என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "transformer"
- கீரனூர் அருகே மின்மாற்றி சீரமைக்கபட்டது
- கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கீரனூர்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீரனூர்அருகே உள்ள குளத்தூர் கடை வீதியில் உள்ள மின்மாற்றியில் இடி விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமம் முழுவதும் இருளில்் மூழ்கியது. இதையடுத்து உடனடியாக கீரனூர் கோட்ட மின்வாரிய ஊழியர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து மின்சப்ளை செய்தனர். மேலும் இடி விழுந்து பழுதான மின்மாற்றியை ஊழியர்கள் சீரமைத்து முழுமையாக மின்சாரம் கிடைக்க செய்தனர்.
- பல லட்சம் மதிப்பிலான காப்பர் வயர், ட்ரான்ஸ்பார்மர் ஆயில் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் வந்த நிலையில் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமாரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் புதுவை மின்துறை சார்பில் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முழுவதும் முடிந்த நிலையில் மின்சார வயரை மட்டும் இணைக்கும் பணி மட்டும் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் அந்த புதிய டிரான்ஸ் பார்மரில் மர்ம நபர்கள் பல லட்சம் மதிப்பிலான காப்பர் வயர், ட்ரான்ஸ்பார்மர் ஆயில் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து மின்துறை இளநிலை பொறியாளர் செல்வராஜ் ரூ.3.65 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருட்டுபோனதாக வில்லியனூர் போலீசில் புகார்செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மின் மாற்றியை மின்சார வாரியம் தற்காலிகமாக வேறு இடத்தில் மாற்றம் செய்து வைத்தது.
- அந்த மின் மாற்றியில் இருந்து கொடுக்கப்பட்ட 1600 இணைப்புகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்காமல் பெருமளவில் மின் அழுத்தம் கிடைக்காத நிலைகள் ஏற்பட்டு வருகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சியில் 7-வது வார்டில் உள்ள ஊரணியில் கீழ்புறத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்மாற்றி இயங்கி வந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊரணியின் கீழ்புறம் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் மின்மாற்றி கீழே சரிந்து விழாமல் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை.
இருப்பினும் மின்மாற்றி கீழே விழும் நிலையில் இருந்து வந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் இடத்தை பார்வையிட்டு ஊராட்சியின் மூலமாக ஊரணியின் கீழ்புறம் உள்ள சுவரை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுத்திட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் ஒருசில குழப்பத்தால் அந்தபணிகள் தடை செய்யப்பட்டது. அதன்பின்பு மின்மாற்றி கீழே விழுந்து உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மின் மாற்றியை மின்சார வாரியம் தற்காலிகமாக வேறு இடத்தில் மாற்றம் செய்து வைத்தது.
இந்த மின்மாற்றியை தற்போது இடம் மாற்றம் செய்து வைத்துள்ளதால் அந்த மின் மாற்றியில் இருந்து கொடுக்கப்பட்ட 1600 இணைப்புகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்காமல் பெருமளவில் மின் அழுத்தம் கிடைக்காத நிலைகள் ஏற்பட்டு வருகிறது.
பலமுறை மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள், பீடி தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். எனவே மின்மாற்றியை ஏற்கனவே இருந்து வந்துள்ள இடத்தில் வைத்து ஆவுடையானூர் பகுதியில் மின் அழுத்தம் குறைவும், மின் வெட்டும் ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், மின்சார துறைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- மின்துறை என்ஜினீயரிடம் தி.மு.க. மனு
- மின் மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கோபால் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மின்துறை கண்காணிப்பு என்ஜினீயர் ஸ்ரீதரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர் வார்டுக்குட்பட்ட இந்திராகாந்தி நகர், ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில் ஏற்பட்ட மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை அறிந்த அப்போதைய
எம்.எல்.ஏ. சிவா குறைந்த மின்னழுத்தத்தை போக்க ராஜீவ்காந்தி நகரில் புதிய மின்மாற்றியை அமைத்தார்.
பின்னர், ஏற்பட்ட ஆட்சிமாற்றம் காரணமாக புதிய மின்மாற்றி இயக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. எந்த நோக்கத்திற்கு அங்கு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் மக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.
தற்போது கோடைகாலம் என்பதால் அதிகளவு குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஆகவே, மின் தேவையை கருத்தில் கொண்டு புதியதாக அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வராமல் இருக்கும் மின் மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட கண்காணிப்பு என்ஜினீயர் ஸ்ரீதர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, தி.மு.க. அவைத்தலைவர் ஆதிநாராயணன், மாணவர் அணி அமைப்பாளர் மணி மாறன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு , தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், வீரய்யன், ஸ்ரீதர், கிளைச் செயலாளர்கள் விஜயகுமார், சரவணன், முருகன், மூர்த்தி, பாக்கியராஜ், கோவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- ஏற்கனவே இருந்த 250 கிலோவாட் மின்மாற்றி அகற்றப்பட்டு புதிய 500 கிலோவாட் மின்மாற்றி அமைக்கப்பட்டது.
- புதிய மின்மாற்றியால் மின் நுகர்வோர்களுக்கு சீரான மின் வினியோகம் வழங்கப்படும்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்டம் நகர்ப்புற கோட்டத்தில் சந்திப்பு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் படி, நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி வழிகாட்டலில், ஏற்கனவே இருந்த 250 கிலோவாட் மின்மாற்றி அகற்றப்பட்டு மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தில் வருங்கால மின் நுகர்வோர் மின் நுகர்வை கருத்தில் கொண்டு புதிய 500 கிலோவாட் மின்மாற்றி அமைக்கப்பட்டது. ரூ.9 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் சன்னதி தெரு, கணேசபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு சீரான மின் வினியோகமும், புதிய மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்பு வழங்கினாலும் குறைந்த மின்னழுத்த குறைபாடு முற்றிலும் தவிர்க்கப்படும்.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், உதவி மின் பொறியாளர் உமா மகேஸ்வரி, ஆக்க முகவர்கள் அசோகன், சஷ்டிகுமார் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- புதிய டிரான்ஸ்பார்மரை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
பரமக்குடி நகர் தெற்கு பிரிவுக்கு உட்பட்ட பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர்.நகரில் மின்சார வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதை முருகேசன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, 30-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் மும்மூர்த்தி, கோட்ட செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி, உதவி செயற்பொறியாளர் (நகர்) கங்காதரன், உதவி மின் பொறியாளர் சத்தியேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
- சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் புகைப்படத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொரு ளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. களக்காடு ஒன்றியம், களக்காடு வட்டாரத் திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட செங்களாக்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள கட்டளை கிராமத்தில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சரியான மின்சார சேவை தேவை என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கட்டளை கிராமத்திற்கு மின்சார துறை அதிகாரிகள் உதவியுடன் புதியதாக மின் மாற்றி அமைத்து திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அதன் பின்பு சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் புகைப்படத்தையும், டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அலெக்ஸ் மற்றும் களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சுப்பிரமணியன், காங்கிரஸ் ஊடக பிரிவு ஸ்ரீதேவி மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- டிரான்ஸ்பார்மரின் மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.
- அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள்.
ஈரோடு:
ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு பகுதியில் நேற்று இரவு மின்சார வினியோகம் தடைபட்டு இருந்தது. இரவு 9 மணிஅளவில் அந்த பகுதியில் மின்சார வினியோகம் செய்யப்பட்டது.
அப்போது சம்பத் நகரில் இருந்து நாராயணவலசுக்கு செல்லும் வழியில் சாலையோரமாக உள்ள டிரான்ஸ்பார்மரின் உச்சியில் இணைப்பு கொடுக்கப்பட்ட மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். அவர்கள் டிரான்ஸ்பார்மருக்கு சிறிது தூரத்துக்கு முன்பே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர்.
மேலும் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி கீழே விழுந்ததால் அதன் அருகில் யாரும் செல்லவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு மின் இணைப்பு தடைபட்டதால் தீ தானாகவே அணைந்தது. இதனால் பெரும் அசம்பா–விதம் தவிர்க்கப்பட்டது.
அதன்பிறகு வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் அங்கிருந்து கடந்து சென்றார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
- உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்
சேலம்:
சேலம் தெற்கு மின் கோட்டம் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் கடந்த 4 மாதமாக உதவி பொறியாளராக பணிபுரிந்தவர் சுகவனம் (வயது 52). இவர் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் உட்பட்ட வெட்டுக்காட்டில் ஏற்கனவே புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வந்ததாக புகார் இருந்தது.
இது தொடர்பான புகாருக்கு இவருக்கு முன் பணியில் இருந்த உதவி பொறியாளர் பவ்யா மீது குற்றம் சாட்டி காலம் கடத்தி வந்தார் . கடந்த 23-ந் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில் இனியும் தாமதிக்காமல் மின்மாற்றி பயன்பாட்டை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
இதை அடுத்து பணியை விரைந்து முடிக்க ஆட்டையாம்பட்டி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமாவுக்கு உத்தரவிடப்பட்டது. அவரது நடவடிக்கைக்கும் கீழ்படியாமல் பணியை நிறைவு செய்யவும் ஒத்துழைக்காமல் சுகவனம் மறுத்துவிட்டார். இதனால் இதர பிரிவு உதவி பொறியாளரை வைத்து மின்மாற்றி பணியை நிறைவு செய்து பயன்பாட்டு கொண்டுவரப்பட்டது .
இதன் அறிக்கை சேலம் மின் வட்டம் மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பப்பட்டது. இதை அடுத்து உதவி பொறியாளர் சுகவனம் , போர் மேன் கண்ணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்.
- 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
- தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது. இந்த மின்மாற்றியில் இருந்து சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மாற்றி கீழே கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் மின்கம்பத்தில் இருந்து மின் மாற்றியை கீழே தள்ளியதில் அதிலிருந்த சுமார் 200 லிட்டர் ஆயில் கீழே கொட்டி வீணாகியது. தொடர்ந்து மின் மாற்றியை கழற்றி அதனுள் இருந்த சுமார் 625 கிலோ தாமிர கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தியாகதுருகம் மின்சார வாரிய அதிகாரி ஒருவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகை யில், மர்ம நபர்கள் மின் மாற்றியில் இருந்த தாமிர கம்பிகளை திருடி சென்ற தால் மின் மோட்டார் களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்கும் வரை அருகில் உள்ள மின் மாற்றிகளுக்கு விவசாயமின் இணைப்பை பிரித்து வழங்க நடவடிக்கை என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- பெண் மயில் ஒன்று டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு இறந்து விட்டது.
- வெள்ளகோவில் கால்நடை மருத்துவ அலுவலர் மயிலை பிரேதப் பரிசோதனை செய்த அடக்கம் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் கச்சேரி வலசு பகுதியில் நேற்று பெண் மயில் ஒன்று டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு இறந்து விட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகராஜ் ,வனத்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், நில வருவாய் அலுவலர்களுக்கு தகவல் பகொடுத்தார். பிறகு வெள்ளகோவில் கால்நடை மருத்துவ அலுவலர் பகலவன் மயிலை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு கச்சேரி வலசு பகுதியிலேயே மயிலை அடக்கம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்