search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetable"

    • திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சியானது
    • இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

    திருச்சி:

    திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதில் திருச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் பெரும் பங்காற்றி வருகிறது. இங்கு மாநகர மக்கள் அதிக அளவு சென்று காய்கறிகள் வாங்குகின்றனர். அதேபோன்று வியாபாரிகளும் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக மலிவு விலையில் காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே இன்றைய தினம் மேலும் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ சுரைக்காய் ரூ.3-க்கு விற்கப்பட்டது. அதேபோன்று கத்தரிக்காய் ரூ.7-க்கும், தக்காளி ரூ.8 முதல் ரூ.10-க்கும் சில்லறை விலையில் விற்கப்பட்டது.தக்காளி விலை வீழ்ச்சி தொடர்பாக தக்காளி மண்டி வியாபாரி ஹலீலுல் ரகுமான் கூறும் போது, ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி வி.கோட்டா பகுதிகளில் அதிக அளவு தக்காளி விளைச்சல் அடைந்துள்ளது.

    இன்னும் தக்காளி சீசன் 2 மாதத்திற்கு தொடர்ந்து இருக்கும். 27 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200 மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து பயிர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே விலை உயரும் வாய்ப்பு உள்ளது. மழை பெய்யாவிட்டால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இதே விலையை நீடிக்கும். தக்காளி விலைந்துள்ளதால் அங்குள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நிறைய விவசாயிகள் தக்காளி அறுவடையை நிறுத்தி விட்டார்கள்.

    சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தொழிலாளர்கள் நலன் கருதி லோடு அனுப்புகிறார்கள் என்றார். காய்கறி வியாபாரி ரமேஷ் என்பவர் கூறும் போது, பெரும்பாலான காய்கறிகள் சராசரியாக கிலோ ரூ.19-க்கு கீழ்தான் இருக்கிறது. அவரக்காய் ரூ.50-க்கும், பீன்ஸ் ரூ.50-க்கும் அதிகபட்சமாக விற்கப்படுகிறது. கேரட் ரூ.15, பீட்ரூட் ரூ.15, சவ்சவ் ரூ.12 விலைக்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோஸ் விலையும் இன்று வீழ்ச்சிடைந்துள்ளது. 90 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை முட்டைக்கோஸ் ரூ.300 மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் இல்லத்தரசிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    • விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதியை காணிக்கையாக வழங்கின்றனர்.
    • 5 டன் காய்கறிகள், பழங்கள், 108 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு கேள்வி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதி பொருட்களை விவசாயிகள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையக்கூடிய கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய், கீரை பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராட்சத யாககுண்டம் அமைத்து சுமார் 5 டன் காய்கறிகள் பழங்கள், 108 மூலிகை பொருட்கள் 2000 லிட்டர் நெய் கொண்டு 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக கேள்வி நடத்தினர்.

    அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் திருவாரூர் கும்பகோணம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும் இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தொடர்ந்து 10வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
    • பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கல்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, வடக்கு பட்டம் கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாமில் திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன் கலந்துகொண்டு திட்டத்தின் சிறப்புகள் குறித்து கூறினார்.

    இதில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

    தொடர்ந்து, பயனாளிகளுக்கு முழு மானியத்தில் தென்னங்கன்றுகள், 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள், துத்தநாக சல்பேட், 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

    இதில் வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை அலுவலர் மகேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் வேளாண் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • சிறிய கடை வைத்திருப்பவர்களில் சிலர் வெளியே கொட்டி வைத்து வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.
    • வெளியே காய்கறி வியாபாரம் செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது.

    ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன.

    கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.

    நேற்று முன்தினம் முதல் கடைகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. தொடர்ந்து காய்கறி வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் சிறிய கடை வைத்திருப்பவர்களில் சிலர் காய்கறிகளை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்யாமல் வெளியே கொட்டி வைத்து வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.

    இதனால் மற்ற பெரிய கடைகளில் வியாபாரம் செய்பவர்கள், தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுபோல் வெளியே காய்கறி வியாபாரம் செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    எனவே இதுபோன்ற செயல்களில் சிறிய கடை வியாபாரிகள் சிலர் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

    இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.
    • வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை வளாகம் அருகேயுள்ள காமராஜா் காய்கனி சந்தையில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 4.1 ஏக்கா் பரப்பளவில் ரூ. 20.26 கோடியில் புதிதாகக் கடைகள் கட்டப்பட்டன. இதில், 201 சிறிய கடைகள், 87 பெரிய கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    புதுப்பிக்கப்பட்ட இச்சந்தையைத் கடந்த மாதம் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

    ஆனால், பொது ஏலத்தில் கடைகள் எடுத்த வியாபாரிகளுக்கு சாவி வழங்கப்படாமல் இருந்தது.

    இதனிடையே, இச்சந்தையில் ஏற்கெனவே கடை நடத்தியவா்கள், தங்களுக்கும் கடை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக பழைய வியாபாரிகளிடம் மேயரும், மாநகராட்சி ஆணையரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதைத்தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் பொது ஏலத்தில் கடைகள் எடுத்த புதிய மற்றும் பழைய வியாபாரிகளுக்கு சாவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வியாபாரிகளிடம் மேயா் சண். ராமநாதன் சாவியை ஒப்படைத்தாா்.

    அப்போது, மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் உடனிருந்தாா்.பின்னா், மேயர் சண்.ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் பொது ஏலத்தில் கடைகள் வியாபாரிகளுக்கும், இரு கடைகள் எடுத்த திருங்கைகளுக்கும் சாவி வழங்கப்பட்டது.

    சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.இச்சந்தையின் கடைகள் வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    • பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.
    • விலை பல மடங்கு அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    போரூர்:

    மாண்டஸ் புயல் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வருகை பாதியாக குறைந்தது.

    இதனால் பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. மேலும் விற்பனை ஆகாமல் 500 டன் வரை காய்கறிகள் தேக்கம் அடைந்தன.

    இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காய்கறி உற்பத்தி நடைபெற்று வரும் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை.

    இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இன்று தக்காளி 39 லாரிகள், வெங்காயம் 50 லாரிகள் என மொத்தம் 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைவு காரணமாக கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.13-க்கு விற்ற தக்காளி இன்று விலை அதிகரித்து ரூ.22-க்கும், ஒரு கிலோ ரூ.10க்கு வாங்கி செல்ல யாரும் ஆர்வம் காட்டாத பீன்ஸ் மற்றும் உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகள் இன்று பல மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் ஒரு கிலோ ரூ100-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.150-க்கும், கிலோ ரூ.30-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ.45-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்ற அவரைக்காய் ரூ.60-க்கும், கிலோ ரூ.7-க்கு விற்ற முட்டை கோஸ் ரூ.15-க்கும், ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற வெள்ளரிக்காய் ரூ.30-க்கும், ரூ.10க்கு விற்ற காலிஃபிளவர் ஒன்று ரூ.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

    சில்லரை விற்பனை கடைகளில் பச்சை காய்கறிகளின் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    இதையடுத்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும்போது :-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 39 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தியான தக்காளியை அறுவடை செய்ய விவசாய தொழிலாளர்கள் யாரும் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களில் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:- தக்காளி-ரூ22, ஊட்டி கேரட்-ரூ45, ஊட்டி பீட்ரூட்-ரூ45, நைஸ் கொத்தவரங்காய்-ரூ70.

    • கோதுமை ரவா, காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவா கேசரி வழங்கப்பட்டு வருகிறது.
    • உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த முன்னோடி திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 தொடக்கப்பள்ளியில் பயிலும் 375 மாணவ- மாணவியர்களுக்கு திங்கட்கிழமை தோறும் சேமியா, உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் , செவ்வாய்க்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக சேமியா கேசரியும், வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோன்று கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளியில் பயிலும் 1067 மாணவ -மாணவியர்களுக்கும் திங்கட்கிழமை தோறும் ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் கோதுமை ரவை உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவா கேசரி வழங்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ -மாணவியர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கூட்டுறவு மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கும்பகோணம் மாநகராட்சி காலனி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கோபுசிவகுருநான் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல், ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செய ல்படுத்தப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் கூறறினார்.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்ட–த்தை சேர்ந்த மாணவி ஓவியதிலகம் கூறும்போது :-

    நான் தஞ்சாவூர் கூட்டுறவு காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறேன். நானும் என் நண்பர்க–ளும் தினமும் பள்ளியில் வழங்கப்படுகின்ற காலை உணவினை விரும்பி சாப்பிடுகின்றோம். சில சமயங்களில் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்ற சூழ்நிலை தற்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. தினமும் காலையில் வழங்கப்படுகின்ற சூடான உணவு வகைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இத்தகைய காலை உணவு திட்டத்தினை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றார்.

    தஞ்சையை சேர்ந்த மாணவன் கதிரேசனின் பெற்றோர் கூறும்போது, எனது மகன் தஞ்சை ராஜப்பாநகர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். நான் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். சில நேரங்களில் வேலைக்கு கால தாமதம் ஆகி விடும் என்பதால் சமைக்க முடிவ–தில்லை. குழந்தைகள் பழைய உணவினை சாப்பிட்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். இப்போது முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்ப–டுத்திய பின்னர் என் குழந்தைகள் தினமும் காலை உணவை பள்ளியில் சூடாக சாப்பிடு–கின்றனர். இது என்னை போன்ற பெற்றோருக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு நன்றி என்றார்.

    • நலிவுற்ற வியாபார குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் உயர்வு பெறும் வகையில் காய்கறி விற்பனை தள்ளுவண்டி மானியத்துடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது
    • நடமாடும் காய் கனிகள் விற்பனை வண்டிகளை இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கரூர் :

    குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காய் கனிகள் விற்பனை செய்து வரும் நலிவுற்ற வியாபார குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் உயர்வு பெறும் வகையில் தோட்டக்கலை சார்பாக ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காய்கறி விற்பனை தள்ளுவண்டி ரூ.15000 மானியத்துடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி உதவி இயக்குனர், வேளாண்மை துறை அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பாக நடமாடும் காய் கனிகள் விற்பனை வண்டிகளை இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினார.

    தொடர்ந்து தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளுக்கும் நடமாடும் காய் கனிகள் விற்பனை வண்டிகள் வழங்குவதாக தோட்டக்கலை துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. விழாவில் குளித்தலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சூரியனூர் சந்திரன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகர் மன்ற உறுப்பினர் சந்துரு, வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது.
    • பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையானது கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. காரணம்பேட்டை பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன இதனால் காரணம்பேட்டை நால் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அப்போது இருந்த தமிழக அரசு புதிதாக பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2014 -15ம் ஆண்டில், ரூபாய் 1.78 கோடி செலவில், புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு முதல்வர் ஜெயலலிதா வீடியோ காணொளி காட்சி மூலம் 16.6.2015ல் திறந்து வைத்தார்.

    இதையடுத்துஅந்த வளாகத்தில் இரண்டு சக்கர வாகனநிறுத்தம், வணிக வளாகம்,சுகாதார வளாகம் ஆகியவை சுமார் ரூ.1 கோடியில் கட்டப்பட்டது ஆனால் இந்த புதிய பஸ் நிலையம் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை .காரணம்பேட்டை நால்ரோட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருப்பதாலும், ஊருக்கு ஒதுக்குப்புற பகுதியில் இருப்பதாலும் இந்த பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்தவில்லை, போக்குவரத்து துறையினர் அரசு பஸ்கள் உள்ளே சென்று வர, உத்தரவிட்டும்,பயணிகள் யாரும் இல்லாததால் அரசு பஸ்கள் தொடரந்து அங்கு செல்வதில்லை தனியார் பஸ்கள் கோவையில் ஓய்வு எடுத்துவிட்டு புறப்பட்ட அரைமணிநேரத்தில் காரணம்பேட்டை வந்துவிடுவதால் அவர்களும் இந்த பஸ் நிலையதித்திற்குள் செல்லாமல் காரணம்பேட்டை நால்ரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

    இதனால் இந்த பஸ் நிலையம் கடந்த 8 ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த 2020ல் கோடாங்கிபாளையம் ஊராட்சிமன்றத்தின் முயற்சியால், இந்த பஸ் நிலையம் காய்கறி சந்தையாக்கப்பட்டது. பஸ் நிலையம் காய்கறி சந்தை அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டதும், ஏராளமான விவசாயிகள்,வந்து காய்கறி கடைகள் அமைத்தனர்*.தனால் கோடங்கிபாளையம், இச்சிபட்டி, பருவாய்,கரடிவாவி,சுக்கம்பாளையம், செம்மிபாளையம், காடாம்பாடி,காங்கேயம்பாளையம் மற்றும் சூலூர் விமானப்படைதள குடியிருப்பு பகுதி உள்ளடக்கிய சுமார் 25 ஆயிரம் மக்கள் காய்கறிகள் வாங்கி பயன் அடைந்தனர்.

    எனவே காரணம் பேட்டையில் பயன்படாமல் உள்ள பஸ் நிலையத்தை, விவசாயிகள், பொதுமக்கள், பயன்பெறும் வகையில் காய்கறி சந்தையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து காரணம்பேட்டையைச் சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி கூறியதாவது:- காரணம் பேட்டை பஸ்நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், பொதுமக்கள் செல்வதற்கு தயங்குகின்றனர்.மேலும் பஸ் நிலையம் திறக்கப்பட்ட புதிதில் டவுன் பஸ்கள் மட்டுமே வந்து சென்றன. வெளியூர் பஸ்கள் காரணம் பேட்டையில் உள்ள நால்ரோடு பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றனர். இதனாலும் பஸ் நிலையம் பயன்படாமல் போனது. இதன் பிறகு சிங்காநல்லூர் பஸ் நிலையம் துவக்கப்பட்டதால், மதுரை, திருச்சி, உள்ளிட்ட பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. வெளியூரிலிருந்து வந்து ஓய்வெடுத்த பின் மதுரை திருச்சிக்கு புறப்படும் பஸ்கள், சிங்காநல்லூரில் இருந்து புறப்பட்ட அரைமணி நேரத்தில் காரணம்பேட்டைக்கு பஸ் வந்துவிடுகிறது. இதனால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஓய்வெடுக்கவோ, டீ சாப்பிடவோ, விரும்புவதில்லை மேலும் தற்பொழுது வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், போக்குவரத்து நெரிசலால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டிய நிலை ஓட்டுனர்களுக்கு உள்ளது. இதனாலும் காரணம்பேட்டை பஸ் நிலையத்திற்குள் பஸ் வருவதில்லை, இந்த நிலையில் கடந்த "கொரோனா" காலத்தில், பஸ் நிலையத்தை காய்கறி சந்தையாக மாற்றினார்கள். இதனால் அருகே உள்ள கிராமங்களிலிருந்து காய்கறிகள், பழங்களைக் கொண்டுவந்து விவசாயிகள் விற்பனை செய்தனர். சுற்றுப்புறத்தை சேர்ந்த, கோடங்கிபாளையம், கரடிவாவி, பருவாய், இச்சிப்பட்டி, செம்மிபாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் காய்கறிகளை வாங்கி பயனடைந்தனர். விவசாயிகளுக்கும் போக்குவரத்து அலைச்சல் இன்றி விளை பொருட்களை விற்பனை செய்ய வழி கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்களுக்கும் புத்தம் புதிய காய்கறிகள் விலை மலிவாக கிடைத்ததால் அவர்களும் பயன் அடைந்தனர்.

    எனவே பயன்பாடு இல்லாமல் இருக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி சந்தை ஆக மாற்ற வேண்டும். மேலும் இதே பஸ்நிலையத்தில் கால்நடை சந்தையும் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காரணம்பேட்டை பஸ் நிலையத்தை விசைத்தறி ஜவுளி சந்தையாக மாற்ற வேண்டுமென விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர்,கோவை மாவட்டங்களில் சுமார் 2லட்சம் விசைத்தறிகள்,20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் ஜவுளி சந்தை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.ஜவுளி சந்தை அமைப்பதற்கான இடத்தை விசைத்தறியாளர்கள் தங்களது பங்களிப்பு மூலம் வாங்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள தொழில் நிலையில், இடத்தை வாங்குவது விசைத்தறியாளர்களால் முடியாது. இதுதவிர வீட்டு மனை இடங்கள் விலை உயர்ந்துள்ளதால், விசைத்தறியாளர்கள் இடத்தை வாங்குவது சிரமமான காரியம்.

    ஜவுளி சந்தை உருவாக்க அரசே இடத்தை வழங்கி உதவ வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, ஜவுளிச்சந்தையாக மாற்ற வேண்டும்.காரணம்பேட்டை வளர்ந்து வரும் பகுதி என்பதால், அங்கு ஜவுளிச்சந்தை அமைந்தால்,விசைத்தறி தொழிலும் வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிச்சாமி கூறியதாவது:-பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. ஊராட்சி நிர்வாகம் தரப்பில், சுகாதார வளாகம், வாகன நிறுத்துமிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை இணைந்து, பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில்,பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 14 பிளாக்குகளில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 பிளாக்குகளில் ஆடிபட்டம் காய்கறி முனைப்பு இயக்கம் நடைபெற்றது
    • விவசாயிகளுக்கு கொடி காய்கறி விதைகள், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விதைகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆடிபட்டம் காய்கறி விதைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் வழங்க தோட்டகலைத்துறை மற்றும் மலைப்பயிர் துறைக்கு அறிவுறுத்தினார்.

    அதன்பேரில் மாவட்ட தோட்டக்கலைதுறை துணை இயக்குனர் கலைச்செல்வன் வழிகாட்டுதல் படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 பிளாக்குகளில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 பிளாக்குகளில் ஆடிபட்டம் காய்கறி முனைப்பு இயக்கம் நடைபெற்றது.

    இந்த 3 பகுதிகளிலும் நடந்த நிகழ்ச்சியில் அந்தந்த தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு கொடி காய்கறி விதைகள், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விதைகள் வழங்கப்பட்டன. மேலும் காய்கறி சாகுபடி செய்து அதிக மகசூல் செய்வது குறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மற்ற பிளாக்குகளிலும் ஆடிப்பட்டம் காய்கறி முனைப்பு இயக்கம் நடைபெற உள்ளது.

    • மேலூர் செக்கடி பஜாரில் செயல்பட்ட காய்கறி மார்க்கெட் நாளை முதல் சந்தைப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
    • மேலூர் நகர மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் அதற்கான பூமி பூஜை நடந்தது .

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பஜாரில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. அந்த மார்க்கெட்டின் கட்டிடங்கள் பழமையானதாகவும் இடிந்து விழும் நிலையிலும் இருந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட சுமார் ரூ. ஏழேமுக்கால் கோடி மதிப்பீட்டில் 110 கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    சில நாட்களுக்கு முன் அங்கு மேலூர் நகர மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் அதற்கான பூமி பூஜை நடந்தது . அதனை தொடர்ந்து தினசரி காய்கறி மார்க்கெட்டை மேலூர் சந்தைப்பேட்டைக்கு தற்காலி–கமாக இடமாற்றம் செய்வதற்காக அங்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 110 கடைகள் கட்டப்பட்டது.

    ஆனால் திடீர் என காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அங்கு செல்ல மறுத்தனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை செய்தனர்.

    அதன் பிறகும் காய்கறி வியாபாரிகள் செல்ல மறுத்ததால் நகராட்சி தலைவர் காய்கறி சங்க வியாபாரிகளை அழைத்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினார். வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தருவதாகவும், பொதுமக்கள் வந்து செல்ல வசதி செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

    அதன் பேரில் காய்கறி சங்க வியாபாரிகள் அங்கு செல்ல சம்மதம் தெரிவித்தனர். மேலூர் செக்கடி பஜாரில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட் புதிய கடைகள் கட்டும் வரை சந்தைப்பேட்டைக்கு தினசரி காய்கறி மார்க்கெட் மாற்றி நாளை முதல் அங்கு செயல்படும்.

    பொதுமக்கள் சந்தைப்பேட்டையில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் சென்று காய்கறி வாங்க நகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டனர்.

    • அப்போது வெளியே இருந்த கடைகளை சந்தைக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
    • இதையடுத்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சந்தைக்கு வெளியே கடை அமைத்து வியாபாரம் செய்து வருவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் திருக்காட்டுப்பள்ளி உழவர் சந்தையில் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது வெளியே இருந்த கடைகளை சந்தைக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விலை பொருட்களான காய்கறிகள், கீரைகள் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சந்தைக்குள் மட்டும் தான் வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடியை தீவிரபடுத்தவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த கலைஞர் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் வழங்குவது குறித்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வில் பாபநாசம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பரிமேலழகன் உடன் இருந்தார்.

    ×