search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transformer"

    • கறம்பக்குடி பேரூராட்சியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது
    • அரசு அலுவலகங்கள் மற்றும் சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பத்தாவது வார்டு உள்ளடக்கிய பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்தப் பகுதியில் தான் அரசு மருத்துவமனை காவல் நிலையம், துவக்கப்பள்ளி, 300க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் மசூதி ஆகியவை உள்ளன. இங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் போர்க்கால அடிப்படையில் புதிய மின்மாற்றியை அமைத்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான முருகேசன் தலைமை தாங்கினார். இதில் ஆத்மா கமிட்டி சேர்மன் முத்துகிருஷ்ணன், பத்தாவது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி, உதவி மின் பொறியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • தர்காவை சுற்றியுள்ள மின்மாற்றியை அகற்றி தரைவழி மின் கேபிள்கள் பதிக்க வேண்டும்.
    • விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு தினமும் ஆயிரகணக்கானோர் வருகின்றனர்.இந்த தர்காவை சுற்றியுள்ள மின்மாற்றியை அகற்றி தரைவழி மின் கேபிள் பதிப்பதற்காக பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன,

    இந்த நிலையில் அதன் சாத்தியகூறுகளை கண்டறிய ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நாகூர் தர்கா வருகை புரிந்து அந்த பகுதிகளை பார்வையிட்டார்.

    அவருடன் நாகை நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார், தமிழக அரசு அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் முஹம்மது பைசல், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹாமாலிம் மற்றும் நாகூர் தர்கா பிரசிடன்டு கலீபா சாஹிப் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வால் விரைவில் தர்காவை சுற்றி தரைவழி மின் கேபிள் பணி தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

    • திரவியநகர் கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் தென்னை மரம் ஒன்று அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மேல் விழுந்தது
    • வயல்வெளியில் சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ் பார்மர் சரி செய்யப்படாமல் உள்ளது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள திரவியநகர் கிராமத்தில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வீசிய பலத்த சூறைக்காற்றில் தென்னை மரம் ஒன்று அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மேல் விழுந்தது.

    மேலும் இதில் டிரான்ஸ் பார்மர் உட்பட 3 மின் கம்பங்கள் சாய்ந்தன.அப்போது மத்தாளம் பாறை மின்சார அலுவலகத்தில் புகார் செய்ததை அடுத்து ஒரு மாதம் கழித்து மூன்று மின்கம்பங்கள் புதிதாக மாற்றி தற்காலிக இனணப்பு கொடுத்திருந்தனர்.

    ஆனால் அதன் பிறகு இது வரை வயல்வெளியில் சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ் பார்மர் சரி செய்யப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொது மக்கள் பல முறை தொடர் கொண்டு புகார் அளித்தும் கண்டுகொள்ள வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ள 10 கிணறுகளில் தண்ணீர் இருந்தும் சரியான முறையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே மின்சாரத் துறை யினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றனர்
    • கறம்பக்குடி ஒன்றியத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி கண்ணுத்தோப்பு மற்றும் திருப்பக் கோவிலில் உள்ள டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைவதால் இப்பகுதியில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இது குறித்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையிடம் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின்படி எம்.எல்.ஏ., மின்சாரத்துரை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அப்பகுயில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகளை வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அவர் தொடங்கி வைத்தார்.மேலும் இருங்களன் விடுதி மற்றும் ராகியன்விடுதியில் பழுதான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை பார்வையிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியினை ஒதுக்கி கட்டிடத்தை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனுமான முத்துகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெற்றி வேந்தன், சமூக ஆர்வலரும் ஆசிரியருமான அப்பு வடக்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரமுத்து, அன்பழகன், பொன்னுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




    • பட்டணம்காத்தான் துணை மின் நிலையத்தில் அதிக திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்க சட்டமன்ற பொது நிறுவனக்குழு பரிந்துரைந்துள்ளது.
    • 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. (பூந்தமல்லி), தமிழரசி எம்.எல்.ஏ (மானாமதுரை) நாகைமாலி எம்.எல்.ஏ (கீழ்வேளுர்), பாலாஜி எம்.எல்.ஏ (திருப்போரூர்) ஆகியோர் முன்னிலையில் 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பொது நிறுவன குழு தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மூன்று சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, திறன்பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 15 பயனாளிகளுக்கு ரூ.1,70,888 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.30,108 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு இணை மானிய திட்டம் மானியம் ரூ.13,58,589 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 மதிப்பீட்டிலும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 3 பயனாளிகளுக்கு என மொத்தம் 35 பயனா ளிகளுக்கு ரூ.19.74 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவன குழு இணைச் செயலாளர் பாண்டியன், சார்பு செயலாளர் இந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாந்த ரவை ஊராட்சியில் கோரமண்டல் மின் ஆலை யினை பார்வையிட்டு உற்பத்தி திறன் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை பொது நிறுவன குழுவினர் பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து களிமண்குண்டு ஊராட்சியில் கடற்கரை ஓரமாக மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். பின்னர் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி யில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தை பார்வையிட்டு கூடுதல் கொள்ளளவு திறன் மின்மாற்றிகள் அமைக்க அறிவுறுத்தினர்.

    • மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
    • சேதமடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே, குன்னம் ஊராட்சி, பெரம்பூர் பாப்பாகுளம் பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மின்கம்பத்தை புதிதாக மாற்றி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார், மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து மின்சார வாரியம் சார்பில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில்ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார் மின்வாரிய உதவி மின் பொறியாளர் (சீர்காழி மேற்கு) சுமத்திரா, ஊர் பொதுமக்கள் எலக்ட்ரீசியன் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
    • மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் நடைபாதை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் நடப்பதற்கு இடையூறாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தவறி விழுந்து காயமடையும் அபாயம் நிலவுகிறது. இது மட்டுமின்றி பள்ளி கட்டிடத்தின் முன் பகுதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது. ஆனால் இதற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. எனவே மழைக்காலங்களில் அதனருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும், குடிநீர் குழாய்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும், மின்மாற்றியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
    • முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதும க்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் மற்றும் வடகரை ஊராட்சி திருப்பனையூர் ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக 2 மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். திருமருகல் நாகை கோட்ட பொறியாளர் சேகர், திருமருகல் உதவி மின் பொறியாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எரவாஞ்சேரி ரஜினிதேவி பாலதண்டாயுதம், வடகரை மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் மின் ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகம்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் 33/11 கேவி துணை மின் நிலையம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது கூடுதலாக மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேற்படி துணை மின் நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் திறன் மின்மாற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதற்கான நிகழ்ச்சி துணை மின் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மின்வாரிய நாகை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சசிதரன் தலைமை தாங்கினார். சீர்காழி கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடு துறை எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கூடுதல் திறன் மின்மாற்றியை இயக்கி வைத்து பேசினர்.

    தற்போது செம்பனார்–கோயில் பிரிவிற்குட்பட்ட கீழ்மாத்தூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், மேமாத்தூர் ஊராட்சி தலைவர் தெட்ஷிணாமூர்த்தி, மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மின்மாற்றியில் திடீர் தீ விபத்து நடந்தது.
    • மின்சாரம் தடைப்பட்டது

    கரூர்

    கந்தம்பாளையம் காந்தி நகர் பகுதி தீயணைப்புத் துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மின்மாற்றியில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று மின்மாற்றில் எரிந்து கொண்டிருந்த தீயை ரசாயன கலவை பவுடர் மூலம் அனைத்து கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்மாற்றியில் இருந்த பழுதை நீக்கி சீரமைத்தனர்."

    • அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை.
    • மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மின்சாரத்தை தடை செய்து மின்மாற்றியை சீரமைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர், பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்மாற்றி தொடர் மழையினால் பிடிமானம் இழந்து அருகே உள்ள சுவற்றின் மீது சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை, தகவல் அறிந்த பல்லடம் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் அந்தப் பகுதியில் மின்சாரத்தை தடை செய்து, உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மின்மாற்றியை சீரமைத்தனர்.

    மின்மாற்றி அருகே வீடுகள் எதுவும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.

    • ஆறுமுகநேரி பேயன்விளை ஐயன்நகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை இருந்து வந்தது. அங்கு புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
    • ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேயன்விளை ஐயன்நகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அங்கு புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் வழிகாட்டுதலில் ரூ.9.3 லட்சம் மதிப்பில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

    இதன் தொடக்க விழா ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் அ.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. உதவி மின் பொறியாளர் ஜெபஸ் சாம் முன்னிலை வகித்தார். போர்மேன் திரவியம் வரவேற்று பேசினார்.

    ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார். 8-வது வார்டு கவுன்சிலர் புனிதா சேகர், நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன், காமராஜ், அஜித், விஜய், ராஜன், மகாராஜன், முத்துசூர்யா, வனகார்த்திக், வேல் குமார், பேச்சிமுத்து, மாயாண்டி, மாரியப்பன், ராமமூர்த்தி, ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×