search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato"

    • தக்காளியை கொள்முதல் செய்து மானிய விலையில் கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்தது.
    • தக்காளி 10 ரூபாய்க்கு விற்று விவசாயிகள் நஷ்டம் அடையும்போது சமூகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த நான்கு மாதங்களாக எல்லா தரப்பிலும் உச்சரிக்கப்பட்ட பெயர் தக்காளி. தக்காளியின் விலை உயர்ந்து கிலோ 100 ரூபாய் தாண்டி விற்பனையாகியது, ஆனால் விவசாயிகளிடம் தக்காளி இல்லை.ஒரு சில விவசாயிகள் மட்டுமே அதனால் பயன் பெற்றனர்.

    தக்காளி விலை உயர்ந்த போது பொதுமக்களும், அரசியல்வாதிகளும் தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்று தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு மகாராஷ்டிராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், மத்திய பிரதேசத்திலிருந்தும் தக்காளியை கொள்முதல் செய்து மானிய விலையில் கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்தது.

    பொதுமக்களை காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தக்காளி விளைவித்த விவசாயிகள் கிலோ ரூபாய் 10க்கு விற்பதால் மிகக் கடுமையாக நஷ்டத்தில் உள்ளார்கள். விவசாயிகள் நஷ்டப்படும் போது மத்திய,மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    தக்காளியை மட்டுமல்ல அனைத்து விவசாய பொருட்களுக்குமான இந்த கோரிக்கை தொடர்ச்சியை நிறைவேற்றப்படாமல் இருந்து கொண்டே இருக்கிறது. தக்காளி 100 ரூபாய்க்கு விற்ற போது கவலைப்பட்ட சமூகம் தக்காளி 10 ரூபாய்க்கு விற்று விவசாயிகள் நஷ்டம் அடையும்போது இந்த சமூகம் கண்டு கொள்ளாமல் இருப்பது விவசாயிகளுக்கு கடுமையான வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுமக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்து கொடுக்கும் அரசு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து தக்காளியை கொள்முதல் செய்யாமல் இருப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது.விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.தற்போது விவசாயிகள் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள்.

    எனவே தமிழ்நாடு அரசு தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.20 விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்து, விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்வது என்பது தெரிந்தே தற்கொலை செய்வதற்கு சமமானது. ஏனென்றால் விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருளுக்கு, அவர்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது. தக்காளியோ, வெங்காயமோ, விலை உயர்ந்தால் உடனே மத்திய, மாநில அரசுகள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விலை உயராமல் கட்டுப்படுத்துகின்றன.

    தக்காளி விலை உயர்ந்து விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் நியாயமான விலை கிடைத்த போது அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் என அத்தனை பேரும் குடி முழுகி போய்விட்டதாக, குதித்தார்கள். அதே தக்காளியின் விலை இன்று அதல பாதாளத்தில் உள்ளது. இன்று அதே அரசும், அமைச்சர்களும் எங்கே போனார்கள்.

    தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்த போது வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி கூட்டுறவுத்துறை மற்றும் ரேசன் கடைகளில் நியாயமான விலைக்கு தக்காளி விற்ற அரசு, இன்று விவசாயிகளிடம் அதே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்து ஏன் ரேசன் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.

    நுகர்வோர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் அரசு, விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கூடாதா. தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்ற விளை பொருட்கள் சீரான விலையில் விற்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசுக்கு நுகர்வோரை காப்பாற்றுவதில் உள்ள அக்கறை, விவசாயிகள் மீது துளி கூட இல்லை என்பதை இது காட்டுகிறது.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை உழவர் உழைப்பாளர் கட்சி வரவேற்கிறது. காரணம் ஜாதி, மத வேறுபாடுகள் களையப்படும். எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வு மேலோங்கும், உதாரணமாக ஒரு ஊரில் பல சாதியினர் இருப்பார்கள். ஆனால் வெளியில் செல்லும்போது நான் இந்த ஊர்காரன் என்று தான் சொல்வார்கள்.

    இந்த சாதிக்காரன் என்று சொல்ல மாட்டார்கள். அது போல் இனி தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா என்று சொல்லாமல் இந்தியா என்ற எண்ணம் மேல் ஓங்குவதற்கு இது வழிவகுக்கும். இதனால் இந்தியா மென்மேலும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.
    • தக்காளி விலை சரிந்து பழையநிலைக்கு திரும்புவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை சரியத்தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் கடந்த மாதத்தில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. அதிகபட்சமாக சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200வரை விற்கப் பட்டது.

    இந்நிலையில் தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.

    தக்காளி வரத்து பழைய நிலைக்கு வந்து உள்ளதால் அதன் விலையும் வேகமாக குறைந்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை சரிந்து பழையநிலைக்கு திரும்புவதால் இல்லத்த ரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
    • மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    போரூர்:

    தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.200வரை விற்கப்பட்டது.

    இதனால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியை குறைந்த அளவே பயன்படுத்தும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டனர்.மேலும் தக்காளி விலை உயர்வு காரணமாக பல ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி ரசம் ஆகியவை அதிரடியாக நிறுத்தப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 55 முதல் 60 லாரிகள் வரை தினசரி தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்தமாதம் மழையால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து 25 லாரிகளாக குறைந்ததால் விலை திடீரென அதிகரித்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

    இதனால் கடந்த வாரத்தில் தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. இந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 43 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. இதனால் தக்காளியின் விலை மேலும் சரிந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அரியலூரில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது குறைந்து வருகிறது
    • தக்காளி விலை குறைந்து வருவதையொட்டி பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது

    அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளிகளை விற்க நடவடிக்கை எடுத்தது. இருந்த போதிலும் தரமான தக்காளி கிடைக்காமலும், விலை அதிகமாக இருந்ததாலும் இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் அரியலூரில் கடந்த ஒரு வாரமாக தக்காளியின் வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அரியலூர் வாரச்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.

    சிறிய அளவிலான தக்காளிகளை வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் வைத்து விற்பனை செய்தனர். இதேபோல் ரூ.150-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் படிப்படியாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று அரியலூரில் பெய்த லேசான மலையில் வாரச்சந்தையில் மழை நீர் தேங்கி வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும் பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்த படி காய்கறிகளை வாங்கி சென்றனர்.

    • காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50, விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50, கத்தரிக்காய் ரூ.55, பீர்க்கங்காய் ரூ.50,பெரிய வெங்காயம் ரூ.25 ,சின்ன வெங்காயம் ரூ. 55, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.60, புடலங்காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.200, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.60, பச்சை மிளகாய் ரூ.80, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையானது.
    • தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது.

    சேலம்:

    சேலம் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வரை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்க ளுக்கு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையா னது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளி வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்க ளில் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் தக்காளியை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். 

    • சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்துள்ளது.

    கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 3 நாட்களில் வருகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தையான மதனபள்ளியில் இருந்து சந்தைகளுக்கு அதிக அளவில் தக்காளி வருவதால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் சித்தூர் மாவட்டத்திற்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து சந்தைகளில் இருந்தும் தினமும் சுமார் 35 முதல் 40 லாரிகள் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் தமிழகத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது.
    • வெளிநாட்டில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது.

    இந்நிலையில், நேபாளத்தில் இருந்து 10 டன் தக்காளியை தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் செய்துள்ளது. அந்த தக்காளி, இன்றும், நாளையும் உத்தரபிரதேசத்தில் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

    வெளிநாட்டில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும்.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை சரிந்து வருகிறது.

    வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். விலை உச்சத்தில் இருந்தபோது 20 முதல் 30 லாரிகள் என்ற அளவிலேயே தக்காளி வரத்து இருந்தன.

    இப்போது தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கடந்த 2 நாட்களாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது.

    மேலும் தக்காளி வரத்தும் கடந்த சில நாட்களாக சராசரியாக 35 லாரிகளாக வரத் தொடங்கியது.

    இதற்கிடையே இன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 40 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. விலை அதிகரிப்புக்கு பிறகு கடந்த ஒரு மாதத்துக்கு பின்னர் தக்காளி வரத்து 40 லாரியாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் தக்காளி விலை மேலும் குறைந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.200 வரை சென்று உச்சம் தொட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை மேலும் படிப்படியாக குறைந்து வீழ்ச்சி அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200 ஐ தொட்டது.
    • வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70- ஆக குறைந்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. வட மாநிலங்களில் ஏற்பட்ட பெருமழை காரணமாகவும், உள்ளூரில் விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களாலும் தொடர்ந்து காய்கறியின் விலை அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200 ஐ தொட்டது. இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் தொடர்ந்து படிப்படியாக தக்காளி விலை குறைய தொடங்கியது. வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70- ஆக குறைந்தது.

    இந்நிலையில் இன்று தக்காளி விலை திடீரென கிலோ ரூ.30 வரையில் உயர்ந்தது. இன்று ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு பெட்டி தக்காளி ரூ.1,900-க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு பெட்டி ரூ.2,800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் இஞ்சி விலை ரூ.250 முதல் 280 வரையிலும், ஒரு கிலோ பல்லாரி ரூ.25 முதல் தரத்துக்கு ஏற்ப ரூ.35 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    • கடந்த மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் தக்காளி வரத்து பாதிக்கு மேல் குறைந்தது.
    • தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது.

    போரூர்:

    தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறது. கிலோ ரூ.200-வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் இறங்கி வருவதால் இல்லத்தரசிகள் இப்போது நிம்மதி அடைந்து உள்ளனர்.

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வழக்கமாக 60 லாரிகளுக்கு மேல் தக்காளி வரும். கடந்த மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் தக்காளி வரத்து பாதிக்கு மேல் குறைந்தது. 25 லாரிகளே சராசரியாக வந்தன. இதனால் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.

    தற்போது வடமாநிலங்களில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லாததாலும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் வடமாநில வியாபாரிகளின் தக்காளி கொள்முதல் குறைந்ததாலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது.

    இப்போது 30 லாரிகளுக்கு மேல் தக்காளி வரத்து நீடித்து வருகிறது. இன்று கோயம்பேடு சந்தைக்கு 34 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன.

    இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சுமார் 40 நாட்களை கடந்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தக்காளியின் விலை தற்போது குறைந்து அனைத்து இடங்களிலும் ரூ.100-க்கு கீழ் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    காய்கறிகளில் பீன்ஸ் கிலோ ரூ.70-க்கும், கேரட் ரூ.60க்கு விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கும் கீழ் உள்ளது. அவரைக்காய் ரூ.40, வெண்டைக்காய்-ரூ.30, உஜாலா கத்தரிக்காய்- ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது.

    • கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 'திடீர்' மழை மற்றும் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து பாதிக்கும் கீழ் குறைந்தால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை அரசு தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி 30 லாரிகளுக்கும் மேல் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளன. இதனால் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் சரியத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து உள்ளதால் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளிலும் தக்காளி விலை குறையத்தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த வாரத்தில் தக்காளி விலை இரட்டை சதம் அடித்து இருந்தது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி விலை குறையத்தொடங்கி விட்டன. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு குறைந்து உற்பத்தி சீராக நடந்து வருகிறது. எனவே இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரித்து விலை படிப்படியாக குறையவே வாய்ப்பு உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகிறது. மற்ற பச்சை காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கு கீழ் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×