search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voter list"

    • வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை நீக்க வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
    • சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி, சட்டப்பேரவை, பாராளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும், வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    எம்.ஜி.தேவசகாயம் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தாக்கலான பதில்மனுவில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுவதற்கு முன் வாக்காளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்து கேட்கப்படுகிறது. அதன்பிறகுதான் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை நீக்க வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான நோட்டீஸ் இல்லாமல், கருத்தைக் கேட்காமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளது.

    • முசிறி, துறையூர் ெதாகுதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டது
    • வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது முசிறி பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி, துறையூர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு கடந்த 9-1-22 முதல் 30-11-22 வரை நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் முடிந்து முசிறி மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முசிறி ஆர்டிஓ மாதவன் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி முசிறி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 582 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 418 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்த வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர். துறையூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 606 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 116 பெண் வாக்காளர்களும், 25 மூன்றாம் பாலினத்து வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 747 இடம்பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது முசிறி பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    • நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.
    • 5 சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர்.

    நெல்லை:

    1.1.2023- ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதற்கு வசதியாக கடந்த நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

    தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த டிசம்பர் 8-ந் தேதி முடிவடைந்தன. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு இறுதி பட்டியலை வெளியிட மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பெண்கள் அதிகம்

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 5 சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல் படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் ஆண் வாக்காளர் கள் 6 லட்சத்து 68 ஆயிரத்து 47 பேரும் , பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 97 ஆயிரத்து 451 பேரும், இதர பாலினத்தவர்கள் 134 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக நெல்லை சட்டமன்ற தொகுதியில் 5097 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வாக்குச்சாவடிகள்

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 5220 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடியை பொறுத்தவரை நாங்குநேரியில் புதிதாக ஒரு வாக்கு சாவடி அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1484 வாக்குசாவடிகள் உள்ளது.

    இந்த வாக்காளர் பட்டியல் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், வாக்குசாவடி அமைவிடங்கள், ஊராட்சி மன்றங்கள், மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய அந்த பட்டியலை பார்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், தி.மு.க. வக்கீல் அணி செல்வ சூடாமணி, அ.தி.மு.க. பகுதி செயலாளர் சிந்து முருகன், காங்கிரஸ் சொக்கலிங்க குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
    • இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிடுகிறார்.

    சென்னை:

    ஜனவரி மாதம் 1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதற்கு வசதியாக கடந்த நவம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். அந்த வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 3.03 கோடி ஆண்களும், 3.14 கோடி பெண்களும், 7 ஆயிரத்து 758 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.

    அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, நீக்கம், திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதற்கான சிறப்பு முகாம்கள் விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் டிசம்பர் 8-ம் தேதி முடிவடைந்தன. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார். அதன்பின், இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தெரியவரும்.

    சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி கமிஷனரும், மாவட்டங்களில் கலெக்டர்களும் வாக்காளர் இறுதிப்பட்டியலை இன்று வெளியிடுவார்கள்.

    • வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் 3 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பாக நடைபெற்று உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அம்ரித் முன்னிலை வகித்தார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சிவசண்முகராஜா தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.1.2023 தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து டிசம்பர் 8-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள வாக்குச்வாடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கு படிவங்கள் பெறப்பட்டன.இதில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகிற 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் 3 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பாக நடைபெற்று உள்ளது.

    பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிட அலுவலர்கள், மாவட்ட கலெக்டருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    நீலகிரியில் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு தலைமை செயலகத்திலும் நற்பெயர் உள்ளது. இந்த பணிகளை இதே போன்று தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, பூஷண்குமார், முகமது குதுரதுல்லா, நகராட்சி கமிஷனர்கள் காந்திராஜன், கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, தேர்தல் தாசில்தார் புஷ்பாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது விருப்பத்தின் பேரிலானது.
    • நாடு முழுவதும் உள்ள 95 கோடி வாக்காளர்களில் 54 கோடிக்கு அதிகமானோர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு தேர்தல் சட்டங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்காளர்களின் அடையாளத்தை நிறுவும் நோக்கில், ஏற்கனவே இருக்கும் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை விருப்பத்தின் அடிப்படையில் பெற்று பதிவு செய்ய வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம்-2021 அனுமதி அளித்து உள்ளது.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது விருப்பத்தின் பேரிலானது. மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படிவம் 6பி-ல் ஆதார் அங்கீகாரத்திற்காக வாக்காளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது.

    எனினும் ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கு எந்த வசதியும் இல்லை.

    அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது முற்றிலும் விருப்பத்தின் பேரிலானது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.

    இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

    முன்னதாக மாநிலங்களவையில் நேற்று முன்தினம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, 'நாடு முழுவதும் உள்ள 95 கோடி வாக்காளர்களில் 54 கோடிக்கு அதிகமானோர் தங்களது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • அதன் தொடர்ச்சியாக, சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த பணி வருகிற டிசம்பர் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    மாவட்டத்தில் இதுவரை சேர்க்கை விண்ணப்பங்கள் (படிவம்-6) 21,998, நீக்கல் விண்ணப்பகள் (படிவம்-7) 8,620 மற்றும் திருத்தம், இடமாற்றம் (படிவம்-8) 14,355 என மொத்தம் 44,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) பெயரானது ஜனவரி-2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.

    தற்போது 17 வயதான வர்களும் படிவம்-6ஐ பயன்படுத்தி தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கு (அதாவது 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களும்) விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல்-2023, ஜூலை-2023, அக்டோபர்-2023) வெளி யிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.

    எனவே இந்த வாக்காளர் பட்டியல் திருத்தகாலத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை அலுவலக வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவல கங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு உடனே சென்று தங்களை

    பதிவுசெய்து கொள்ளுமா றும். மேலும் இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளா தவர்கள் இணைத்துக் கொள்ளுமாறும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்து உள்ளார்.

    • ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
    • சென்னை, கோவை போன்ற மாநகரப் பகுதிகளில் 20 மற்றும் 40 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    கோவை:

    நாடு முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களிடையே போதிய ஆர்வம் இல்லை. குறிப்பாக மாநகரம், நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆதார் எண் இணைப்பதில் அக்கறை காட்டவில்லை என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்டத்தேர்தல் பிரிவு அதிகாரி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 12 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே (40 சதவீதம்) ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண் இணைப்பதன் மூலம் தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

    ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி போன்ற கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    அதேவேளையில் சென்னை, கோவை போன்ற மாநகரப் பகுதிகளில் 20 மற்றும் 40 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    அனைத்து வாக்காளர்களும் ஆதார்எண்ணை இணைத்து பயன்பெற வேண்டும். எனவே, வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் படிவத்தை நிரப்பிக் கொடுத்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ள வேண்டும்.

    தவிர தேர்தல் ஆணையத்தின் nvsp இணையதளம் வழியாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற கைப்பேசி செயலி வழியாகவும் ஆதார் எண்ணை இணைத்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
    • 48 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பு பணி கடந்த ஆகஸ்டு மாதம் துவங்கி நடைபெற்றுவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்ட சபை தொகுதிகளில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.மாவட்ட மொத்த வாக்காளர்களில் 48 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் ஆதார் இணைப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தநிலையில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.8 தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பில் பின்தங்கிய பகுதிகளைச்சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆதார் இணைப்பு விகிதத்தை உயர்த்தவேண்டும் என ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில்டி.ஆர்.ஓ., ஜெய்பீம், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • அரசியல் கட்சியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர்.
    • 2 நாட்கள் நடைபெறும் முகாம் இறுதி வாய்ப்பாக இருப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி சென்றவர்கள் திருத்தம் செய்யவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள படிவங்கள் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களுடன் கொடுப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன.

    இதன்மூலம் சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயன் அடைந்தனர். அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் நடைபெறுகின்றன.

    சென்னையில் 3,723 வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் இந்த மையங்கள் நடக்கின்றன. படிவங்கள், 6, 6ஏ, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம். சென்னையில் கடந்த முகாமில் 23,519 பேர் திருத்தம் மேற்கொள்ள மனுக்கள் கொடுத்தனர்.

    அரசியல் கட்சியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் இறுதி வாய்ப்பாக இருப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒவ்வொரு மையங்களிலும் ஒரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

    மையங்களுக்கு செல்லாமல் www.nvsp.in என்ற இணைய தளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர்.
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க 15 படிவங்களும் பெறப்பட்டன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது.

    பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 9.11.22ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி 1லட்சத்து90 ஆயிரத்து379 ஆண்களும், 1லட்சத்து94ஆயிரத்து38 பெண்களும், 69 திருநங்கைகளும் ஆக மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.இதில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க 10 படிவங்களும், குடிமாற்றம் செய்ய 2 படிவங்களும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க 15 படிவங்களும் பெறப்பட்டன.இதில் தேர்தல் துணை தாசில்தார் தேன்மொழி,மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது
    • புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, பூர்த்தி செய்து வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் 8.12.2022 வரை நடக்கிறது. வருகிற 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.

    ஆகையால் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறம் முகாம்களில் சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள் அனைவரும் வாக்காளர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

    18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, ஆதார் விவரம் சேர்க்க படிவம் 6ஏ, நீக்கம் செய்ய 7, பெயர், முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும். இந்த பணிகளில் தி.மு.க.வினர் மெத்தன போக்கு காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×