என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் தொடா் மழையால் போக்குவரத்து பாதிப்பு
- 10 நாட்களுக்கும் மேலாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
- தமிழகம்-கேரளம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி
கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. கூடலூா்-பாட்டவயல் சாலையில் பாடந்தொரை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் தமிழகம்-கேரளம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு நிலையப் பணியாளா்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினா். இதையடுத்து 1 மணி நேரத்துக்குப் பிறகு வழக்கம்போல வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
Next Story






