என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Valparai"
- கடையில் பொருட்களை தின்றும், தூக்கி எறிந்தும் சேதப்படுத்தியது.
- யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனைமலை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லமுடி- பூஞ்சோலை எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது.
இந்த தேயிலை தோட்ட நிர்வாகத்தின் கீழ் அங்கு ஒரு டீக்கடையும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ராஜா வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியில் வந்த 7 காட்டு யானைகள் கூட்டம் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.
வெகுநேரமாக அங்கேயே சுற்றிதிரிந்த யானை கூட்டம், அங்குள்ள ராஜாவின் டீக்கடை அருகே சென்று கடையை உடைத்து உள்ளே புகுந்தது.பின்னர் அங்குள்ள பொருட்களை தின்றும், தூக்கி எறிந்தும் சேதப்படுத்தியது. பின்னர் யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டன.இன்று காலை ராஜா கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியானார்.
அப்போது யானை கடையை உடைத்து பொருட்களை சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதம் அடைந்த கடையை பார்வையிட்டனர்.
மேலும் சம்பவம் குறித்து அங்கிருந்த மக்களிடமு ம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மக்கள் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வெளியில் நடமாட அச்சமாக உள்ளது. எனவே யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் யானைகள் மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- குடியிருப்பையொட்டிய பகுதியிலேேய முகாமிட்ட இந்த காட்டு யானை அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
- அந்த வழியாக வந்த வாகனங்களை ஆங்காங்கே வாகன ஓட்டிகள் நிறுத்தி வைத்தனர்.
பொள்ளாச்சி :
கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதி களையொட்டி அடர்ந்த வனம் காணப்படுகிறது. இந்த வனங்களில் சிறுத்தை, மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.குறிப்பாக யானைகள் கூட்டம் எஸ்டேட்டை ஒட்டிய குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்துவதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சத்திலும், கவலையிலும் உள்ளனர்.இந்த நிலையில் வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி வந்தது.குடியிருப்பையொட்டிய பகுதியிலேேய முகாமிட்ட இந்த காட்டு யானை அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
தொடர்ந்து அங்கு முகாமிட்ட யானை நேற்று மாலை சிறுகுன்றா சாலையில் சுற்றி திரிந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்களை ஆங்காங்கே வாகன ஓட்டிகள் நிறுத்தி வைத்தனர். நீண்ட நேரம் அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை பின்னர் அங்கிருந்து எஸ்டேட் பகுதிக்குள் சென்றது.
அதன்பின்னரே வாகன ஓட்டிகள் வாகனத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர். சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சஜிதா வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டு இருந்தார்.
- போலீசார் மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை
கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 41). கூலி தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா குமாரி (38). இவர்களது மகள் சஜிதா (15).
இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சஜிதா வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தொட்டில் அருகில் இருந்த மரமேஜை மீது மோதியது. இதில் தொட்டில் இருந்த சஜிதாவின் தலை மற்றும் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்கை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சஜிதாவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டிலில் விளையாடிய சிறுமி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வால்பாறையில் இன்று காலை சம்பவம்
- செடிகளுக்கு மருந்து அடித்து கொண்டு இருந்தார்.
பொள்ளாச்சி,
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் புதுவா ஓரான் (வயது 29). கடந்த சில வருடங்களுக்கு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். பின்னர் மானாம்பள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட செங்குத்துப்பாறையில் உள்ள ஒரு எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
புதுவா ஓரான் இன்று காலை 8.50 மணியளவில் எஸ்டேட்டில் உள்ள செடிகளுக்கு மருந்து அடித்து கொண்டு இருந்தார். அப்போது புதருக்குள் மறைந்து இருந்த கரடி திடீரென புதுவா ஓரானை தாக்கியது. இதனை பார்த்து பயந்த அவர் தப்பி ஓடினார். ஆனால் அவரை கரடி விரட்டி சென்று தாக்கியது. கரடியிடம் இருந்து தப்பிக்க அவர் போராடினார். ஆனால் அவரது கால் மற்றும் உடலில் கரடி தாக்கியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவர் விரைந்து வந்து புதுவா ஓரானை தாக்கிய கரடியை சத்தம் எழுப்பி காட்டுக்குள் விரட்டினர். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் வால்பாறை பகுதியில் பகல் நேரத்தில் அதிக வெப்பமும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை வட்டார பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் மதியம் மற்றும் மாலை கனமழை பெய்துவருகிறது. நேற்றும் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மதியம் 12 மணி முதல் 5 மணிவரை கனமழை பெய்தது.
இதனால் வால்பாறை பகுதி பொது மக்கள் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழைகாரணமாக கடந்த மாதத்தில் குறையைத் தொடங்கிய சோலையார் அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் சோலையார் மின்நிலையம்-2 இயக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.அவ்வப் போது நிறுத்தப்பட்டாலும் சோலையார் மின் நிலையம்-1 ம் இயக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி பெய்துவருகிறது.வால்பாறை பகுதியை பொறுத்தவரை இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கி மிக கனமழையாக பெய்தது.
இதே போல வடகிழக்கு பருவமழையும் உரிய நேரத்தில் தொடங்கி பல சமயங்களில் லேசான மழை பெய்த போதும் அவ்வப்போது மிக கனமழையாக பெய்துவருகிறது.வடகிழக்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கியுள்ளதால் அதிகளவில் மழை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ஆழியார் அணையிலிருந்து சமவெளிப்பகுதி மக்களின் விவசாயத் தேவைகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் வால்பாறை பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு சமவெளிப் பகுதி விவசாயிகளுக்கு கூடுதலாக தண்ணீர் கிடைப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாலை 5 மணிக்கு திடீரென எதிர்பாராதவிதமாக மழை பெய்யத்தொடங்கியது.சிறிது சிறிது நேரமாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.பஸ்நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது.
மாலை 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியதால் பள்ளி சென்ற மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பள்ளி மாலை நேரம் முடிந்ததும் மாணவ- மாணவிகள் நனைந்து கொண்டே பஸ் நிலையம் வந்தனர். மழை காரணமாக பஸ்கள் சற்று தாமதமாக வந்ததால் பஸ்பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கேத்தி லவ்டேல் ரெயில்நிலையங்கள் இடையே மரங்கள் சாய்ந்து ரெயில் பாதையில் விழுந்ததாலும். மழை காரணமாகவும் சுற்றுலாப்பயணிகளின் நலனைக்கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் போக்குவரத்தை இன்று ஒருநாள் மட்டும் ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் கடந்த ஓரு வாரத்திற்கு முன்புவரை கனமழை பெய்தது. தற்போது மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.
மழை காரணமாக ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் பூமிக்குள் இறங்கி வடியத் தொடங்கி வருவதால் பல இடங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் மண்சரிவும், பூமியில் விரிசல்கள் ஏற்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி, நடுமலை, சோலையார், கருமலை, உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மண்சரிவும் பூமி விரிசலும் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
பொள்ளச்சி -வால்பாறை சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. தற்போது அதனை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வால்பாறையில் பாரதியார் பல்கலைகழக கலை அறிவியல் கல்லூரி தற்காலிக முகாமில் தங்க வைகப்பட்டுள்ள 95 பேர்களை பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது-
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே, கனமழை பெய்து வருகிறது. கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த கனமழையில் வால்பாறை நகரம் வாழைத்தோட்டம் ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதியில் வெள்ளம் புகுந்ததன் காரணமாக சுமார் 50 வீடுகளும்,டோபி காலனி ஒட்டியுள்ள ஆற்றுப்பகுதயில் 30வீடுகளும், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா மற்றும் காமராஜர் நகர் அருகிலுள்ள ஆற்றுப்பகுதியில் 70 வீடுகளும், எம்.ஜி.ஆர் நகர் முதல் ஸ்டேன்மோர் ஒட்டியுள்ள ஆற்றுப் பகுதியில் 25வீடுகளும் பாதிப்படைந்தது.
அதில் குடியிருந்தவர்களில் சிலர் அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர். 30ஆண்கள், 45 பெண்கள், 20 சிறுவர்கள் என 95 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, வால்பாறை நகர பகுதியில் தற்காலிக முகாம்களாக அமைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி ஆகிய நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்கும், உணவு, உடை, போர்வைகள், குடிநீர், மற்றும் மருத்துவவசதி போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது.
கனமழையின் போது, வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் 38-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரங்கள் விழுந்தும், 27-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவும் ஏற்பட்டது. அவை உடனடியாக சரிசெய்யப்பட்டது.
9-வது கொண்டை ஊசி வளைவில் சாலையில் அடிப்பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பஸ்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாலைசீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது இருசக்கர வாகனங்களும், கார்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை - சாலக்குடி சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழக அரசு இயற்கை இடர்பாடுகளை திறம்பட கையாண்டு பொதுமக்களை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் போர்கால அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஹரிஹரன், சி.மகேந்திரன் எம்.பி., கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ,, மாவட்ட வருவாய் அலுவலர்துரை.ரவிச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.பாண்டியராஜன், பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், உதவி கலெக்டர் (பயிற்சி) சினேகா , நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் ஆண்டனி சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். #tamilnews
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வெள்ளம் புகுந்ததால் அங்கு இருந்த டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்தது. இதனால் டீசல் கிடைக்காமல் அரசு பஸ்களை இயக்க முடியவில்லை.
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு கனரக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வால்பாறையில் இருந்து சோலையாறு அணை வழியாக கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சாலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வால்பாறையில் போக்குவரத்து இயங்காததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
வால்பாறையில் நேற்று முதல் மழை ஓய்ந்தது. இதனால் வெள்ளம் வடிந்து வருகிறது. வால்பாறையில் வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வால்பாறை அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இதனால் வால்பாறை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை பெய்தது. இன்று காலையும் இந்த மழை நீடித்தது.
இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வால்பாறை சின்கோனா பகுதியில் 78 மில்லி மீட்டரும், சின்ன கல்லாரில் 82 மி.மீட்டரும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதியில் 42 மி.மீட்டரும், வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 44 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
கோவை பீளமேடு ஏர்போர்ட் பகுதியில் 3 மில்லி மீட்டரும், பொள்ளாச்சியில் 12 மி. மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மழை காரணமாக சோலையார் அணைக்கு வினாடிக்கு 4136.57 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து சேடல் பாதை வழியாக 2994.21 கன அடி தண்ணீ சேடல் பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.
சோலையார் மின் நிலையம் -2 இயக்கப்பட்டு 596.61 கன அடி தண்ணீர் கேரளாவிற்கு திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை தாண்டி 162.72 அடியாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் 100 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர் மட்டம் 92 அடியை எட்டியது.
மேலும் மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கியதால் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஆற்றில் வெள்ள பெருக்கு குறித்து வருவாய் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் நேற்று மழை பெய்தது. இரவில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளிர் வாட்டி வதைத்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழைபெய்து வருகிறது. கோவையில் லேசான மழை பெய்தது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மாதம் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் தேயிலை தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையார் அணை நிரம்பியது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது.
இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக மின் நிலையம் 2-க்கு வெளியேற்றப்படும் தண்ணீர் கேரள மாநிலத்திற்கு செல்கிறது.
இதே போல் பிரத்யேக வழியில் பரம்பிக்குளம் அணைக்கும் நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதியில் மழை ஓய்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இரவிலும் மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.
கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் பிறப்பித்துள்ளார். கோவையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஊட்டியில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அவர்கள் சாரல் மழையில் குடை பிடித்தவாறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். ஊட்டியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரல் மழையும் பெய்தது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் மற்றும் பெரியகல்லார் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த சிறுத்தைப்புலி மாலை மற்றும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்களையும் தாக்கி படுகாயப்படுத்தியது.
கடந்த மே மாதம் 25-ந் தேதி சத்யா(வயது10) என்ற சிறுமியையும், சிங்கோனா எஸ்டேட் பகுதியில் ஜூன் மாதம் 1-ந் தேதி சந்திரமதி (45) என்ற பெண் தொழிலாளியையும் தாக்கியது. ஜூன் 14-ந் தேதி சிங்கோனா எஸ்டேட் பகுதியில் மாதவி (35) என்ற இன்னொரு பெண் தொழிலாளியை கடித்துக் குதறியது. இவர்கள் அனைவரும் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் மற்றும் உயர் வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் கூண்டுகள் வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் கேமராவில் சிறுத்தைப்புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை. இந்தநிலையில் காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் கைலாசவதி என்ற பெண் தொழிலாளியை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.
இதனால் அப்பகுதி தொழிலாளர்கள் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களுடன் இணைந்து வால்பாறைநகர் பகுதியில் சாலைமறியல் போராட்டமும் நடத்தினர்.
இந்தநிலையில் சிங்கோனா எஸ்டேட் முதல்பிரிவு பகுதியில் மாதவி என்ற பெண் தொழிலாளியை சிறுத்தைப்புலி தாக்கிய இடத்திற்கு அருகில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். அந்த கூண்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிறுத்தைப் புலி சிக்கியது. இதனால் சிங்கோனா எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். வால்பாறை பகுதியை பொறுத்தவரை கடந்த 10 மாதங்களில் 10 குழந்தைகளை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றுள்ளது.
சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து தலைமையில் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர். இதை அறிந்த சிங்கோனா, வால்பாறை, காஞ்சமலை எஸ்டேட் பகுதி பொதுமக்கள் சிங்கோனாவில் குவிந்தனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கூண்டில் சிக்கியது 7 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலி ஆகும். இப்போது அதிநவீன கூண்டுகள் இருப்பதால் சிறுத்தைப்புலிக்கு மயக்க ஊசி செலுத்தவேண்டிய அவசியமில்லை. எனவே சிறுத்தைப்புலி சிக்கிய கூண்டையே அப்படியே லாரியில் ஏற்றி சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்றனர். பிடிபட்ட சிறுத்தைப்புலி நேற்று இரவு வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்