search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில் 4 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்
    X

    கோப்புபடம்

    திருப்பூர் மாநகரில் 4 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

    • காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் பணியாற்றும் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்த் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில் பிரபு நல்லூர் போலீஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்பு பட்டியலில் இருந்த விநாயகம் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அதேபோல் காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×