search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதாரம்"

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
    • விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான கால்வாய்களில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள், வைகை ஆற்றில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்ப டுத்தவும், நிலத்தடி நீர்மட்ட த்தை மேம்ப டுத்தவும் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணி மதிப்பீட்டு தொகை ரூ.3060.00 லட்சங்கள் மதிப்பீட்டில் தமிழக அரசால் கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்ட மாநில நிதியின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.

    இந்த அணைக்கட்டு கட்டுவதால் கட்டிக்குளம், முத்தனேந்தல், மிளகனூர், துத்திக்குளம், கிருங்காக்கோட்டை, கீழமேல்குடி, கால்பிரிவு மற்றும் மானாமதுரை ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு, இதன் மூலம் 6316.10 ஏக்கர் பயன்பெறும். மேலும், இந்த அணைக்கட்டு கட்டப்படுவதால் பதினெட்டான்கோட்டை, வாகுடி மற்றும் செம்பராயனேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறி யாளர் ஏ.வி.பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், பூமிநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • இயக்குனர் கவிதா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதாரம்’.
    • இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கு திரைப்படம் 'ஆதாரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா நடித்திருக்கிறார். மேலும், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார் மற்றும் ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ஆதாரம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆதாரம்'.
    • இந்த படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கு திரைப்படம் 'ஆதாரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா நடித்திருக்கிறார். மேலும், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஆதாரம்

    மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார் மற்றும் ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    ஆதாரம்

    இந்நிலையில் 'ஆதாரம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பி.எஸ்.மித்ரன், ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா மற்றும் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • கடல் நீர் புகுந்து குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அங்கேயே கொட்டிச் செல்ல அறிவுறுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெய்தவாசல் கிராமத்தில் தனியார் சவுடு குவாரி கடந்த இரு தினங்களாக இயங்கி வருகிறது.

    அரசின் கனிம–வளத்துறை, மாசுக்–கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்ற நிலையில் ஊராட்சியின் அனுமதி பெறாமல் கிராம மக்களிடம் எவ்வித பேச்சுவார்த்தையையும் செய்யாமலும் கிராமத்தின் அருகிலேயே பல அடி ஆழத்திற்கு சவுடு மண் எடுத்து வருகின்றனராம்.

    இதனால் கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிய நிலையில் எஞ்சிய பகுதிகளிலும் கடல் நீர் புகுந்து குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இப்பகுதியில் சவுடு குவாரி இயங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நெய்தவாசல், புதுகுப்பம், கடைக்காடு, மடத்துக்குப்பம், வடபாதி, தென்பாதி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சவுடுமண் குவாரியை தடுத்து நிறுத்தி லாரி மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய ஹிட்டாச்சி இயந்திரங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அங்கேயே கொட்டிச் செல்லவும் அறிவுறுத்தினர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கிராமங்களை பாதுகாக்க கோரி தனியார் சவுடு குவாரியை தடை செய்ய வலியுறுத்த உள்ளதாகவும் அதுவரை சவுடு மண் குவாரி இயங்கக் கூடாது எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய பூம்புகார் போலீசார் மாவட்ட ஆட்சியரை கிராம மக்கள் சந்திக்கும் வரை மண் எடுக்க வேண்டாம் என சவுடு குவாரி தரப்பினரிடம் எச்சரித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரையும் கலைந்து போக அறிவுறுத்தினர். லாரி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை 7 கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×