search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varalakshmi"

    என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார். #Varalakshmi #Danny
    கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது பயணத்தை மாற்றி வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.

    அடுத்ததாக காமெடியிலும் களமிறங்கத் தொடங்கி உள்ளார். அறிமுக இயக்குனர் சந்தானமூர்த்தி இயக்கும் புதிய படம் டேனி. முத்தையா, தீபா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ஜனவரி 7-ம் தேதி இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வில்லத்தனமான கேரக்டரில் நடித்துவந்த வரலட்சுமி முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் காமெடிக்கு மாறியுள்ளார். இதன் திரைக்கதையில் நாய் ஒன்று முக்கிய இடம் வகிக்கிறது.



    வரலட்சுமி கதாபாத்திரத்துடன் இணைந்து பயணிக்கும் விதமாக அந்த நாய் இடம் பெறுகிறது. அந்த நாயின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள வரலட்சுமி, “பெரிய நட்சத்திரம் இவள். டேனி படத்தில் தனது காட்சிக்காக காத்திருக்கிறாள்.

    என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான். இவளோடு இணைந்து பணியாற்றுவது விருப்பமானதாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆன்ந்த்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பாசில் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
    மாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், ஒரு பக்தனாக அவர் முன்னாடி நின்றது என்னால் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார். #Dhanush #Maari2
    தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், ‘எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி. எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன். மாரி நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும். 

    மாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார். அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். நான் எழுதிய வரியை பார்த்து, முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் சம்மந்தமே இல்லை என்றார். பின்னர் படித்து பார்த்து பாடி கொடுத்தார்.



    என் கிட்ட ஒரு சில வீடியோக்கள் இருக்கிறது அதை அப்புறம் பகிர்கிறேன். ஒரு குழந்தையாக, ஒரு பக்தனாக அவர் முன்னாடி நின்ற சில நேரங்கள் என்னால் மறக்கவே முடியாது’ என்றார்.
    எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2 படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Neeya2 #Jai
    கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா'. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2' என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. கதைக்கு தேவைப்பட்டதால் `நீயா 2' என்று பெயர் வைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் எல்.சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.

    இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்டியாக படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

    படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். மேலும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். #Neeya2 #Jai

    வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் நாளை வெளியிட இருக்கிறார். #Dhanush #Varalakshmi #VelvetNagaram
    ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. 

    தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வெல்வெட் நகரம் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். 

    சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வடசென்னை படத்தை அடுத்து, தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மார் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Maari2 #Dhanush
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘மாரி 2’ உருவாகி இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெறும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பாக ரிலீஸ் ஆனது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.



    கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Maari2 #Dhanush
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் முதல் தகவல் வெளியாகியுள்ளது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

    இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்! படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்தது. 

    தற்போது அந்த அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்கார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை செப்டம்பர் 24ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 25ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் வருவதால், முதல் பாடலை ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.



    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay #SarkarKondattam
    திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் விமர்சனம். #MrChandramouli #Gauthamkarthik #Karthik
    அப்பா, மகன் என கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கார், ரேடியோ என பழமையான பொருட்களின் மீது அதீத ஆர்வம் கொண்டவராக கார்த்திக்கும், நிகழ்கால வளர்ச்சிக்கு ஏற்ப பாக்ஸராக கவுதம் கார்த்திக்கும் வருகின்றனர். 

    ஒருநாள் தனது பத்மினி காரில் வெளியே செல்லும் கார்த்திக் ரெஜினா மீது மோதி விடுகிறார். இதையடுத்து தனது வண்டியை சரிசெய்து கொடுக்கச் சொல்லி கார்த்திக்கின் காரை ரெஜினா எடுத்துச் செல்கிறார். இதையடுத்து அந்த வண்டியை சரிசெய்து ரெஜினாவை திட்டுவதற்காக கவுதம் கார்த்திக் அவளது அலுவலகத்திற்கு செல்கிறார். ரெஜினாவை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வலையில் சிக்குகிறார். உடனடியாகவே தனது காதலையும் ரெஜினாவிடம் வெளிப்படுத்துகிறார். சண்டையில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு, பின்னர் காதலாக மாறுகிறது. 



    இதுஒருபுறம் இருக்க, கால்டாக்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் மகேந்திரன். சிறந்த சேவை வழங்குவதாக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்த வருடம் அந்த விருதை தான் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சந்தோஷ் பிரதாப். ஆனால் அவரது கால்டாக்சியில் சில குற்றச் செயல்கள் நடக்கிறது. அதற்கு மகேந்திரன் அச்சாணி போடுகிறார். 

    இந்த நிலையில், மகேந்திரனின் ஸ்பான்சர்ஷிப் மூலம் கவுதம் கார்த்திக் பெங்களூ சென்று பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று திரும்புகிறார். வெற்றி களிப்பில் இருக்கும் கவுதம் கார்த்திக்கிடம், எதையோ சொல்ல முயற்சி செய்கிறார் கார்த்திக். அதற்காக இருவரும் காரில் வெளியே செல்கின்றனர். 



    அப்போது, அவர்கள் கார் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த விபத்தில் கார்த்திக் இறந்துவிடுகிறார். கவுதம் கார்த்திக்குக்கு கண்ணிற்கு செல்லும் நரம்பு அறுந்து, பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. இந்த நிலையில், வரலட்சுமி பற்றிய அதிர்ச்சியளிக்கும்படியான போஸ்ட் ஒன்று கவுதம் கார்த்திக் வீட்டிற்கு வருகிறது. 

    அது என்ன போஸ்ட்? வரலட்சுமி யார்? அவளுக்கு என்ன ஆனது? கார்த்திக் உயிரிழப்பு இயற்கையானதா? வரட்சுமிக்கும், கார்த்திக் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காதல் காட்சிகளில் துறுதுறுவெனவும், அப்பாவை இழந்து தவிக்கும் காட்சியில் கவர்ந்தும் ரசிக்க வைத்திருக்கிறார். ரெஜினா தைரியமான பெண்ணாக வந்து கவர்கிறார். ஏதேதோ ஆனேனே பாடலில் ஓரளவுக்கு கவர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டியிருக்கிறார். 



    கார்த்திக்குக்கு தீனி போடும் கதாபாத்திரமாக, இது அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும், கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். 

    கார்த்திக்குக்கு சமமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி ஸ்கோர் செய்திருக்கிறார். வரலட்சுமி தனது கதாபாத்திரத்தை முதிர்ச்சியான நடிப்புடன் மெருகேற்றியிருக்கிறார். 

    இந்த படத்தை பொறுத்தவரை சதீஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் அவர் அடிக்கும் கவுண்டரும் பெரிதாக எடுபடவில்லை. காமெடி இருக்கும் என நினைத்து போனால் ஏமாற்றம் தான்.



    இயக்குநர் திருவை பொறுத்தவரையில், மாறுபட்ட கதையின் மூலம் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் மனோநிலை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. சிரிப்பு, காதல், சண்டை, சோகம் என மாறுபட்ட உணர்ச்சிகள் இல்லாமல் கதை எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது. 

    சாம்.சி.எஸ். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `மிஸ்டர்.சந்திரமௌலி' வலுவில்லை.
     #MrChandramouli #Gauthamkarthik #Karthik

    மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் கார்த்திக் மனம் திறந்து பேசினார். #MrChandramouli #Karthik
    தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்பட்ட கார்த்திக் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து மகன் கவுதமுக்கு அப்பாவாகவே மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து...

    நான் கவுதமை வைத்து படம் இயக்குவதற்காக கதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த கதை அவருக்கு தெரியாது. ஒருநாள் என்னிடம் வந்து ஒரு கதை கேட்கறீங்களா? என்று கேட்டார். சம்மதித்தேன். திருவை அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட்டார். கதை மிகவும் பிடித்ததால் சம்மதித்தேன். நானும் அப்பாவும் சேர்ந்து நடித்ததில்லை. நான் நடிக்க தொடங்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது. தனிமையாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை வேகமாக ஓடியது. அதை சரி செய்ய என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன். இப்போது கவுதமிடம் பேசி அவர்கள் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்திலும் வாழ்ந்து இருக்கிறோம். 8 வயதிலேயே என்னை பிரிந்துவிட்டார். இப்போதுதான் நாங்கள் நெருக்கமாக பேசிக்கொள்கிறோம். கவுதம் நடிப்பதை ரசிக்க தொடங்கி விட்டேன்.

    இல்லை. அதில் அப்பா மகன் உறவே இல்லை. அது முற்றிலும் வித்தியாசமானது.

    மகன் காதல் காட்சிகளில் நடிப்பதை பார்த்து பொறாமை இல்லையே?

    இல்லவே இல்லை. நான் நடிக்கும் போது இப்படி எல்லாம் இல்லையே... மகன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். பொறாமை எல்லாம் இல்லை.



    உங்கள் குரலை மிமிக்கிரி பண்ணுபவர்கள் பற்றி?

    நான் நன்றாக தானே பேசுகிறேன். நான் நடிக்கும்போது இப்போது இருப்பது போல டிராக் வைத்து டப்பிங் பேச முடியாது. ஒருமுறை தவறு செய்தால் முழுமையாக பேசவேண்டும். அப்படி டப்பிங் பேசி பேசித் தான் என் குரல் அப்படி ஆனது. சிலர் என் குரலை மிமிக்கிரி செய்யும்போது அப்படியா இருக்கிறது? என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

    இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நீங்கள் சரியான நேரத்துக்கு வந்ததாக இயக்குனர் கூறினாரே?

    நான் 2002 க்கு முன்பு அப்படி இருந்ததில்லை. 2002க்கு பின் சில படங்களில் அப்படி ஆனது. நான் அப்படி இருந்திருந்தால் இத்தனை படங்களில் நடித்திருக்க முடியுமா? சிலர் என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

    இதை அவரிடம் தான் கேட்க வேண்டும். 32, 34 வயதில் திருமணம் செய்வார் என நினைக்கிறேன். நாளைக்கே ஒரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்துகொள்வதாக கூறினாலும் நான் சம்மதிக்க தயாராக இருக்கிறேன்.

    கவுதம் பற்றி அதிகம் கிசுகிசுக்கள் வரவில்லையே?

    அந்த அளவுக்கு சாமர்த்தியமாக இருக்கிறார் போல. #MrChandramouli #Karthik
    கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சதீஷ், படக்குழுவை கலாய்த்து அரங்கத்தை சிரப்பலையால் நனைய வைத்தார். #MrChandramouli #GauthamKarthik
    திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலி படம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கவுதம் ஜோடியாக ரெஜினாவும், முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடித்துள்ளனர். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

    இதில் நடிகர் சதீஷ் பேசியதாவது,

    `திரு பேசும் கவுதம் கார்த்திக் இதுவரை நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொன்னார். ஆனால் முந்தைய படங்களில் எல்லாம் கவுதம் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹர மஹாதேவகி என அவர் ரியாலாகவே நடித்திருந்தார். கவுதமுக்கு இது எல்லாம் ஈசி. ஆனால் இந்த படத்தில் உண்மையாகவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். பாக்ஸிங்குக்காக உடற்பயிற்சி செய்து கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தில் 2 ஹீரோயின்கள் இருந்தும், அவர் தான் அழகாக இருப்பார். 



    படப்பிடிப்பில் கார்த்திக் சாரை பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அவரிடம் முத்தம் வாங்க நாங்க தினமும் காத்திருப்போம். டார்லிங் என கூப்பிட்டு அவர் கொடுக்கும் முத்தம் தான் எங்களுக்கு உத்வேகம். இது எங்களுக்கு கிடைத்த பெருமை' என்றார். #MrChandramouli #GauthamKarthik

    திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #MrChandramouli
    திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.சந்திரமௌலி'. கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார். 

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் ஜூலை 6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



    இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார். 

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரிச்சர்டு எம்.நாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #MrChandramouli #ReginaCassandra

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான விஷால் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறியிருக்கிறார். #Vishal #Varalakshmi
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியில் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறினார். விஷால் கூறியதாவது, 

    துணை இயக்குநராக சினிமா பயணத்தை துவக்கிய என்னை நடிகனாக பார்த்தவர் நடிகர் அர்ஜுன் தான். அதன் பின்னர் தான் செல்லமே படத்தில் நடித்தேன். நான் நடிகனாக அவர் தான். நான் துணை இயக்குநராக பணிபுரியும் போது நான் வாங்கிய முதல் சம்பளம் 100 ரூபாய் தான். 

    படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு முதலில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். அதற்காக தொடர்ந்து கமர்ஷியல் படங்களை மட்டுமே பண்ண கூடாது என்பதால் பாலாவின் `அவன் இவன்' எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால் தொடர்ந்து பெயருக்காக மட்டுமே படம் பண்ண முடியாது. வித்தியாசமான படங்களை பண்ணவே ஆசைப்படுகிறேன். அடுத்ததாக புதுமுக இயக்குநருடன் இணைகிறேன். அந்த படமும் சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் படம் தான். 



    எனது வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியமானவர்கள். நமது நிறை, குறைகளை எடுத்துச் சொல்வது நண்பர்கள் தான். எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் எனது நண்பர்களை தான் சொல்வேன். 

    அந்த வகையில், வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை 8 வயதில் இருந்தே எனக்கு தெரியும். நாங்கள் குடும்ப நண்பர்கள். வரலட்சுமி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் நல்ல தன்னம்பிக்கையான பெண். எனது தவறுகளைசுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்துவார். எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் அவர். எனது நெருங்கிய தோழி. நாங்கள் நல்ல நண்பர்கள். எனது குறிக்கோள் நடிகர் சங்க கட்டிடம் கட்டிடுவது தான். நல்லது, கெட்டது என அனைத்தையும் வரலட்சுமியுடன் பகிர்ந்து கொள்வேன் என்றார். 

    மிஷ்கின் பற்றி பேசும் போது, வருடத்திற்கு ஒரு படத்திலாவது அவருடன் இணைய ஆசைப்படுகிறேன். அடுத்ததாக துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் அவருடன் இணையவிருக்கிறேன். சண்டைக் காட்சிகளில் என்னையே வியக்க வைத்தவர் மிஷ்கின் தான். இவ்வாறு விஷால் பேசினார். #Vishal #Varalakshmi

    ×