search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balaji Mohan"

    • 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார்.
    • பாலாஜி மோகன்-நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் தகவல் பரவியது.

    'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த 'வாயை மூடி பேசவும்', தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'மாரி', தனுஷ்-சாய் பல்லவியின் நடிப்பில் மாரி 2 ஆகியப் படங்களை இயக்கினார். அதோடு மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' படத்தையும் தயாரித்தார்.

     

    பாலாஜி மோகன் 

    பாலாஜி மோகன் 

     

    2012-ல் தனது முதல் படத்தை இயக்கும் போது அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்தத் திருமணம் பின்னர் விவாகரத்தில் முடிந்தது. இதற்கிடையே, தெலுங்கு தொலைக்காட்சி நடிகை கல்பிகா கணேஷ், பாலாஜி மோகன்-நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் தெரிவித்தார். அதோடு அவர் தனது மனைவியை கட்டுப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டியிருந்தார்.

     

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன் 

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன் 

    இந்நிலையில் தற்போது பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ள எனக்கும், '7 ஆம் அறிவு', 'ராஜா ராணி' ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணாவுக்கும் கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் நடந்தது. வெப் தொடர்களில் நடித்து வரும் தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ், எங்களின் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அதை அவர் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார். அதோடு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன் 

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன் 

    இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதாடினார். பின்னர் டைரக்டர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த கல்பிகா கணேஷுக்கு நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு ஜனவரி 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன்.
    • தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

    காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அதன்பின்னர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்து தனக்கான இடத்தை பிடித்தார்.

     

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன்

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன்

    இந்நிலையில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகை ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. '7ஆம் அறிவு', 'காதலில் சொதப்புவது எப்படி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்த தன்யா பாலகிருஷ்ணனை நீண்ட வருடங்களாக காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டாதாகவும் பேசப்படுகிறது.

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. 

    யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். தொடக்க முதலே பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.



    தற்போது வரை ரவுடி பேபி பாடலை 200 மில்லியன் (20 கோடி) பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் சினிமாவில் 20 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் வீடியோ பாடல் என்ற சாதனையை ‘ரவுடி பேபி’ படைத்துள்ளது. மேலும் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி’ முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

    ரவுடி பேபி பாடல்:

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். பாடலும் பெரிய வைரலாக பரவியது.

    மேலும் சர்வதேச பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம்பெற்று சாதனை புரிந்தது. தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்கள் கொண்ட பாடலாக ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் இருந்து வந்தது. இதுவும் ‘3’ படத்துக்காக தனுஷ்-அனிருத் கூட்டணி இணைந்து உருவாக்கியது. இந்த பாடல் தற்போது வரை சுமார் 175 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த சாதனையை ‘ரவுடி பேபி’ வீடியோ பாடல் உடைத்துள்ளது.



    தற்போது 183 மில்லியன் பார்வைகளோடு, தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் ‘பிடா’ படத்தின் ‘வச்சிந்தே’ வீடியோ பாடல் 182 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த சாதனையையும் இன்று காலை 183 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியதன் மூலம் தகர்த்தது. #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வெளியான 2 வாரங்களில் யூடியூப்பில் 10 கோடி பார்ரைவயாளர்களை பெற்றுள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’  பாடல் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

    கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூடிப்பில் வெளியான ‘ரவுடி பேபி’  பாடல், சுமார் 2 வாரங்களில் 10 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் இந்த பாடலுக்கு 10 லட்சம் லைக்சும் கிடைத்துள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில், `இந்த படத்தில் இடம்பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், அனைவருக்கும் நன்றி, உண்மையிலேயே இது மிகப்பெரிய விஷயம், எல்லா புகழும் இறைவனுக்கே' என்று குறிப்பிட்டுள்ளார்.


    பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’  பாடல் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

    கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூடிப்பில் வெளியான ‘ரவுடி பேபி’  பாடல், விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடலை முந்தியுள்ளது. ஆளப்போறான் தமிழன் யூடியூப்பில், 9 கோடியே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ரவுடி பேபி பாடல் தற்போது வரை 9 கோடியே 65 லட்சத்தை தாண்டியுள்ளது. விரைவில் 10 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த வீடியோ பாடலுக்கு 10 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.



    முன்னதாக, தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் பில்போர்டில் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக ரவுடி பேபி இடம்பிடித்திருந்தது. பில்போர்டின் இந்த வரிசையில் இடம்பெறும் முதல் தமிழ் வீடியோ பாடல் ‘ரவுடி பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது. 

    பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

    ரவுடி பேபி வீடியோ பாடல்:

    தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் படைத்த சாதனை வெளியாகியுள்ளது. #Maari2 #RowdyBaby #Dhanush
    மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலாஜி மோகன், தனுஷ் கூட்டணியில் வெளியான படம் ‘மாரி 2’. இதில், தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மேலும் வரலட்சுமி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 
    யுவன் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிகுந்த கவனம் பெற்றன. குறிப்பாக ரவுடி பேபி பாடல் ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

    இந்த பாடல் படைத்த சாதனையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பகிர்ந்துள்ளார். அதில், ரவுடி பேபி பாடலின் லிரிக்கல் வெர்ஷன் வெளியாகி 35 நாளில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது.



    சமீபத்தில் வெளியான வீடியோ சாங் ஒரே நாளில் 7 மில்லியன் பார்வையாளர்களையும், 2 லட்சத்து 88 ஆயிரம் லைக்குகளும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை யுவன், தனுஷ் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர். #Maari2 #RowdyBaby
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மாரி 2' படத்தின் விமர்சனம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi
    மாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் செய்து வந்த கடத்தல் தொழில்களை விட்ட தனுஷ், தான் வைத்திருந்த ஆட்டோவை சாய் பல்லவியிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல சேட்டை செய்கிறார். ரோபோ சங்கர் மற்றும் வினோத் இருவரும் தனுஷின் நண்பர்களாக எப்போதும் உடனிருக்கிறார்கள்.

    தனுஷை காதலிக்கும் சாய் பல்லவி, ரவுடி பேபி என்று தனுஷை கலாய்ப்பதுடன், அவரையே சுற்றி வருகிறார். தனுஷின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா. போதை மருந்து கடத்தி, போதைக்கு அடிமையான கிருஷ்ணாவை தனுஷ் நல்வழிப்படுத்தி, கடத்தல் தொழிலை விடவைக்கிறார்.



    போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று எப்படியாவது தனுஷை போதை பொருளை கடத்த வைக்க முயற்சி செய்கிறது. தனுஷ் அதற்கு ஒத்துப்போகாததால் தனுஷ் - கிருஷ்ணாவை பிரித்து, தனுஷை கொல்ல திட்டமிடுகின்றனர்.

    மறுபுறம் பகையுடன் ஜெயலில் இருந்து வெளிவரும் டோவினோ தாமஸ் தான் அனுபவித்த வலியை தனுஷுக்கு கொடுக்க நினைக்கிறார். கிருஷ்ணாவின் தம்பி மூலமாக தனுஷ் - கிருஷ்ணா இருவரையும் பிரித்து விடும் டோவினோ, தனுஷுக்கு செக் வைக்கிறார். 

    இதில் சாய் பல்லவியும் சிக்கிக் கொள்கிறார். சாய் பல்லவியை காப்பாற்றுவதற்காக தனுஷ் அவருடன் தலைமறைவாகிறார். இதற்கிடையே டோவினோ பெரிய தாதாவாகி, அரசியலில் இறங்க முயற்சிக்க, முக்கிய பொறுப்பில் இருக்கும் வரலட்சுமி தனுஷை தேடுகிறார்.



    கடைசியில், வரலட்சுமி தனுஷை கண்டுபிடித்தாரா? தனுஷ், சாய் பல்லவி என்ன ஆனார்கள்? தனக்கு வந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார்? தனுஷ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பினாரா? என்பதே சேட்டையான மாரியின் மீதிக்கதை.

    மாரியாக சேட்டை செய்வதில் தனுஷ் அப்படியே இருக்கிறார். மாரி முதல் பாகத்தில் இருந்ததைப் போலவே இதிலும் கலக்கியிருக்கிறார். முதல் பாதியில் மாரியாகவும், இரண்டாவது பாதியில் இயல்பான தோற்றத்திலும் வருகிறார். தனுஷை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி உள்ளூர் பெண்ணாகவே மாறியிருக்கிறார். தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் வரலட்சுமியை பாராட்டியே ஆக வேண்டும். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.



    தனுஷின் நண்பனாக கிருஷ்ணா அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். டோவினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தனுஷ் - டோவினோ இடையேயான மோதல் ரசிக்கும்படியாக இருந்தது. ரோபோ சங்கர், வினோத் இணைந்து காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மற்றபடி காளி வெங்கட், ஸ்டன்ட் சில்வா, வித்யா பிரதீப் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.

    முதல் பாதியில் தனுஷை மாரியாக காட்டிய இயக்குநர் பாலாஜி மோகன், இரண்டாவது பாதியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மாரியாக வரும் தனுஷை பழைய ஃபார்மில் காட்டியிருப்பது சிறப்பு. படத்தின் கதைக்கு ஏற்றபடி திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `மாரி 2' நல்லா செஞ்சிருக்கலாம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi

    மாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், ஒரு பக்தனாக அவர் முன்னாடி நின்றது என்னால் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார். #Dhanush #Maari2
    தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், ‘எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி. எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன். மாரி நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும். 

    மாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார். அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். நான் எழுதிய வரியை பார்த்து, முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் சம்மந்தமே இல்லை என்றார். பின்னர் படித்து பார்த்து பாடி கொடுத்தார்.



    என் கிட்ட ஒரு சில வீடியோக்கள் இருக்கிறது அதை அப்புறம் பகிர்கிறேன். ஒரு குழந்தையாக, ஒரு பக்தனாக அவர் முன்னாடி நின்ற சில நேரங்கள் என்னால் மறக்கவே முடியாது’ என்றார்.
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், வரலட்சுமியின் நடிப்பை புகழ்ந்து பேசினார். #Maari2 #Dhanush
    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா, வினோத், டோவினோ தாமஸ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இதில் நடிகர் தனுஷ் பேசியதாவது,

    வரலட்சுமியுடன் நடிக்க கஷ்டமாக இருந்தது. படத்தில் வரலட்சுமி ஒரு வசனம் சொல்கிறார் என்றால், நாம் அதற்கு பதில் யோசிப்பதற்கு முன்பே அதை சொல்லி முடித்துவிடுவார். வரலட்சுமியின் நடிப்பே வேற மாதிரி இருக்கும். அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்க அவர்களுக்கு ஏற்ப நடிக்க ஆரம்பித்தேன். படப்பிடிப்பில் ரோபோ ஷங்கர், வினோத் இல்லை என்றால் அன்றையே ஷீட் போரடிக்கும்.

     

    அவர்கள் இருவரும் இருந்தால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். மாரி 2 படத்தில் நடிக்க கேட்கும் போது ரோபோ ஷங்கர் கால்ஷீட் கொடுக்க முடியாதபடி பிசியாக இருந்தார். அது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. #Maari2 #Dhanush

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய படக்குழு மோதலை உறுதிப்படுத்தியது. #Maari2 #Dhanush
    `வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதேநாளில் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


    இந்த நிலையில், மாரி-2 டிசம்பர் 21-ஆம் தேதி, குறித்த தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம்  மோதலை மாரி-2 படக்குழு உறுதிசெய்துள்ளது. மேலும் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா இசையில், சமீபத்தில் வெளியான `ரவுடி பேபி' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Maari2 #Dhanush

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. #Maari2 #Dhaush
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாகிறது.

    தனுஷ் தற்போது வரலாற்று கதையம்சம் கொண்ட படமொன்றை இயக்கி, நடித்து வருகிறார். #Maari2 #Dhanush

    ×