search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

    • 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.
    • தக்காளி விலை சரிந்து பழையநிலைக்கு திரும்புவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை சரியத்தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் கடந்த மாதத்தில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. அதிகபட்சமாக சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200வரை விற்கப் பட்டது.

    இந்நிலையில் தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.

    தக்காளி வரத்து பழைய நிலைக்கு வந்து உள்ளதால் அதன் விலையும் வேகமாக குறைந்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை சரிந்து பழையநிலைக்கு திரும்புவதால் இல்லத்த ரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×