தேவையான அளவு

    எலுமிச்சை தண்ணீர்- தேவையான அளவு(எலுமிச்சை சாறில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்தது)

    புளி தண்ணீர்- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விடவும்.

    * பூண்டு, வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வெங்காயம் ஆறியதும் மொறு மொறு என்று இருக்கும்.

    * அடுத்து பூண்டை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரிந்ததும் எடுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை நன்றாக கைகளால் பொடித்து போடவும். அடுத்து அதில் வெங்காயம், காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    * வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்.

    * இதன்மேல் சிறிதளவு எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும்.

    * இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    * சூப்பரான பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... சுவையில் அள்ளும்.
    • தோசை, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ,

    தக்காளி - ஒன்று,

    சின்ன வெங்காயம் - 25 கிராம்,

    பச்சை மிளகாய் (சிறியது) - 2,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    சோம்பு - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

    பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று,

    குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்,

    தேங்காய் - கால் மூடி,

    மிளகு - ஒரு டீஸ்பூன்,

    பூண்டு - 5 பல்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.

    தேங்காய், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    சுத்தம் செய்த நண்டுடன் குழம்பு மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பிறகு அதில் தக்காளி சேர்க்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் பிசிறி வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    இது ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்தவுடன் இறக்கினால்... சுவையான நண்டு மசாலா தயார்.

    சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... சுவையில் அள்ளும். வெங்காய சாம்பாருக்கு சூப்பர் காம்பினேஷன்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மீனை குழம்பு, வறுவல், பிரை என விதவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள்.
    • இன்று மீனை வைத்து வடை செய்யலாம் வாங்க..

    தேவையான பொருட்கள்

    மீன் துண்டுகள் - 500 கிராம்

    முட்டை - 1

    உருளைக்கிழங்கு - 100 கிராம்

    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    பச்சைமிளகாய் - 3

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை

    மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும்.

    பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.

    ஒரு பாத்திரத்தல் உதிர்த்த மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

    ருசியான மீன் வடை தயார்.

    இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்தி, இட்லியுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ

    சின்ன வெங்காயம் - 30

    தக்காளி - 4-

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 1

    உப்பு - சுவைக்கேற்ப

    கறிவேப்பிலை - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

    தாளிப்பதற்கு...

    சோம்பு - 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பிரியாணி இலை - 1

    ஏலக்காய் - 5

    கிராம்பு - 5

    பட்டை - 1 துண்டு

    வறுத்து அரைப்பதற்கு...

    வரமிளகாய் - 10-12

    மல்லி விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - 1 கையளவு

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 1 கப்

    பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'வறுத்து அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அதே மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாவ வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் நன்கு சிக்கனை வதக்க வேண்டும்.

    * பின்னர் அதில் வறுத்து அரைத்த மசாலா மற்றும் நீரை ஊற்றி கிளறி, அதை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உருளைக்கிழங்குகளை போட்டு, பின் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு தயார்.

    • இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த ரசம் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன்(எலும்புடன்) - 1/2 கிலோ

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தக்காளி - 1

    இஞ்சி - 1 துண்டு

    பூண்டு - 5 பல்

    பச்சை மிளகாய் - 1

    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

    பட்டை, லவங்கம் - தலா 1

    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

    தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

    வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.

    பின்பு சூப்பில் கொத்தமல்லி தழை தூவி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

    ×