search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resource"

    • கடல் நீர் புகுந்து குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அங்கேயே கொட்டிச் செல்ல அறிவுறுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெய்தவாசல் கிராமத்தில் தனியார் சவுடு குவாரி கடந்த இரு தினங்களாக இயங்கி வருகிறது.

    அரசின் கனிம–வளத்துறை, மாசுக்–கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்ற நிலையில் ஊராட்சியின் அனுமதி பெறாமல் கிராம மக்களிடம் எவ்வித பேச்சுவார்த்தையையும் செய்யாமலும் கிராமத்தின் அருகிலேயே பல அடி ஆழத்திற்கு சவுடு மண் எடுத்து வருகின்றனராம்.

    இதனால் கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிய நிலையில் எஞ்சிய பகுதிகளிலும் கடல் நீர் புகுந்து குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இப்பகுதியில் சவுடு குவாரி இயங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நெய்தவாசல், புதுகுப்பம், கடைக்காடு, மடத்துக்குப்பம், வடபாதி, தென்பாதி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சவுடுமண் குவாரியை தடுத்து நிறுத்தி லாரி மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய ஹிட்டாச்சி இயந்திரங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அங்கேயே கொட்டிச் செல்லவும் அறிவுறுத்தினர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கிராமங்களை பாதுகாக்க கோரி தனியார் சவுடு குவாரியை தடை செய்ய வலியுறுத்த உள்ளதாகவும் அதுவரை சவுடு மண் குவாரி இயங்கக் கூடாது எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய பூம்புகார் போலீசார் மாவட்ட ஆட்சியரை கிராம மக்கள் சந்திக்கும் வரை மண் எடுக்க வேண்டாம் என சவுடு குவாரி தரப்பினரிடம் எச்சரித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரையும் கலைந்து போக அறிவுறுத்தினர். லாரி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை 7 கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நிர்ணயிக்கப்படும் விலைக்கு குறைவாக ஏல விற்பனையை அனுமதிக்கக் கூடாது.
    • கடந்த 5 ஆண்டில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

    அவிநாசி :

    மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ்பொ ருளாதார மற்றும் புள்ளியியல் இயக்குனரகம் செயல்படுகிறது.

    இத்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் ராபி மற்றும் கரீப் பருவத்தில் விளைவிக்கப்பட்டு அரசின் ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும். அவ்வாறு நிர்ணயிக்கப்படும் விலைக்கு குறைவாக ஏல விற்பனையை அனுமதிக்கக் கூடாது. அதன்படி நிலக்கடலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.5,850 (கிலோவுக்கு, 58.50 ரூபாய்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலை, ஈரோடு மாவட்டத்தில் சத்தி, புளியம்பட்டி, நம்பியூர், கோபி, நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடா, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள் ளிட்ட பல இடங்களில் நிலக்கடலை சீசன் துவங்கியுள்ளது.

    கடந்தாண்டு நிலக்கடலைக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கும் அதிகமாகத்தான் விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கடலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒப்பிடுகையில், கடந்த, 2018 - 19ல் கிலோவுக்கு ரூ.48.90, 2019-20ல் ரூ.50.90 , 2020-21ல் ரூ.52.75 ,2021-22ல் ரூ. 55.50 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கடந்த 5 ஆண்டில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

    ×