search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transfer"

    • வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்ற வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்களில் வாரச்சந்தை அமைக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையத்தை விரி வாக்கம் செய்து புனர மைக்கும் நிலையில் வாரச் சந்தை கூடும் இடத்தை தற்காலிகமாக பட்டினம் காத்தான் பகுதிக்கு நகராட்சி மாற்றியுள்ளது.

    ராமநாதபுரம் நகரில் செயல்பட வேண்டிய வாரச் சந்தை தற்போது நகர் எல்லையை தாண்டி இருப்பதால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாக மும், நகராட்சியும் பொது மக்களிடம் கருத்து கேட்டு மாற்று இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்க ளில் வாரச்சந்தை அமைக்க லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் பணியாற்றும் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்த் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில் பிரபு நல்லூர் போலீஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்பு பட்டியலில் இருந்த விநாயகம் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அதேபோல் காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் ஸ்ரீதேவிமங்களம்-தெரணிபாளையம் மின் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் இணைப்புகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
    • பெரம்பலூர் செயற்பொறியாளர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம் பாடாலூர் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உப கோட்டம், சிறுகனூர் பிரிவிற்கும், இதேபோல் தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை லால்குடி கோட்டம், கல்லக்குடி உபகோட்டம் புள்ளம்பாடி பிரிவிற்கும் மின்வட்ட சீரமைப்பு காரணமாக வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உபகோட்டம், சிறுகனூர் பிரிவிற்கு ஸ்ரீதேவிமங்களம் மின்பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளையும், தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை புள்ளம்பாடி பிரிவிற்கும் நேற்று முன்தினம் முதல் மாற்றம் செயப்பட்டுள்ளது. எனவே மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் பயனாளிகள் சிறுகனூர் பிரிவு அலுவலகத்தையும், தெரணிபாளையம் மின் பகிர்மான மின் பயனாளிகள் புள்ளம்பாடி பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும், என்று பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:-

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலராக பணியாற் றிய மார்டின் ராஜன் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பணியிடத்திற்கும், தொண்டி தனி வட்டாட்சியர் அலகு 2-ல் பணியாற்றிய ஸ்ரீதரன் ராமநாதபுரம் வட்டாட்சியராகவும், முதுகு ளத்தூர் தனி வட்டாட்சியராக பணியாற்றிய தென்னரசு ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியராகவும்,

    பரமக்குடி தனித்துணை வட்டாட்சியர் அலுவலக பணியாற்றிய காதர் மைதீன் தனி வட்டாட்சியராக ஆதிதிராவிடர் நலப்பிரிவிற் கும், பரமக்குடி தனி வட்டாட்சியராக பணியாற் றிய சடையாண்டி முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும், முதுகுளத்தூர் தேர்தல் தனி துணை வட்டாட்சியர் சாந்தி ஆதிதிராவிடர் நலப்பிரிவிற்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன் மணி, தனி வட் டாட்சியர் அலகு-2 பிரிவிற்கும்,

    ராமநாதபுரம் தனி வட்டாட்சியர் ஜமால் முகம்மது ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக் குழு அலுவலராக வும், கடலாடி முன்னாள் வட்டாட்சியர் பரமசிவம் ராம–நாதபுரம் உதவி மேலாளர் டாஸ்மாக் லிமிடெட் பிரி–விற்கும், முன்னாள் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர் முக உதவியாளர் தனி வட் டாட்சியராக அலகு 4-ல் பணியாற்றிய முருகவேலு ராமநாதபுரம் உதவி ஆணையர் (ஆயம்) அலுவலக மேலாளராகவும், பரமக் குடி தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) இந்து அறநிலையத்துறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் கழக தலைமை உதவியாளராக பணியாற்றிய சத்திய பாமா பரமக்குடி தனி வட்டாட்சியர் (இந்து அற–நிலையத்துறை) நியமிக் கப்பட்டுள்ளனர். இந்த உத்த–ரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.

    இந்த உத்தரவு குறித்து விடுப்பு விண்ணப்பமோ, முறையீடோ ஏற்றுக் கொள் ளப்படமாட்டாது. பணி நியமனம் பெற்றவர் புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 10 பேர் இணை இயக்குனர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • சுல்தானா சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்தில் 10 பேர் இணை இயக்குனர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த சுல்தானா சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது.
    • பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்

    கடந்த வாரம், 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித்துறையில் கடந்த மாதம் 26ந்தேதி, பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் உத்தரவு வெளியானது. மொத்தம் 23 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்களில், 6 பேருக்கு மீண்டும் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    பல்லடம் பி.டி.ஓ., ரமேஷ், அவிநாசி ஒன்றியத்துக்கும், அங்கிருந்த லீலாவதி காங்கயத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். குடிமங்கலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்ட பியூலா எப்சிபாய் பல்லடத்துக்கும் பல்லடத்துக்கு மாற்றப்பட்டிருந்த பிரியா கலெக்டர் அலுவலக (வளர்ச்சி) மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

    கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு மேலாளர் மகேந்திரன் குடிமங்கலம் பி.டி.ஓ.,வாகவும், காங்கயம் பி.டி.ஓ., ராகவேந்திரன் வெள்ளகோவிலுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ளார்.

    • நகராட்சி துறை நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்.
    • மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன் நியமனம்.

    சென்னை:

    தமிழகத்தில் முக்கிய துறைகளின் செயலாளர்களை பணியிடம் மாற்றி தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * நகராட்சி துறை நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்.

    * உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம்.

    * மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம்.

    * பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமனம்.

    * மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன் நியமனம்.

    * உணவு வழங்கல் துறை இயக்குனராக அண்ணாதுரை நியமனம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வந்த லதா தெர்மல் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் புதியம்புத்தூருக்கும், கடம்பூர் எஸ்.ஐ. சேட்டை நாதன் முறப்பநாடு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 20 சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வந்த லதா தெர்மல் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இவருக்கு பதிலாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அனுசியா தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தெர்மல்நகருக்கும், கட்டுப்பாட்டு அறை எஸ்.ஐ. கணேசன் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவுக்கும், சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் புதியம்புத்தூருக்கும், கடம்பூர் எஸ்.ஐ. சேட்டை நாதன் முறப்பநாடு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 20 சப்-இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    • சமயபுரம் கோவிலுக்கு வந்த தம்பதியிடம் அத்துமீறிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் மாற்றம் செய்யப்பட்டனர்
    • திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் அதிரடி உத்தரவு

    மண்ணச்சநல்லூர்,

    தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டுத் தலங்களில் முதன்மைத் தலமாக விளங்கக்கூடியது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி மற்றும் முக்கிய திருவிழா காலங்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் இந்த விடுதிகளில் இரவு தங்கி அதிகாலை அம்மனை தரிசிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் அமாவாசை தினத்தன்று வெளியூரில் இருந்து வந்திருந்த தம்பதியினர் கோவில் அருகிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது சமயபுரம் போலீசார் ஒவ்வொரு விடுதிக்கும் சென்று சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.அப்போது ஒரு விடுதியில் தங்கி இருந்த தம்பதியினரிடம் போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் கணவரை போலீசார் சரமாரியாக தாக்கியும் உள்ளனர். இதுகுறித்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் உண்மை தன்மையை அறிய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த விசாரணையில் போலீசார் தம்பதியினரிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என தெரிய வந்தது.

    இதனையடுத்து சமயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், போலீஸ்காரர் குமரேசன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், திருமேனி என்பவர் பெரம்பலூர் மாவட்டத்திற்கும், செயலரசு என்பவர் அரியலூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பிறப்பித்துள்ளார். இது சமயபுரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி மாவட்டத்தில் 4 உதவி கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
    • தமிழகம் முழுவதும் 25 இடங்களில் உதவி கலெக்டர் இடமாற்றம்

    திருச்சி,

    திருச்சி உதவி கலெக்டராக பணியாற்றி வரும் கோ. தவச் செல்வத்துக்கு பதிலாக மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரா.பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று லால்குடி உதவி கலெக்டர் வைத்தியநாதனுக்கு பதிலாக நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவசுப்பிரமணியனும், முசிறி உதவி கலெக்டர் மாதவனுக்கு பதிலாக சென்னை கன்னியாகுமரி தொழில்நுட்பத் திட்டம் மறு பகிர்மான அலுவலர் (ராஜன்) என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்ரீரங்கத்தில் காலியாக உள்ள உதவி கலெக்டர் பணியிடத்திற்கு கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்துள்ளார். இதேபோன்று தமிழக முழுவதும் மொத்தம் 25 இடங்களில் உதவி கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

    • ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது.
    • இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் பழு டைந்த பேருந்து நிலைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு, கீழ்தளத்தில் பயணி கள் நிழற்குடை, பேருந்து தள மேடை வசதிகளும், மேல் தளத்தில் வணிக வளாகம், சிறு வியாபாரக் கடைகள் மற்றும் நடை மேடையுடன், ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடை பெற்று வந்த பேருந்து நிலைய கட்டுமானப்பணி கள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    வாழப்பாடி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயி லில், டாக்டர் அம்பேத்கர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகி யோரது முழு உருவ சிமெண்ட கான்கிரீட் சிலை கள் உள்ளன. தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் தான், நவீன ஈரடுக்கு பேருந்து நிலை யத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள் ளது.

    எனவே, இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது. இது குறித்து வாழப்பாடி தாசில்தார் தலைமையில் கடந்த மார்ச் 10–ந்தேதி அமைதிக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், சிலைகளை வேறு இடத்தில் மாற்றுவது குறித்து இது வரை இறுதி முடிவு எடுக்கப் படவில்லை.இதனையடுத்து, வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலை மையில், நேற்று மீண்டும் அனைத்துக்கட்சி நிர்வாகி கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், தேசிய நெடுஞ்சா லைத்துறை, நெடுஞ்சா லைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் த.மா.கா. வி.எம்.சொக்கலிங்கம், அ.தி.மு.க. என்.சிவக்குமார், தி.மு.க. சேட்டு ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முல்லைவாணன், காங்கிரஸ் எம்.கே.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதால் திறப்பு விழா நடத்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டியுள்ளதால், நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி பெற்று, கடலுார் பிரதான சாலையோரத்தில் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்க கட்டடத்திற்கு அருகில், 3 சிலைகளையும் மாற்றி அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ×