search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild animals"

    • குளம், குட்டைகளில் ஏராளமான மான், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன.
    • வனத் துறையினா் மானை மீட்டு அப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் விடுவித்தனா்.

    அவினாசி :

    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் ஏராளமான மான், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.மேலும், இவை சாலைகளில் நடமாடும்போது வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன.

    இந்நிலையில் அவிநாசி அருகே உள்ள அ.குரும்பபாளையம் பகுதியை சோ்ந்த பெரியசாமி என்பவரது தோட்டத்துக்குள் புள்ளிமான் நுழைந்தது. இதனைப் பாா்த்த நாய்கள் மானை துரத்தின. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நாய்களிடமிருந்து மானை காப்பாற்றி, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மானை மீட்டு அப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் விடுவித்தனா்.

    தொடா்ந்து, விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிா்களைச் சேதப்படுத்தியும், வாகனம், நாய்களிடம் சிக்கி உயிரிழக்கும் வனவிலங்குகளை குடியிருப்புப் பகுதிகளில் நுழைய வண்ணம் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்கப்படுகிறது.
    • திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்வதற்கு நாளை முதல் அனுமதி கிடையாது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுக்கும் பணி நாளை(புதன்கிழமை) முண்டந்துறை வனச்சரக கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்புடன் தொடங்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகளுக்கு தடை

    இதையடுத்து வருகிற 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அம்பை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சர கங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் சுற்றுலா தலங்களான மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, அகத்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான செண்பக பிரியா தெரிவித்துள்ளார்.

    இதேபோல் களக்காடு வனக்கோட்டம் திருக்குறுங்குடி வனச்சரகத்தில் நம்பி கோவில் செல்வதற்கு நாளை முதல் 16-ந்தேதி வரை அனுமதி கிடையாது. அதேநேரத்தில் கோவில் விழா நடைபெறுவதால் பக்தர்கள் மட்டும் வருகிற 11-ந்தேதி(சனிக்கிழமை) மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

    உறைபனி தாக்கத்தால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் புல் வெளிகள் கருகி விட்டன.

    ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி, மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்து விட்டன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

    முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கூடலூர்-கக்கநல்லா சாலை, மசினகுடி-முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.

    இவை உணவு தேடி சாலையோரங்களுக்கு வருகின்றன. குறிப்பாக யானை, மான்கள் கூட்டமாக வலம் வருகின்றன.

    திடீரென சாலையை கடக்கின்றன. இதனால் வேகமாக வரும் வாகனங்களில் வனவிலங்குகள் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, செல்பி மோகம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் விலங்குகளை கண்டவுடன் செல்பி எடுக்கின்றனர். இதனால் அவற்றுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மனிதர்களை தாக்கும் அபாயமும் உள்ளது.

    எனவே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • சோலார் வேலி அமைத்து போதிய அளவு பயன் தரவில்லை. மீண்டும் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.
    • புதிய முயற்சியாக வயல் பகுதிகளையும், தோட்டங்களையும் பல வண்ண சேலைகளைக் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சுற்றுலாவே பிரதான தொழிலாக உள்ளது. இதனை சுற்றி மேல்மலையில் மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கீழ்மலையில் பெருமாள்மலை, அடுக்கம், பேத்துப்பாறை, பண்ணை க்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. உருளைக்கிழங்கு, முட்டை க்கோஸ், கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறி கள் இங்கு விளைவிக்கப்படு கின்றன. இப்பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பேக்கிங் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    வனப்பகுதியில் காட்டெ ருமை, காட்டுப்பன்றி, யானை, மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி இடம்பெயரும் போது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனை தடுக்க முள் வேலி, சோலார் வேலி ஆகியவற்றை விவசாயிகள் அமைத்தனர். ஆனால் இந்த முயற்சி போதிய அளவு பயன் தரவில்லை. மீண்டும் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.

    எனவே புதிய முயற்சியாக வயல் பகுதிகளையும், தோட்டங்களையும் பல வண்ண சேலைகளைக் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இதன் மூலம் வன விலங்குகள் ஆட்கள் நடமாட்டம் இருப்ப தாக எண்ணி வருவதில்லை என விவசாயிகள் தெரி விக்கின்றனர்.

    இந்த பல வண்ண சேலை வேலிகள் மலைப்பகுதிகளில் டிரெண்டாகி வருகிறது. இதன் மூலம் வன விலங்குகள் வருவதை தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • 750 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது
    • அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது

    கயத்தாறு:

    கயத்தாறு தாலுகா குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்டது சுந்தரேஸ்வரன் கிராமம் ஆகும். இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

    பயிர்கள் சேதம்

    மேலும் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் 750 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குருமலை வனத்துறை பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மான்களும், பன்றிகளும் இப்பகுதியில் இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து விடுவதாகவும், அவை பயிர்களை சேதப்படுத்துவதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

    தினமும் 5 முதல் 10 ஏக்கர் வரை சேதம் செய்துள்ளதால் கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதி விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் தோட்டங்களுக்கு சென்று இரவு பகலாக விளக்குகளை வைத்துக்கொண்டு காவலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    வேதனை

    இன்று காலை 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அவை சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் தங்க நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் விவசாயம் செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.ஒரு ஏக்கருக்கு 30 குவிண்டால் மக்காச்சோளம் கிடைக்கும். அதற்கு விலையாக ரூ.60 ஆயிரம் பெறுவோம். ஆனால்

    இந்த ஆண்டு அனைத்துமே பாழாகிவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் இங்கு வந்து சேதங்களை கணக்கீடு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வன விலங்குகளால் மக்காசோள பயிர்கள் சேதமடைந்ததற்காக நிவாரணம் வழங்குமாறு ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் அதிக அளவில் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட மக்காச் சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பேரையூர், கல்லுப்பட்டி பகுதியில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் அதிக அளவில் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இதுகுறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக் கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஆயிரக்க ணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதேபோன்று தற்போது வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு போர்க்கால அடிப்படையில் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
    • புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்கா–புரம்,சிங்காரா, மாயார், தெப்பக்காடு, கார்குடி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

    இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், முதுமலை புலிகள் காப்பகம் தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது.இதனால், சாலை–யோரங்களிலேயே வனவிலங்குகள் அதிகளவு வலம் வருகின்றன. குறிப்பக, மசினகுடி - தெப்பக்காடு சாலை, தெப்பக்காடு -கூடலூர் சாலையில் காட்டு யானைகள் அதிகளவு வலம் வருகின்றன.

    அதேபோல், புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது. இது சுற்றுலா பயணிகளை ஆச்சிரியத்திற்குள்ளாக்கி வருகிறது.

    கடந்த மாதம் பெய்த மழையால் தற்போது மசினகுடி மற்றும் முதுமலை வனங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால், யானைகள், மான்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. குறிப்பாக, மசினகுடி - தெப்பக்காடு சாலையில் அதிகளவு மான் கூட்டங்கள் காணப்படுகிறது. அதேபோல், யானைகளும் அடிக்கடி வலம் வருகின்றன. இவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, வாகனங்களில் இருந்தவாறு புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

    • விவசாயிகள் யாரும் விளைநிலங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக செல்வதையோ, அங்கு படுத்து உறங்குவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    • வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பி காட்டிற்குள் அனுப்புவதற்காகவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    களக்காடு புலிகள் காப்பக மலையடிவார பகுதிகளில் தற்போது பனம் பழம், வாழைப்பழம், சப்போட்டா மற்றும் கொல்லம் பழம் (முந்திரி) ஆகிய பழங்கள் விளையும் பருவம் என்பதால் வனவிலங்குகளான கரடி, குரங்கு போன்றவைகள் காட்டைவிட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இதனால் விவசாயிகள் யாரும் விளைநிலங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக செல்வதையோ, அங்கு படுத்து உறங்குவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பி காட்டிற்குள் அனுப்புவதற்காகவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விளைநிலங்களில் வன விலங்குகளை பார்த்தால் உடனடியாக 7598401438 (களக்காடு வனவர் செல்வ சிவா). 9171513119 (திருக்குறுங்குடி வனவர் ஜெபிந்தர் சிங் ஜாக்சன்) ஆகிய செல்போன் நம்பர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை பகுதியில் அடர்ந்த வனம் உள்ளது. இங்கு காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகள், செந்நாய்கள் என வனவிலங்குகள் அதிகளவு வசித்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கடும் வறட்சி காணப் பட்டது.

    இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பசுந்தீவனங்கள் மற்றும் தண்ணீரை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றன. இந்த நேரத்தில் கோடை சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.

    இதனால் சுற்றுலா தலங்களை கண்டு களித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி மீண்டும் பசுமைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், காட்டு பன்றிகள், மலை அணில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் முதுமலை பகுதிக்கு திரும்பியது.

    தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மைசூரூ- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெப்பக்காடு- மசினகுடி சாலையோரம் வனவிலங்குகள் அதிகமாக தென்படு கிறது. இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வனத்துக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறாமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வாகனங்களில் செல்லும் போது வனவிலங்குகளை கண்டு களிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் வாகனங்களை நிறுத்தி கூச்சலிட்டு வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.

    அவ்வாறு தொந்தரவு செய்யும் போது காட்டு யானைகள் திடீரென தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும். இதனால் சுற்றுலா பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
    ×