என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » toilet
நீங்கள் தேடியது "toilet"
சென்னை ஐகோர்ட்டிற்கு வழக்கு சம்பந்தமாக வந்த மாற்று திறனாளி ஒருவர் கழிவறை பற்றாக்குறையால் பாட்டிலில் சிறுநீர் கழித்தார். #chennaihighcourt
சென்னை:
சென்னையை சேர்ந்தவர் விஜயகுமார். மாற்று திறனாளியான இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறார். சக்கர நாற்காலியில் செல்லும் விஜயகுமார் நேற்று வழக்கு சம்பந்தமாக கோர்ட்டிற்கு வந்திருந்தார்.
முதல் தளத்தில் உள்ள கோர்ட்டில் நடந்த விசாரணையில் அவர் பங்கேற்ற போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டியதிருந்தது. உடனே அவர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். முதல் தளத்தில் கழிவறை இல்லாததால் அவர் பெரும் தவிப்புக்குள்ளானார்.
இதையடுத்து அவர் முதல் தளத்திலேயே மறைவான இடத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் சிறுநீர் கழித்தார். கீழ் தளத்தில் உள்ள கழிவறைக்கு அவரால் செல்ல முடியாததால் பாட்டிலிலேயே சிறுநீர் கழிக்கும் அவலம் அவருக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து விஜயகுமார் கூறும்போது, ஐகோர்ட்டில் உள்ள கழிவறையை மாற்று திறனாளியான என்னால் உபயோகப்படுத்த முடியவில்லை. இதனால் பாட்டிலில் சிறுநீர் கழிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. சக்கர நாற்காலியில் செல்லும் என்னை போன்ற மாற்று திறனாளிகளுக்கு ஐகோர்ட்டில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. கீழ் தளத்தில் தான் உள்ளது.
இதனால் ஐகோர்ட்டின் மற்ற பகுதிகளிலும் மாற்று திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.
இதுகுறித்து மாற்று திறனாளிகள் உரிமைகள் சங்கத்தை சேர்ந்த சுமிதா சதாசிவம் கூறும்போது, நான் ஐகோர்ட்டில் ஒரு நாள் முழுவதும் இருந்த போது கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டேன். இதனால் வீட்டிற்கு சென்று கழிவறையை பயன்படுத்தி விட்டு மீண்டும் கோர்ட்டுக்கு வந்தேன் என்றார்.
இதுபற்றி ஐகோர்ட்டு பதிவாளர் தேவநந்தன் கூறும் போது, பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தில் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. ஆனால் கட்டிடத்திற்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறோம். மாற்று திறனாளிகள் எந்த நுழைவு வாயிலிலும் சென்று வர வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் லிப்ட் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது என்றார். #chennaihighcourt
சென்னையை சேர்ந்தவர் விஜயகுமார். மாற்று திறனாளியான இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறார். சக்கர நாற்காலியில் செல்லும் விஜயகுமார் நேற்று வழக்கு சம்பந்தமாக கோர்ட்டிற்கு வந்திருந்தார்.
முதல் தளத்தில் உள்ள கோர்ட்டில் நடந்த விசாரணையில் அவர் பங்கேற்ற போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டியதிருந்தது. உடனே அவர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். முதல் தளத்தில் கழிவறை இல்லாததால் அவர் பெரும் தவிப்புக்குள்ளானார்.
இதையடுத்து அவர் முதல் தளத்திலேயே மறைவான இடத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் சிறுநீர் கழித்தார். கீழ் தளத்தில் உள்ள கழிவறைக்கு அவரால் செல்ல முடியாததால் பாட்டிலிலேயே சிறுநீர் கழிக்கும் அவலம் அவருக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து விஜயகுமார் கூறும்போது, ஐகோர்ட்டில் உள்ள கழிவறையை மாற்று திறனாளியான என்னால் உபயோகப்படுத்த முடியவில்லை. இதனால் பாட்டிலில் சிறுநீர் கழிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. சக்கர நாற்காலியில் செல்லும் என்னை போன்ற மாற்று திறனாளிகளுக்கு ஐகோர்ட்டில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. கீழ் தளத்தில் தான் உள்ளது.
இதனால் ஐகோர்ட்டின் மற்ற பகுதிகளிலும் மாற்று திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.
இதுகுறித்து மாற்று திறனாளிகள் உரிமைகள் சங்கத்தை சேர்ந்த சுமிதா சதாசிவம் கூறும்போது, நான் ஐகோர்ட்டில் ஒரு நாள் முழுவதும் இருந்த போது கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டேன். இதனால் வீட்டிற்கு சென்று கழிவறையை பயன்படுத்தி விட்டு மீண்டும் கோர்ட்டுக்கு வந்தேன் என்றார்.
இதுபற்றி ஐகோர்ட்டு பதிவாளர் தேவநந்தன் கூறும் போது, பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தில் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. ஆனால் கட்டிடத்திற்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறோம். மாற்று திறனாளிகள் எந்த நுழைவு வாயிலிலும் சென்று வர வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் லிப்ட் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது என்றார். #chennaihighcourt
தூக்க கலக்கத்தில் கழிப்பறை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். அவருடைய மகன் விஷ்வத் பாலா (வயது 4). பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுவன் விஷ்வத் பாலா, கழிப்பறைக்கு சென்றான். தூக்க கலக்கத்தில் இருந்த அவன், படிக்கட்டில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் சிறுவனின் பின்தலையில் அடிபட்டு அவன் அலறினான். உடனே சிறுவனின் தாயார் ஓடிவந்து, தலையில் லேசாகத்தான் அடிபட்டுள்ளது என்று நினைத்து தடவி விட்டுள்ளார். தைலமும் தேய்த்துவிட்டதாக தெரிகிறது. பின்னர் சிறுவனை தூங்க வைத்தார்.
காலையில் எழுந்து பார்த்த போது, சிறுவன் அசைவற்று கிடப்பதை கண்டு அவனுடைய தாயாரும், குடும்பத்தினரும் பதறினர். உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் விஷ்வத்பாலாவை டாக்டர் பரிசோதித்த போது, அவன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மகனை பிணக்கோலத்தில் பார்த்து அவனுடைய தாயாரும், குடும்பத்தினரும் கதறியது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் முதுகுளத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி, உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் அவனுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் ‘ராக்கி’ கட்டிய சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் 2,400 கழிவறைகளை கட்டி பரிசாக கொடுத்துள்ளனர். #RakshaBandhan
பெங்களூரு :
![](https://img.maalaimalar.com/InlineImage/201808280813400324_1_ral._L_styvpf.jpg)
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் ‘ராக்கி’ கட்டிய சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் கழிவறைகள் கட்டி பரிசாக கொடுத்துள்ளனர். பெலகாவி முழுவதும் இவ்வாறாக 2,400 ஆயிரம் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.
பெலகாவி மாவட்ட மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ராமசந்திரன் வீடுகளில் கழிவறைகள் கட்டுவதன் அவசியம் குறித்து பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இதில் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் சகோதரிகளுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்து பரிசாக அளிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இவருடைய முயற்சியின் நடவடிக்கையாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #RakshaBandhan
சகோதர-சகோதரிகள் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நேற்று முன்தினம் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தின்போது சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் மற்றும் பிற ஆண்களுக்கு சகோதர பாசத்துடன் அவர்களின் கைகளில் ‘ராக்கி’ கட்டுவார்கள். இதைத்தொடர்ந்து சகோதரிகளுக்கு, சகோதரர்கள் பரிசுகளை வழங்குவார்கள்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201808280813400324_1_ral._L_styvpf.jpg)
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் ‘ராக்கி’ கட்டிய சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் கழிவறைகள் கட்டி பரிசாக கொடுத்துள்ளனர். பெலகாவி முழுவதும் இவ்வாறாக 2,400 ஆயிரம் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.
பெலகாவி மாவட்ட மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ராமசந்திரன் வீடுகளில் கழிவறைகள் கட்டுவதன் அவசியம் குறித்து பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இதில் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் சகோதரிகளுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்து பரிசாக அளிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இவருடைய முயற்சியின் நடவடிக்கையாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #RakshaBandhan
திருப்பத்தூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுத்தம் செய்யப்படாததை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளயில் 850-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி கழிவறையை மாத கணக்கில் சுத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் கழிவறையில் நேப்கின் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.
இதனைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை ஷெலினா அங்கு இல்லை. இதனால் ஆசிரியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவிகள் கழிவறையில் தண்ணீர் வசதி உள்ளது. கழிவறையை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளயில் 850-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி கழிவறையை மாத கணக்கில் சுத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் கழிவறையில் நேப்கின் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.
இதனைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை ஷெலினா அங்கு இல்லை. இதனால் ஆசிரியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவிகள் கழிவறையில் தண்ணீர் வசதி உள்ளது. கழிவறையை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
கழிவறை, ஏசி, படுக்கை வசதியுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட அரசு சொகுசு பேருந்துக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. #TNSTC #SETC #TransportDept
சென்னை:
அரசு பஸ்களில் இருக்கை வசதிகள், கைபிடிகள், கூரைகள், பக்கவாட்டு கண்ணாடிகள் போன்றவை உடைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் பயணம் செய்ய தயங்கினர். இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு டீசல் செலவை ஈடுகட்ட முடியாத அளவுக்கு நஷ்டம் அதிகரித்து வந்தது.
புதிய பஸ்களை அறிமுகம் செய்தால் மட்டுமே போக்குவரத்து கழகத்துக்கு வருவாயை பெருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதலால் முதலில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கியது.
இதையடுத்து புதிய பஸ்களின் கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு நேற்று முதல் கட்டமாக 515 புதிய பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிய பஸ்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். தனியார் ஆம்னி பஸ்சுக்கு இணையான அனைத்து வசதிகளும் இவற்றில் உள்ளன.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807041137259485_1_busnew._L_styvpf.jpg)
புதிய பஸ்கள் 8 போக்குவரத்து கழகங்களுக்கும் பிரித்து ஒதுக்கப்பட்டன. அதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 40 பஸ்கள் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னையில் இருந்து 18 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் 6 நகரங்களுக்கு விடப்பட்டுள்ளது. புதிய சொகுசு பஸ்களுக்கு 3 வகையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. படுக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2 வீதம் கட்டணமும், குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.55-ம், அல்ட்ரா டீலக்ஸ் ஏ.சி இருக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.30-ம், ஏ.சி. வசதி அல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807041137259485_2_busneww._L_styvpf.jpg)
இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 100 புதிய பஸ்கள் ஒதுக்குகிறார்கள். அதில் 40 ஏ.சி. படுக்கை வசதி பஸ்களாகும், 50 அல்ட்ரா டீலக்ஸ் (யூ.டி) பஸ்களில், 10 கழிவறை வசதி கொண்ட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாகும். இவற்றில் முதல் கட்டமாக 40 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு மாதத்துக்குள் மீதமுள்ள பஸ்கள் வந்து விடும். நீண்டதூரம் செல்லக்கூடிய பஸ்களில் பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்தால் அதிகளவு பயணிப்பார்கள். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். #TNSTC #SETC #TransportDept
அரசு பஸ்களில் இருக்கை வசதிகள், கைபிடிகள், கூரைகள், பக்கவாட்டு கண்ணாடிகள் போன்றவை உடைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் பயணம் செய்ய தயங்கினர். இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு டீசல் செலவை ஈடுகட்ட முடியாத அளவுக்கு நஷ்டம் அதிகரித்து வந்தது.
புதிய பஸ்களை அறிமுகம் செய்தால் மட்டுமே போக்குவரத்து கழகத்துக்கு வருவாயை பெருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதலால் முதலில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கியது.
இதையடுத்து புதிய பஸ்களின் கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு நேற்று முதல் கட்டமாக 515 புதிய பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிய பஸ்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். தனியார் ஆம்னி பஸ்சுக்கு இணையான அனைத்து வசதிகளும் இவற்றில் உள்ளன.
படுக்கை வசதி, கழிப்பிட வசதி, சி.சி.டி.வி. கேமரா, சொகுசு இருக்கைகள், உள்ளிட்ட பல வசதிகள் பயணிகளுக்கும், டிரைவருக்கும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807041137259485_1_busnew._L_styvpf.jpg)
சென்னையில் இருந்து ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் 6 நகரங்களுக்கு விடப்பட்டுள்ளது. புதிய சொகுசு பஸ்களுக்கு 3 வகையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. படுக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2 வீதம் கட்டணமும், குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.55-ம், அல்ட்ரா டீலக்ஸ் ஏ.சி இருக்கை வசதி பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.30-ம், ஏ.சி. வசதி அல்லாத அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது.
சென்னை-மதுரை ஏ.சி வசதி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807041137259485_2_busneww._L_styvpf.jpg)
ஆகஸ்டு மாதத்துக்குள் மீதமுள்ள பஸ்கள் வந்து விடும். நீண்டதூரம் செல்லக்கூடிய பஸ்களில் பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்தால் அதிகளவு பயணிப்பார்கள். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். #TNSTC #SETC #TransportDept
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை இருப்பதை நிரூபிக்காவிட்டால் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Sitapur #submittoiletproof
லக்னோ:
இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் மின்வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை சீர்திருத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. குறிப்பாக திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களை உருவாக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201805261034197096_1_toiletin._L_styvpf.jpg)
அவ்வாறு அதிகாரிகள் சமர்ப்பிக்க மறுத்தால், மே மாதத்துக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Sitapur #submittoiletproof
இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் மின்வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை சீர்திருத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. குறிப்பாக திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களை உருவாக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை கட்டியதற்கான ஆதாரத்தையும், அந்த கழிவறை அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201805261034197096_1_toiletin._L_styvpf.jpg)
அவ்வாறு அதிகாரிகள் சமர்ப்பிக்க மறுத்தால், மே மாதத்துக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Sitapur #submittoiletproof
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)