search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூா் அருகே நடுரோட்டில் சாய்ந்த மரத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    X

    கூடலூா் அருகே நடுரோட்டில் சாய்ந்த மரத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    • கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கூடலூா் - கோழிக்கோடு சாலை பொன்வயல் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

    தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா். இதனால், கூடலூரிலிருந்து கேரள மாநிலம் செல்லும் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதேபோல செம்பாலா பகுதியிலும் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீராக்கினா்.

    Next Story
    ×