search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic"

    • தவுட்டுப்பாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
    • நீண்ட லாரிகளை இரவு நேரங்களில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரைக்கு சுமார் 360 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை அதிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் புதிய பாலம் வழியாக போலீஸ் செக் போஸ்ட் அருகே வந்தது.போலீஸ் செக்போஸ்ட் அருகே செல்லும் போது சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதால் போலீஸ் செக்போஸ்ட் அருகே அதிக நீளமான காற்றாலை விசிறி இறக்கையை நீளமான லாரியில் கொண்டு செல்லும் போது காற்றாலை விசிறி இறக்கையுடன் லாரி செல்ல முடியாமல் நீண்ட நேரம் தடுமாறிக் கொண்டு மிகவும் மெதுவாக சென்றது.அதன் காரணமாக மிகவும் நீளமான காற்றாலை இறக்கைகளை லாரிகளில் கொண்டு சென்றதால் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி ஆற்று பாலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து காற்றாலை விசிறி ரெக்கை கொண்டு செல்லும் லாரிக்கு பின்னால் வரிசையாக அணிவகுத்து மெதுவாக சென்றன.இதனால் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து பாலத்துறை மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கையை ஏற்றி செல்லும் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பகலில் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது. பகல் நேரங்களில் வரும்போது அனைத்து வாகனங்களும் நீண்ட நேரம் மெதுவாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளை இரவு 10 மணிக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரு நாளைக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் லங்கா கார்னர் பாலம் வழியாக காந்திபுரம் செல்கிறது.
    • போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    குனியமுத்தூர்

    கோவை உக்கடம், டவுன்ஹாலில் இருந்து காந்திபுரம் செல்லும் அனைத்து பஸ்களும் லங்கா கார்னர் பாலம் வழியாக செல்கிறது. அப்போது அந்த வாகனங்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு முன்பாகவே பயணிகளை இறக்கி விடுகின்றனர்.

    இதனால் லங்கா கார்னர் பாலம் அருகில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நிற்கின்றன.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ஒரு நாளைக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் உக்கடத்தில் இருந்து லங்கா கார்னர் பாலம் வழியாக காந்திபுரம் செல்கிறது.

    அப்படி செல்லும்போது பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லும் பயணிகளை லங்கா கார்னர் பாலம் அருகிலேயே நிறுத்தி இறக்கி விடுகின்றனர்.

    இதனால் அப்பக தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே லங்கா கார்னர் பாலம் அருகே பஸ்களை நிறுத்தாமல் ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்றால், அந்த பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்க முடியும். ெரயில் நிலையம், லங்கா கார்னர் பாலத்திற்கு இடையே அதிக தூரம் இல்லை.

    எனவே பொதுமக்கள் ரயில் நிலைய ஸ்டாப்பில் இறங்கி, பெரிய ஆஸ்பத்திரிக்கு சுலபமாக நடந்து செல்லாம். இல்லையெனில் உக்கடம், டவுன்ஹாலில் இருந்து வரும் பஸ்கள் லங்கா கார்னர் பாலத்தில் இடதுபுறம் திரும்பாமல் பெரிய ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்ட் சென்று வரலாம். அதன்பிறகு ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று அடையலாம்.

    பெரிய ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, திரும்ப 5 நிமிடம் ஆகும். ஆனால் பஸ் டிரைவர்கள் பெரிய ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் லங்கா ஹார்னர் பாலத்தில் இருந்தே இடதுபுறம் திரும்பி விடுகின்றனர். இதனால்தான் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நெடுஞ்சாலைத்துறையினர் இப்பாலத்தில் பராமரிப்பு பணிகளை செய்து பராமரித்து வருகின்றனர்.
    • ஒரு வழி பாதையாக மாற்றி இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் புறவழிச் சாலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் வழியாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. முக்கிய மான ஊர்களுக்கு செல்ல வேண்டிய மேம்பாலமாக உள்ளதால் இதில் ஏராளமான கனரக வாகனங்களும், பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்த பாலம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. அவ்வப்போது நெடுஞ்சா லைத்துறையினர் இப்பா லத்தில் பராமரிப்பு பணிகளை செய்து பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மாலை இந்த பாலத்தில் திடீரென ஒரு அடி வட்டத்தில் குழி ஏற்பட்டது.

    மேலும் அந்த குழியை சுற்றி இரண்டு அடி தூரத்திற்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக வாகனங்கள் செல்வதும் வருவதும் என உள்ளது. ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து உள்ள பாலம் என்ற நிலையில், ஒரு வழி பாதையாக மாற்றி இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் பொது மக்கள் , வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனை போக்குவரத்து போலீசார் சரி செய்து வருகின்றனர்.

    -உடனடியாக இந்த பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 நாட்களுக்கும் மேலாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • தமிழகம்-கேரளம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டி

    கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. கூடலூா்-பாட்டவயல் சாலையில் பாடந்தொரை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் தமிழகம்-கேரளம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு நிலையப் பணியாளா்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினா். இதையடுத்து 1 மணி நேரத்துக்குப் பிறகு வழக்கம்போல வாகனப் போக்குவரத்து தொடங்கியது.

    • பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
    • ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை.

    சென்னையில் முக்கிய பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்தையே தடுமாற வைத்துள்ளது.

    தொழில் நகரமான அம்பத்தூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்துள்ள போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி.

    இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க சாலைகளின் ஒரு பக்கம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கத்தில் தனியார் கியாஸ் நிறுவனத்துக்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகிவிட்டன. சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது.

    கள்ளிக்குப்பம், கடப்பா சாலை, மதனங்குப்பம் சாலை, கருக்கு சாலை, பட்டரைவாக்கம் சாலை, கொரட்டூர் சாலை, தொழிற்பேட்டை - திருவேற்காடு சாலை ஆகிய சாலைகள் படுமோசமாக காட்சி அளிக்கின்றன.

    லேசான தூறல் விழுந்தாலே இந்த பகுதி சேறும் சகதியுமாகி விடுகிறது. இந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.

    கலெக்டர் நகர் சந்திப்பு, இளங்கோ நகர் சந்திப்பு, மங்கல் ஏரி பார்க் சந்திப்பு ஆகிய பகுதிகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக கிடக்கின்றன. இந்த பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை. சில இடங்களில் நிரப்புவதற்கு மண்கூட இல்லை.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "ஓடை தோண்டும்போது ஒரு லாரி மண்ணை ரூ.2 ஆயிரம் விலைக்கு விற்று விடுகிறார்கள். இதில் அரசியல்வாதிகள் உடந்தையாக இருக்கிறார்கள். குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும், கால்வாய் கரைகள் கட்டப்பட்ட பிறகும் மூடுவதற்கு போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால் அரை குறையாக மூடி போடுகிறார்கள். மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது" என்றார்கள். சில இடங்களில் பணிகள் முடிந்தும் சாலையை சீர மைக்கவில்லை. இவ்வளவு முக்கியமான பகுதியில் சாலைகளை மாதக்கணக்கில் இப்படி போட்டிருப்பது சரி தானா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    குறிப்பிட்ட அளவு தூரத்துக்கு பணிகள் முடிந்ததும் அந்த பகுதியில் சாலைகளை சீரமைத்து விட்டு அடுத்தக்கட்டமாக தொடரலாமே என்கிறார்கள் பொது மக்கள்.

    திரு.வி.க.நகரில் இருந்து மூலக்கடை வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. கூவத்தில் கொண்டு இணைக்க பிருந்தா தியேட்டர் அருகே பணிகள் நடக்கிறது. மாதக்கணக்கில் நடக்கும் இந்த பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கி உள்ளது.

    5 நிமிடங்களில் திரு.வி.க. நகருக்கு செல்லக்கூடியவர்கள் சந்து பொந்துகளில் நுழைந்து நெரிசலில் சிக்கி படாதபாடு பட்டு சுமார் ஒரு மணி நேரமாகிறது. நெரிசல் மிகுந்த சாலையால், மாலை நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    கோடம்பாக்கம் ஆற்காடு சாலை மெட்ரோ ரெயில் பணிகளால் ஏற்கனவே மேடு பள்ளங்களாக கிடக்கிறது. இதற்கிடையில் உட்புற பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டதால் பாத சாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சுமார் 3 வருடங்களாக சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

    மெயின் ரோடு மட்டுமில்லாமல் உட்புற சாலைகளையும் குண்டும் குழியுமாக்கி பணிகளை முடிக்காமல் போட்டு இருப்பதால் குடியிருப்பு வாசிகள் தெருச்சாலைகள் வழியாக மெயின் ரோட்டுக்கு வர சிரமப்படுகிறார்கள். மெயின் ரோட்டிலும் மெட்ரோ பணிகள் நடப்பதால் போக்குவரத்து சுற்றி சுற்றி விடப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த சிறு மழையில் கூட காந்தி ரோடு, முரளி கிருஷ்ணாநகர் மெயின் ரோடு முழுவதும் சகதி மற்றும் குளம்போல் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.

    சில சாலைகளின் நடு பகுதியிலேயே தோண்டி கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடப்பதால் அந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் கூட செல்வது சிரமமாக இருப்பதாக கூறினார்கள்.

    வளசரவாக்கம் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதும் பெரும்பாலும் அனைத்து ரோடுகளிலும் மெட்ரோ வாட்டர், பாதாள சாக்கடை இணைப்புகளுக்காக ஓடைகள் தோண்டப்பட்டன. சில பகுதிகளில் பணிகள் முடிந்தும் முறையாக மூடப்படாததால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலைகளின் நடுவே ராட்சத தூண்கள் அமைக்கப்படுவதால் போரூரில் இருந்து கோடம்பாக்கம், வடபழனி செல்லும் கனரக வாகனங்கள் அம்பேத்கர் சிலை, கே.கே.நநகர், வளசர வாக்கம் பகுதிகளில் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    அதேநேரம் வளசர வாக்கம், மேட்டுக்குப்பம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் உட்புற சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ள இரு சக்கர வாகனங்கள், கார்கள் அந்த பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    பரங்கிமலை - மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலையின் நடுவே தூண்கள் அமைக்கப்படுவதால் இரு பக்கமும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்காக குறுகிய பாதைகள் உள்ளன.

    இந்த பாதைகளை தார் போட்டு சீரமைத்து கொடுக்காததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேடவாக்கம் கூட்டு ரோடு அருகில் சாலை இருந்த அடையாளமே இல்லாமல் செம்மண் பாதையாக குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்களில் சிக்குகிறார்கள்.

    சோழிங்கநல்லூர், சிறுசேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலர் இந்த வழிகளில் இரவு நேரத்தில் வருவது வழக்கம். ஒரு பக்கம் பணிகள் நடந்தாலும் இன்னொரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் சாலைகளை அமைத்து கொடுப்பது நல்லது.

    • கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கூடலூா் - கோழிக்கோடு சாலை பொன்வயல் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

    தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா். இதனால், கூடலூரிலிருந்து கேரள மாநிலம் செல்லும் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதேபோல செம்பாலா பகுதியிலும் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீராக்கினா். 

    • போக்குவரத்து நெரிசலை தடுக்க நிரந்தரமாக ஒரு போலீஸ்காரரை நியமிக்க வேண்டும்
    • கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையிலும், பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி முன்னிலையிலும் நடந்தது.

    கூட்டத்தில் அரவேணு பஜார் நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நிரந்தரமாக ஒரு போலீஸ்காரரை நியமிக்க வேண்டும், மார்க்கெட், பஸ்நிலையத்தில் திரியும் கால்நடைகளின் உரிமையாள ர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,கோத்தகிரி சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பல மாதங்களாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும், கோத்தகிரி மார்க்கெட் முதல் காமராஜர் சதுக்கம் வரை நடைபாதை அருகில் உள்ள தடுப்பு கம்பிகளை அகற்றி, அங்கு இரண்டு சக்கர வாகனம் நிறுத்த அனுமதிக்க வேண்டும்,நகரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தெரு விளக்குகளும் சரியாக பராமரிக்க வேண்டும், ராம்சந்து முதல் சக்திமலை செல்லும் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், இணை செயலாளர் கண்மணி, கூடுதல் செயலாளர் பீட்டர், ஆலோசகர் பிரவின், முகமது இஸ்மாயில், திரைசா, லலிதா, யசோதா, ரோஸ்லின், பியூலா, விக்டோரியா, லெனின்மார்க்ஸ், சுரேஸ், விபின்குமார், ஜம்புலிங்கம், ஜார்ஜ்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைசெயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.

    • பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த கார் திடீரென எடுக்கப்பட்டதால் பேருந்து காரில் மோதுவது போல் சென்று நின்றது.
    • அங்கு நின்று கொண்டிருந்த ஆசாமிகள் சிலர் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு டவுன் பஸ் ஓட்டுனரை அடிக்கச் சென்றதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டார்.

    பரமத்தி வேலூர்:

    கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் கிளையிலிருந்து அரசு டவுன் பஸ் கரூரிலிருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அப்போது பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த கார் திடீரென எடுக்கப்பட்டதால் பேருந்து காரில் மோதுவது போல் சென்று நின்றது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த ஆசாமிகள் சிலர் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு டவுன் பஸ் ஓட்டுனரை அடிக்கச் சென்றதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டார்.

    இதனால் ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் ,கரூர் ,மதுரை, திண்டுக்கல் பகுதியிலிருந்து பரமத்தி வேலூருக்கு வரும் அனைத்து வாகனங்களும் ,நாமக்கல் ,சேலம், பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் அனைத்து வாகனங்களும், ஜேடர்பாளையம் செல்லும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் சமாதானம் செய்து அரசு பேருந்து ஓட்டுநரை பேருந்து எடுத்து காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். அரசு டவுன் பஸ் எடுக்கப்பட்டதால் அனைத்து வாகனங்களும் வரிசையாக சென்றன.

    அரசு டவுன் பஸ்சை நிறுத்திய போதை ஆசாமிகள் போலீசாரிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு டவுன் பஸ் நடு ரோட்டிலேயே நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நெடுகிலும் கார்கள், வேன்கள் தினமும் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் தினமும் நிறுத்தி வைக்கப் படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    எனவே காவல் துறையை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை ஓரத்தில் தினமும் நிறுத்தி வைக்கப்படும் அனைத்து வாகனங் களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் செய்ய வேண்டு மென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பசுமலை முதல் பழங்காநத்தம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல் கபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இதற்காக தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் இருந்து 125 எம்.எல்.டி.குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப் பட்டு வைகை அணை அருகே உள்ள பண்ணை பட்டியில் சுத்திகரிக்கப்பட உள்ளது. பின்னர் அங்கி ருந்து மதுரை நகருக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மதுரை நகரில் தற்போது நடை பெற்று வருகின்றன.

    அதன்படி திருப்ப ரங்குன்றம் அருகே யுள்ள மூலக்கரையில் இருந்து பழங்காநத்தம் வரை முதற்கட்டமாக பூமிக்கடி யில் ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இதற்காக மூலக்கரை -பழங்காநத்தம் வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இரவு, பகலாக பள்ளம் ேதாண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடக்கி றது. ஆனால் இந்தப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் எந்த வித முன்னேற்பாடு நட வடிக்கைகளும் எடுக்க வில்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் சாலை யில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    இந்தநிலையில் இன்று காலை குடிநீர் திட்டப்பணி களால் பழங்காநத்தம், ஆண்டாள்புரம், பசுமலை, மூலக்கரை, பைக்காரா, வசந்தநகர் ஆகிய பகுதி களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ், லாரிகள், கார், ஆட்டோ போன்றவை இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்றதை காண முடிந்தது. காலை 9 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இதனால் இந்த மார்க்கத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் கடும் அவதியடைந்தனர். அவசர வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள் ஆகியோர் கடும் அவதி யடைந்தனர். போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை. மாறாக போக்குவரத்து பாதிப்பு அதிகமானது.

    இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக குடிநீர் திட்டப்பணிகள் திருப்ப ரங்குன்றம் சாலையில் நடந்து வருகிறது. பணிகள் தொடங்கிய நாளில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது.

    இனி வரும் நாட்களி லாவது மேற்கண்ட பணி களை இரவில் மேற்கொள்ள வேண்டும். போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்ப டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளனர்.

    • திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் இன்று முதல் போக்குவரத்து தொடங்கியது
    • போக்குவரத்து நெரிசல் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    கே.கே.நகர், 

    திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை அகலப்படுத்தப்பட்டு சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. இது கடந்த சில நாட்களாக பயன் பாட்டிற்கு வராத நிலையில் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரியமங்கலம் போக்குவரத்து காவல்துறையினரின் சார்பில் இன்று முதல் சர்வீஸ் சாலை போக்குவரத்து துவங்கப்பட்டது. இதனால் சுப்பிரமணியபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைந்து பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்தனர் என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர்.
    • ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரப் பகுதி யில் விழுப்புரம் -புதுவை சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சாலை விதிகளை முறைப் படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர். அதில் ஒரு பகுதியாக சாலையின் நடுவே வாகனங்கள் சீராகவும், முறையாகவும் ,சென்றிட சாலை நடுவே பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வது தடுக்கப்பட்டது. போக்குவரத்து முறையாகவும் செல்ல வழி வகுத்தது. அப்படி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ரிப்ளெக்டர் தடுப்புகள் தற்பொழுது சிதிலமடைந்த நிலையில் சில இடங்களில் உடைந்து காணப்பட்டது. இவற்றை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். விழுப்புரம் மாவட்ட புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார்கள் விழுப்புரம் எஸ்.ஏ.டி. திரையரங்கம் முதல் விழுப்புரம் சிக்னல் வரை உள்ள ரிப்ளெக்ஸ் தடுப்புகளை பழுது பார்த்து ஒழுங்குப்படுத்தி விரைவில் ஒலிக்கும் பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. இப்பணியில் இரவு பகல் பாராமல் போக்குவரத்துக் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.நாளை பள்ளிகள் திறக்க இருப்பதால் அதற்கு முன்பாகவே ஒழுங்குபடுத்தும் விதமாக தற்பொழுது பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குமாரபாளையத்தில் கடைகளில் சரக்கு இறக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் உள்ள கடைகளுக்கு தினமும் சரக்குகள் கொண்டு வரும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

    இதனால் வாகன போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. சில சமயங்களில் கடைகளில் பொருட்கள் இறக்கும் வரை பல வாகனங்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. 

    இது போன்ற வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வந்து சரக்குகள் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×