என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வால்பாறையில் மழை ஓய்ந்தது - முகாமில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்கள் வீடு திரும்பினர்
Byமாலை மலர்20 Aug 2018 9:50 AM GMT (Updated: 20 Aug 2018 9:50 AM GMT)
வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்த மழைநீர் வடிவ தொடங்கியதால் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பினார்கள்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வெள்ளம் புகுந்ததால் அங்கு இருந்த டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்தது. இதனால் டீசல் கிடைக்காமல் அரசு பஸ்களை இயக்க முடியவில்லை.
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு கனரக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வால்பாறையில் இருந்து சோலையாறு அணை வழியாக கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சாலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வால்பாறையில் போக்குவரத்து இயங்காததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
வால்பாறையில் நேற்று முதல் மழை ஓய்ந்தது. இதனால் வெள்ளம் வடிந்து வருகிறது. வால்பாறையில் வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வால்பாறை அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இதனால் வால்பாறை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வெள்ளம் புகுந்ததால் அங்கு இருந்த டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்தது. இதனால் டீசல் கிடைக்காமல் அரசு பஸ்களை இயக்க முடியவில்லை.
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு கனரக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வால்பாறையில் இருந்து சோலையாறு அணை வழியாக கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சாலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வால்பாறையில் போக்குவரத்து இயங்காததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
வால்பாறையில் நேற்று முதல் மழை ஓய்ந்தது. இதனால் வெள்ளம் வடிந்து வருகிறது. வால்பாறையில் வாழைத் தோட்டம், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வால்பாறை அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இதனால் வால்பாறை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X